Posts Tagged ‘coming soon’

சந்தியா காம்

தொலைதூரம் வந்துவிட்டேன். உன் நினைவுகளால் இனியும் என்னைத் துரத்த முடியாது.

அவதானிக்க முடியாத முகமூடி ஒன்றில் ஒளிந்திருக்கிறேன். இம்முறை உன்னால் என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது.

நான் வேறொரு பெயரிலிருக்கிறேன் . இருளில் இருந்து நீ பாடும் பாடல்கள் இனிமேல் என் முகவரி வந்தடையாது.

என் நாட்குறிப்பேடுகளை எரித்துவிட்டேன். உன் புகைப்படங்களைத் துரத்திவிட்டேன். கவிதைகளை அறவே தொடுவதில்லை. எப்படி வருவாய் என்னைச் சந்திக்க என் கனவில்?

மீண்டும் எழுத அமர்கிறேன். சாபம் கொண்ட வார்த்தைகள் உன்னை நோக்கியே பயணிக்கின்றன. தூரமும் , முகமூடியும் , முகவரி தொலைத்த என் புதுப்பெயரும் உன்னில் இருந்து தப்புவிக்க முடியாதென சப்தமில்லாமல் சிரிக்கிறது , எப்பொழுதும் என்னைப் பின்தொடர்ந்திருக்கும் உன் நிழல். எரிந்து போன நாட்குறிப்புகளின் சாம்பல், அறை முழுதும் நினைவுகளாய் பொழிகின்றன.

எப்பொழுதும் கதை எழுதும் என்னை , இம்முறை கதை எழுதுகின்றதோ என்ற ஐயத்துடன் புரண்டு கொண்டிருக்கிறேன் சந்தியா காலத்திற்குள்.

—————————————————————————-

 

 

Tags: ,

16
Nov

வெண்ணிலா

   Posted by: Rejovasan   in கதை நேரம்

தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,

பார்ந்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
……………………………………………………………………………..

நவம்பர் மாத மழையும், நள்ளிரவில் காயும் நிலவும், எனைச் சுற்றிலும் பொழியும் உன்னினைவுகளும் காத்திருப்பதை அசாதாரணமாக்குகின்றன. உறக்கம் கொள்ளாமல் போகின்ற இரவுகளில் எனக்கு நானே கதைகள் சொல்லிக்கொள்கிறேன் என்னைப் பற்றியும் , உன்னைப் பற்றியும் , நம்மைப் பற்றியும் …..  சொல்லிய கதைகளில்  ஒன்று சொல்லிக்கொள்ளாமலேயே உன்னைத் தேடிவந்துவிட, வேறு வழியில்லாமல் நானும் பின்தொடர்ந்திருக்கிறேன்.. ஒருவேளை இந்தக் கதையின் முடிவில் உனைக் கண்டு பிடிக்கவும்  கூடும்.

விரைவில் …

————————————————————————————-

Tags: , ,

 

எத்தனை அலை
வந்து சொல்லிச்சென்ற
பின்னும்,
மிச்சமிருக்கின்றன
கடலைப்பற்றிய கதைகள்,
உன்னைப் பற்றிய
என் கவிதைகளும்…

 

               - B’Morgan

 

                                         சொல்லப்படாத காதல் கதைகள் என்று எதுவும் கிடையாது .. இருந்தும் ஒவ்வொரு காதல் கதையும் புதியதே ..

 

 

 

விரைவில்   …

————————————————

Tags: , ,