
கடவுளான பின்
கால் மேல் கால் போட்டுக்கொண்டு
சும்மாயிருக்க முடியுமா ..?
என்னென்ன கடமைகள்
என்னென்ன கவலைகள்
என்னென்ன சலுகைகள்
பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …
நான் வாங்கும் சம்பளம் போல
உடனே தீர்ந்து போனது
ஒட்டு மொத்தக் காகிதமும் …
மிட்டாய் வாங்கித் தருவதாக
வாக்குறுதி தந்து
என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து
கிழித்த காகிதங்கள்
கணத்தில் காணாமல் போயின …
இன்றைக்கு இது போதும்
கடவுள் வேலை கடினமானதோ
களைத்துப்போனதே பட்டியலுக்கே…
கண்கள் கெஞ்ச
துவங்கலாம் வேலை நாளையிலிருந்து
தூங்கிப்போனேன் …
—————————————
Read the rest of this entry »
Tags: கடவுள், கவிதை, பிச்சை, poem

எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்
எண்பத்தி ஒன்றவதாகத்
தேடிகொண்டிருக்கிறேன்
ஒரு பிச்சைக்காரனை …
—————————
பரவாயில்லை அது
பிச்சைக்காரி என்ற போதிலும் …
—————————
தலைகவசத்தை விட
தர்மமே தலை காக்குமாம் …
வாகனம் வாங்கும் போது
கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம் …
—————————–
அதனால் …
என் இப்போதைய அவசரத் தேவை
தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம் …
ஒரே பிச்சைப்பாத்திரம்.
விளம்பரமா கொடுக்கமுடியும்
தினசரிகளில் இதற்காக ..
கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன் …
Read the rest of this entry »
Tags: கடவுள், கவிதை, பிச்சை, poem