Posts Tagged ‘’

ஏவாள் தோட்டத்து ஆப்பிள்

என் நாட்களில் துயர்மிகு நாள் ஒன்றிற்கான குறியீடுகளை வரையறுத்துக் கொண்டிருக்கிறேன் .

வெகுகாலமாய் உன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க ஒப்புக் கொண்டதற்காக , உடன்பாட்டின் படி குட்டிச் சிறகு கொண்ட தேவதை ஒன்று என் செவிகளையும் கண்களையும் கொய்யும் வினாடியில் அழுதபடி விடியக்கூடும் அந்நாள்.

ஆளில்லாத மேம்பாலமொன்றில் தனியாக நடந்து கொண்டோ , மின் தூக்கியின் பக்கங்களெல்லாம் தனித்து வியாபித்திருக்கும் என் பிம்பங்களில் ஒன்றை, அடுத்த தளத்தில் கதவு திறக்கும்முன் அழிக்க முயன்று கொண்டோ இல்லை இவை எதுவுமில்லாமல் சாளரங்கள் மொத்தமும் இமைகள் மூடிக்கிடக்க, உன் புன்னகை ஒன்றின் நினைவு வெளிச்சத்தில் துயர்மிகு வரிகளை வாசித்துக் கொண்டிருக்கலாம் .

Read the rest of this entry »

Tags: , ,

 

 

       அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள்

       இழப்பை நான் உணரும் போது

       துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் 

                                              

       - பாப்லோ நெருடா

-                                                                                                                                                       

சந்தியா கொஞ்ச கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறாள் . என் உயிர் நீ .. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் என போராடுவதற்கு எதுவுமில்லை . எல்லாம் முடிந்து விட்டது என்ற நிதர்சனம் மனம் பூராவும் பரவிக் கிடக்கிறது . துடித்துக் கொண்டிருக்கும் அவள் உடலைப் பார்க்கும் போது உயிர் போவதே பரவா இல்லை என எல்லாருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் .

 

மணி மூன்றடித்தது . இன்னமும் அவள் நினைவு திரும்பவில்லை .போவதற்கு முன் ஒரு முறையாவது கண்ணைத் திறந்து பார்க்க மாட்டாளா என தான் அவள் அருகிலேயே உட்கார்ந்திருக்கிறேன்.

 

நேற்று தான் இவளைப் பெண் பார்க்கச் சென்றது போல் இருக்கிறது .

 

பார்த்ததுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது . யார் தான் வேண்டாம் என்பார்கள் இவளைப் போன்ற ஒருத்தியை . மிகவும் அமைதியாகவே என்னருகில் நின்றிருந்தாள் . கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் பால்கனியில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தூரத்திலிருந்த கோவிலொன்றில்  மணியடித்தது .

 

“என்னங்க எதுவுமே பேச மாட்டீங்களா நீங்க ??”

 

அவள் எவ்வளவு பேசுவாள் என்பது அப்பொழுது தெரியாமல் நான் கேட்டது . பைத்தியக்காரி . விட்டால் இரவு முழுவதும் கூட பேசிக் கொண்டேயிருப்பாள் . விரும்பிய இசை கூட சலித்துப்போகும் ஒரு காலத்திற்கு பிறகு . கொஞ்சம் கூட பொருள் , நோக்கம் எதுவுமில்லாமல் அவள் பேசுவது இன்றும் கூட சலித்ததே இல்லை .

 

 ” ஹேய்  பைத்தியக்காரி , ஒரே ஒரு முறை என்னைப் பார்த்து பேசேன் இப்பொழுது “

 

எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் மெதுவாக . நிச்சயம் அவளுக்கு இது கேட்டிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்திறந்து என்னைப் பார்க்கத் தான் போகிறாள்.அவள் முகத்தைப் பார்த்தேன் . கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் இருக்கிறாள் . அன்றும் கூட இதே போல் தான் இருந்தாள்.

 

“ஏதாவது பேசலாமே .. அதுக்கு தான பெரியவங்க தனியா அனுப்பிருக்காங்க . “

 

மெதுவாக தலையை மட்டும் அசைத்தாள்.மீண்டும் கொஞ்ச நேரம் மௌனம் .

 

“சரிங்க , நாம நெறைய பேசிட்டோம்ன்னு நெனைக்கறேன் .. அப்போ கீழ போகலாமா ” என இரண்டடி எடுத்து வைத்தேன் .

 

ம்ம்ஹீம் .. என வேகமாக மறுத்து தலையசைத்தாள். அந்த வெட்கம் கலந்த முகம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது . நின்று அவளையே பார்த்தேன் .

Read the rest of this entry »

Tags: , ,

 

காதல் கவிதைகள் அழகானவை

எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன

யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ

அவர்களைத் தவிர ..

 

————————————————————-

Read the rest of this entry »

Tags: , ,

 

 

உதடுகள் சில்லிட்டுப்போகும்

ஒரு முன்பனிக் காலத்தில்

உன் படுக்கையிலிருந்து

கனவு கலையாமல்

தூங்கும் தேவதையாய்

தூக்கிச் செல்வேன்

சிறகுகள் தந்து ..

 

———————————————- 

Read the rest of this entry »

Tags: , ,