Posts Tagged ‘poem’

அழுது கொண்டிருந்தான்  ஆதாம்
இறைவன் காலடியில் …

என்னால் தானே இவ்வளவும் !

அவள் மீது கொண்ட நேசத்தால்
ஆப்பிள் கடிக்கப்போய் நாசமல்லவா இன்று …

அறிவைக் கொடுத்திருக்கலாம் ஆப்பிள்
அறிவியலையும் வளர்த்திருக்கலாம் !
ஆனால்  அதன் குட்டிகள்
குடித்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் குருதியல்லவா?

என்னால் உண்டான நரகத்தை
காண விரும்பவில்லை
நான் மட்டும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு
என்னைத் தொலைத்து விடு எங்கேனும் - இல்லை
சூன்யத்திலாவது புதைத்து விடு


விளையாட்டைத் தொடங்குவோமா
மீண்டும் ? இறைவன்.

ஆயிரம் மின்னல்கள்
ஒருசேர  ஜனித்து மடிந்தன
ஆதாமின் கண்களில் .

ஆடப்போகும் பரமபதத்தில்
இம்முறை  ஏணிகளில்லை,
சர்ப்பம் மட்டும் ஒன்றேயொன்று

முடிந்து போன ஆட்டத்தின் ஆறுதல் பரிசாக
தழும்புகள் உனக்கு மட்டும்
கூட்டைக் கிழித்துச் சிறகுவிரிக்கும்
பட்டுப்பூச்சி போல் பழையநினைவுகள் இன்றி
புதிதாகவே படைக்கப் படுவாள் ஏவாள்


இது ஒத்திகைதான்.
எல்லாமும் சரியாக நடந்தால்
ஒத்திகை நிஜமாகும் , நிஜம் ஒத்திகையாகும்.


என்ன சம்மதமா ?

முட்டாளாக மாட்டேன் மீண்டும் ஒருமுறை
தலையசைத்தான்

கடிகாரமுள் திசைமாற்றிச் சுற்றத் தொடங்கியது.

Read the rest of this entry »

Tags:

 

கடவுளான பின்

 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு

 

சும்மாயிருக்க முடியுமா ..?

 

 

 

என்னென்ன கடமைகள்

 

என்னென்ன கவலைகள்

 

என்னென்ன சலுகைகள்

 

 

 

பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …

 

 

நான் வாங்கும் சம்பளம் போல

 

உடனே தீர்ந்து போனது

 

ஒட்டு மொத்தக் காகிதமும்

 

 

 

மிட்டாய் வாங்கித் தருவதாக

 

வாக்குறுதி தந்து

 

என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து

 

கிழித்த காகிதங்கள்

 

கணத்தில் காணாமல் போயின

 

 

 

இன்றைக்கு இது போதும்

 

கடவுள் வேலை கடினமானதோ

 

களைத்துப்போனதே பட்டியலுக்கே

 

கண்கள் கெஞ்ச

 

துவங்கலாம் வேலை நாளையிலிருந்து

 

தூங்கிப்போனேன்

 

—————————————

Read the rest of this entry »

Tags: , , ,

 

 

எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்


எண்பத்தி ஒன்றவதாகத்


தேடிகொண்டிருக்கிறேன்


ஒரு பிச்சைக்காரனை


—————————


பரவாயில்லை அது


பிச்சைக்காரி என்ற போதிலும்


—————————


தலைகவசத்தை விட


தர்மமே தலை காக்குமாம்


வாகனம் வாங்கும் போது


கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம்


—————————–


அதனால்


என் இப்போதைய அவசரத் தேவை


தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம்


ஒரே பிச்சைப்பாத்திரம்.


 


விளம்பரமா கொடுக்கமுடியும்


தினசரிகளில் இதற்காக ..



கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன்

Read the rest of this entry »

Tags: , , ,

 

 

வெகுநாட்கள் வறுத்தெடுத்த வெயிலுக்குப்

பின்னொரு  மாலையில்

மழை பெய்திருந்த பொழுது

நாங்கள்

பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ளிருந்தோம்

 

அணிந்திருந்த உடையோ

முதுகின் மேல் பை கொண்டிருக்கும்

பொருட்கள் பற்றிய கவலையோ

தோல் காலணிகள் என்கிற ஜாக்கிரதை உணர்வோ 

இல்லை வேறெதோ ஒன்றோ 

மழையிலிருந்து விலகி இருக்கச் செய்திருந்தது

Read the rest of this entry »

Tags: , ,

 

 

தவறுதலாகக் கொட்டிவிட்ட 

தீக்குச்சிகளை

மீண்டும் அடுக்க நேர்கையில் எல்லாம்

பசைவாசம் ஆறாத குச்சிகளில் 

ஆங்காங்கே தோன்றி

இடறிவிடுகின்றன

பல்பக்குச்சிகளின் சுவடுகள் தேய்ந்து போன 

பாலகனின் விரல் ரேகைகள் . 

Tags: ,

 

 

அய்யாமாரே அம்மாமாரே

எல்லாந்த் தெரிஞ்ச ராசாமாரே

கொஞ்ச நேரம் நில்லுங்க …

எம்முன்னால இல்லாத

என்னாச அவரோட

கடைசியா நாம்பேசும்

இந்தப் புழுதி மேட்டுக் காதலோட 

மொத்தக் கதையும் கேட்டுப்புட்டு

எந்தப்பு இதில் என்னன்னு

எதாச்சும்  தெரிஞ்சதுன்னா

எங்கிட்ட  சொல்லுங்க ….

 

எல்லாப் பெண்டுக போலவே நானும்

எட்டுப்புள்ளிக் கோலம் போட்டும்

தாயமாடக் கோடு போட்டும்

ஒத்தக் காலில் நொண்டி ஆடி

கண்ணக் கட்டிப் பாண்டி பாடி

சந்தோசமாத் தான இருந்தேன் ..

 

எப்ப ஒன்னப் பாத்தேனோ

அப்பவே நான் தொலைஞ்சு போனேன்

உள்ளுக்குள்ள செவந்து போனேன் …

Read the rest of this entry »

Tags: , ,

 

காதல் கவிதைகள் அழகானவை

எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன

யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ

அவர்களைத் தவிர ..

 

————————————————————-

Read the rest of this entry »

Tags: , ,

 

 

உதடுகள் சில்லிட்டுப்போகும்

ஒரு முன்பனிக் காலத்தில்

உன் படுக்கையிலிருந்து

கனவு கலையாமல்

தூங்கும் தேவதையாய்

தூக்கிச் செல்வேன்

சிறகுகள் தந்து ..

 

———————————————- 

Read the rest of this entry »

Tags: , ,

 

 
 

தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகள்

முண்டங்களென  தொங்கவிடப் பட்டிருக்கின்றன

குருதி சொட்ட

நகரத்தின் நுழைவாயிலில் …

 

வாலறுந்த நாய்கள் சிலவும்

முகம் சிதைந்த பலரும்

சண்டையிட்டபடி யிருக்கின்றனர்

சிவந்த ப்ரேதங்களுக்காக    

Read the rest of this entry »

Tags: , , , , ,

பயம்

 

 

 

நடுநிசியின்

தொலைதூரச் சத்தத்தில்

திடுக்கிட்டு விழிக்கையில் எல்லாம்

ஜன்னலின் வெளி

கசியும் நிழலாய்

காட்சியளிக்கத் தவறுவதே இல்லை 

நினைவடுக்கின் புறப்பரப்பில்

அலைவுற்றிருக்கும்  

சமீபத்தில் பார்த்திருந்த 

சவத்தின் முகம் …

Read the rest of this entry »

Tags: , , , , , ,