Posts Tagged ‘train’

 

 

                       இன்னும்  நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள் எனக்கு . தூக்கம்  கூட கலையாமல் , அழ அழ என்னையும் என் தம்பியையும்  லாரியில் உள்ள பொருட்களோடு ஏற்றி ,ஐந்து வருடங்களாக அழகான என் பால்யத்தை கழித்த ஊரை விட்டு விட்டு , இன்னமும்

என் நெற்றியில் நிலைத்து நின்று விட்ட தழும்புகள் தந்த திண்ணையை விட்டு விட்டு , வீட்டு மாற்றி புது ஊருக்கு எங்களை  அப்பா அழைத்துச் சென்ற நாள் . வாடகை வீட்டில் குடியிருப்பவர்களால் மட்டுமே உணர முடியும் அந்த வலியும் , வேதனை உணர்வும் .வரும் வழி முழுதும் அழுது அடித்த வாடைக்காற்றில் அது காய்ந்தும் போய் வெறும் கேவலாக

நின்று விட்டிருந்தது .அன்று தான் நிகழ்ந்தது அவனுடனான என் .. எங்கள் முதல் சந்திப்பு .

 

அவனாகவே வந்து பொருட்களை இறக்கி வைக்க உதவி செய்தான் . எந்தப் பொருகளை எங்கே வைக்க வேண்டும் என்று  உத்தரவிட்டான் . ரைட் போலாம் போ போலாம் போ என லாரியை ரிவர்சில் போக உதவி செய்தான் . அப்பா பணம் தந்ததற்கு ,

இப்பொழுது வேண்டாம் தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன்  என்று சொல்லிவிட்டு , என் தம்பியின் கன்னத்தில் கிள்ளி  முத்தமிட்டுச் சென்று விட்டான் .

 

அப்பொழுது எனக்கு பத்து வயது என்றாலும் , யாராவது வீட்டு முகவரி எழுதச் சொன்னால் , தெரு பெயரை எழுதி விட்டு ,வீட்டு  எண்ணை யோசித்து திரு திருவென முழிக்கும் அளவிற்கு தான் நியாபக சக்தி எனக்கு . என் புதிய பள்ளியின் நேர்முகத் தேர்வில்  கூட அப்பாவின் பெயரை ஆங்கிலத்தில் எழுதச் சொன்னதற்கு யோசித்து யோசித்து கடைசியாக ரெங்காவுக்கு பதில் ரிங்கா  என்று தான் எழுதியிருந்தேன் . ஆனாலும் ” பயல் இன்னமும் ரைம்சை  மறக்கலை பாரேன்” என்று வெரி குட் சொல்லி சேர்த்துக் கொண்டார்கள் . இருந்தும் இன்னமும் அவன் முகம் மட்டும் தெளிவாக மனதில் இருக்கிறது  அழியாமல் ,  ஒரு பிடித்த கனவைப் போல .

Read the rest of this entry »

Tags: ,