Posts Tagged ‘’

 

பாவ னா

பார்க் காதே

பாவம் நான் (அடடே !)

 

 

நீலமும்

மஞ்சளும்

நிறங்களாகின்றன

விற்கிறேன் பீச்சில்

பஞ்சுமிட்டாய்  ..!

 

 

 

 

 

உலகத்திலே

பயங்கரமான ஆயுதம்

துப்பட்டா  !!!   (நம்பாட்டி பாருங்க காதலில் விழுந்தேன்)

 

 

 

 

 

 

காற்றுக்கு வலிக்கும்

கதவை சாத்து

எனக்கு  வலித்தால்

காற்றுக்கு சாத்து (ஆஹா !! பேஷ் பேஷ் !!)

 

 

 

 

 

 

 

 

மழை வருகையில்

வராது வானில் விண்மீன்

மழை வழிய

வா வெளியே (நெஜமாவே வேளச்சேரில வெள்ளம்ங்க )

 

 

டிஸ்கி :

 

            என்னங்க பண்ண .. இது வரைக்கும் சீரியஸ் ஆ இருபது குறுங்கவிதைகள் மூணு நெடுங்கவிதைகள் , ஆறு கதைகள்னு பதிவு பண்ணியாச்சு .. ம்ம்ஹ்ம்ம்ம் ..நான் தான் நெறைய தடவ படிச்சிருப்பேன் போல ..அதான் இந்த மொக்க கவிதைகள் .. ஒரே பீலிங்க்ஸ் ஆ இருக்குங்க (அடேய் இதுவும் மொக்கை இல்ல )

Tags: ,

ஒரு ஆறு மாசம் ஆகுதுங்க ..இந்த ப்ளோக் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சு . எங்கயோ  ஆரம்பிச்சு , அங்க இங்க link பிடிச்சு ஒரு ஏழெட்டு ப்ளோக் தவறாம பாக்கறது வழக்கம் ஆய்டுச்சு . (பேரெல்லாம் சொல்லனும்னு ஆசை தான் .. சொறிஞ்சு விடுறேன்னு நம்மளையும் சொல்லிட்டாங்கைன்னா ). எல்லாரையும் பார்த்து எனக்கும் ஆசை வந்து இந்த பட்டாம்பூச்சி விற்பவனையும் ஆரம்பிச்சாச்சு .தினமும் வரவேண்டியது . எதையாவது update பண்ண வேண்டியது. பத்து நிமிசத்துக்கு ஒருக்கா தொறந்து பார்த்து யாராவது பின்னூட்டம் போட்டு இருக்காங்களான்னு பாக்க வேண்டியது .(கள்ளிக் காட்டு இதிகாசமா எழுதிட்ட)

Read the rest of this entry »

Tags: