நேற்று என்பது மீட்டப்பட்டுவிட்ட இசைக் குறிப்புகளைப் போல .. அழகானது எனினும் எவ்வளவு முயன்றாலும் எப்பொழுதுமே மீண்டும் மீட்ட முடியாதது.. மாறாக ஒரு அழகான மாலை நேரத்தில் ஒரு கோப்பைத் தேநீருடன் , பதிவு செய்யப்பட அதே இசைக் குறிப்புகளைக் கேட்டு ரசிக்கலாம் ..
ஆகஸ்ட் 4, 2003 … தேடலுடனும் , குறுகுறுப்புடனும் , புது இடம் , புதிய சூழ்நிலைகள் பற்றிய பயத்துடனும் வாழ்வின் ஒரு புதிய பயணத்தில் நுழைந்த நாள் …. எல்லாமே நட்பு பார்த்துக் கொண்டது .. இன்று எங்கள் பயணத்தின் ஏழாவது வருடம் துவங்குகிறது …
நாங்கள் மீட்டிய சில இசைக்குறிப்புகளை உங்களோடு சேர்ந்து ரசிக்க விரும்புகிறேன் …
நாங்களே இசையமைத்து இயக்கிய கல்லூரி பாடலுக்காக எழுதிய வரிகள் .. எங்கள் கல்லூரிக்காக ….
Read the rest of this entry »
Tags: :-), Chemical Engg, friends, memories, NITT, Senti, Tamil Mandram

நாங்க நாலு பேரு :-)
எங்களின் பாதைகள்
கிளைபிரிந்திருக்கலாம் …
எங்களுக்கான பயணங்கள்
வெவ்வேறு திசைகளில்
பணிக்கப்பட்டிருக்கலாம் …
இருந்தும்
நாட்கள் கழித்து மீண்டும்
சந்திக்கையிலெல்லாம்
கணநேர மௌனங்கள் சொல்லிடும்
நாங்கள் யார் என்பதை ….
நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் . ஆனால் உங்கள் நெருக்கமானவர்களை நாங்கள் நினைவுபடுத்தப் போவது மட்டும் உறுதி .
Read the rest of this entry »
Tags: Add new tag, coll, friends, friendship day, nadodigal

சில இடைவெளிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன . சில காரணங்களுக்கெனவே பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றோம். சில புரிதல்களுக்காகத் தான் வெயிலும் வருகிறது .
கடந்த நான்கு நாட்கள் பெங்களுரு மெட்ரோவில் .வெயில் படாத பிரதேசம் அது. கொஞ்சமேனும் வெயில் தலை காட்டினாலும் கூடவே மழை விரட்டி வருகிறது .
சென்னையின் வெயிலுக்கு பயந்து கொண்டு ஒரே ஒரு சட்டை மட்டும் அணிந்து கொண்டு ரயிலேறி , கே.ஆர்.புரத்தில் இறங்கிய பொழுது மணி அதிகாலை நான்கு. இறங்கியதுமே குளிர் ஒரு சட்டைக் கையின் வழியாக ஏறி மறுபுறம் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது.ஆனால் நன்றாகவே இருந்தது அந்தத் தழுவல். பாலா (உங்களுக்கு வழிப்போக்கன் பாலா ) ஜெர்கின் எல்லாம் போர்த்திக் கொண்டு , கடமை உணர்ச்சியுடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு (நான்கு மணி !!!) ஒரு செட் அப் ஆகத் தான் வந்திருந்தார்.
வீட்டுக்குப் போனதும் தனியாக மெத்தை எடுத்துப் போடுகிறார். போர்த்திக் கொள்ள நமீதா போர்வை குடுக்கிறார் .காலை எழுந்தால் பற்பசையோடு நிற்கிறார். இன்னொரு கையில் சூடாக ஹார்லிக்க்ஸ்.குளிக்க வெந்நீர் போடட்டுமா என்ற கேள்வி வேறு. வேண்டாமப்பா இந்தத் ‘தண்’ணீருக்கு மார்கழிவரை காத்திருக்க வேண்டும் சென்னையில்.எனக்கு இதுவே போதும். குளித்து விட்டு வந்தால் தேங்காய் சட்னி அரைத்து தோசை வேறு சுட்டு வைத்திருக்கிறார். டேய் நீ எல்லாம் ஒரு பேச்சுலரா ?? ஷேம் ஷேம் … அதாகப்பட்டது இந்தப் பாரா எதுக்காகன்னா ஒரு நல்ல குடும்ப இஸ்த்தன் தயார்.பெண்கள் அணுக வேண்டிய முகவரிக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும் .
Read the rest of this entry »
Tags: bangalore trip, birthday, friends, happy days