உதடுகள் சில்லிட்டுப்போகும்
ஒரு முன்பனிக் காலத்தில்
உன் படுக்கையிலிருந்து
கனவு கலையாமல்
தூங்கும் தேவதையாய்
தூக்கிச் செல்வேன்
சிறகுகள் தந்து ..
———————————————-
Tags: காதற் சிறப்புரைத்தல, poem, she
காதல் கவிதைகள் அழகானவை
எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன
யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ
அவர்களைத் தவிர ..
————————————————————-
Tags: காதற் சிறப்புரைத்தல, dream, poem
உதடுகள் சில்லிட்டுப்போகும்
ஒரு முன்பனிக் காலத்தில்
உன் படுக்கையிலிருந்து
கனவு கலையாமல்
தூங்கும் தேவதையாய்
தூக்கிச் செல்வேன்
சிறகுகள் தந்து ..
———————————————-
Tags: காதற் சிறப்புரைத்தல, poem, she
தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகள்
முண்டங்களென தொங்கவிடப் பட்டிருக்கின்றன
குருதி சொட்ட
நகரத்தின் நுழைவாயிலில் …
வாலறுந்த நாய்கள் சிலவும்
முகம் சிதைந்த பலரும்
சண்டையிட்டபடி யிருக்கின்றனர்
சிவந்த ப்ரேதங்களுக்காக …
Tags: burning city, god, god's address, last day, last girl, poem
பயம்
நடுநிசியின்
தொலைதூரச் சத்தத்தில்
திடுக்கிட்டு விழிக்கையில் எல்லாம்
ஜன்னலின் வெளி
கசியும் நிழலாய்
காட்சியளிக்கத் தவறுவதே இல்லை
நினைவடுக்கின் புறப்பரப்பில்
அலைவுற்றிருக்கும்
சமீபத்தில் பார்த்திருந்த
சவத்தின் முகம் …
Tags: bus journey, childplay, deo, fear, loudspeaker, poem, share auto
ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு
இறைஞ்சி நிற்கிறேன்
உன் முன்னால் …
கோபம் கொண்ட பாவனையில்
விழி உயர்த்திப்
போதுமட்டும் ரசித்துவிட்டு ,
கைகுட்டையில் மீதம் வைத்திருந்த
மன்னிப்புகளில் ஒன்றை எடுத்து வீசிப்
புன்னகைக்கிறாய் ரகசியமாக ..
மீண்டுமொரு தவறு செய்யத் தயாராகிறேன் …
Tags: ஆதலினால் கவிதை ..., poem
தோழன் கூற்று
எங்கும் தெரிந்திருக்கும் நிலா போல்
இசை யெங்கும் நிறைந்திருக்கும் இவ்வூரில்
முடிவிலாப் பிரிவொன்றின் லயத்திலமைத்து
காற்றைப் பாடியிருக்கும் மௌனத்தின் மொழியாளே
அவன் காணாக் கண்களால் ஆவது யென்னவென
இமைகள் பூட்டாதே !
சற்றே வெளி வந்து பார் .
பௌர்ணமி யாகாது இரண்டாம் பிறை போலாவது
ஆழிலைக்கண் திறந்து சிறு பார்வை பாராயோ வென
சாரளத்துத் துளைகள் நோக்கி வதங்கி
முல்லைக் கொடிக ளெலாம் பூக்களாய்ப் புலம்பியிருக்கின்றன
உன் வீட்டு முற்றமெங்கும் .
Tags: poem
வேலை முடிந்த நாளொன்றின்
களைத்துப் போன
புறநகர் ரயில் பயணமொன்றில்
விழிப்பிற்கும் உறக்கத்திற்கும்
இடையேயான கனவொன்றிலிருந்து
பலவந்தமாய் மீள வேண்டியிருந்தது
தொங்குங் கம்பியைத்
தொலைத்து விடாமலிருக்க ..
தூக்கம் துரத்த
ஏதாவது யோசித்திருக்க
சிக்கினார்
அன்றும் கடவுள் கைகளிலே ..
Tags: god's office, poem
இருப்பிடம் குறித்த அடையாளங்கள்
ஏதுமற்ற அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
வேர்களின்றி
இலைகள் உதிரும் மரம் …
இச்சை போல்
உதிர்ந்து கொள்ளும் இலைகள்
காற்றில்லா பிரபஞ்சத்தில்
நீந்தி வருகின்றன
வாலில்லா பட்டங்களென ..
Tags: falling leaf, poem
நரகாசுரன் வேறு வேலையில்லாமல்
செத்துத் தொலைத்து விட்டான்
எத்தனை வெத்து வேலைகள்
நமக்கிங்கே …
தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக
ஒரு வாரமாய்
வீடு வராமல் உழைத்துக் கொண்டிருக்கும்
அலுவலகக் கணவன்கள் …
ஊரே உறங்கிய பின்
ஒவ்வொருவராய் கம்பளி போர்த்திக் கொண்டு
தான் போட்ட கோலத்தை
தெருவோடு ஒப்பிட்டுப் பார்த்து
பெருமூச்செறியும்
வீட்டு மனைவிகள் …
Tags: bavana, deepavali, jeyam ravi, poem