Posts Tagged ‘deepavali’

 

 

நரகாசுரன் வேறு வேலையில்லாமல்

செத்துத் தொலைத்து விட்டான்

எத்தனை வெத்து வேலைகள்

நமக்கிங்கே …

 

தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக

ஒரு வாரமாய்

வீடு வராமல் உழைத்துக் கொண்டிருக்கும்

அலுவலகக் கணவன்கள் …

 

ஊரே உறங்கிய பின்

ஒவ்வொருவராய் கம்பளி போர்த்திக் கொண்டு

தான் போட்ட கோலத்தை

தெருவோடு ஒப்பிட்டுப் பார்த்து

பெருமூச்செறியும்

வீட்டு மனைவிகள் …

Read the rest of this entry »

Tags: , , ,