Posts Tagged ‘ஆதலினால் கவிதை …’

            

 

மழைவாசமும்

மழலை வாசமும்

பிடிக்காதவர்கள் உண்டா

யாரேனும் இங்கே  ??

 

நீங்கள் பட்டியல் எடுப்பதாயிருந்தால்

விசாரிக்கத் தேவை இல்லை

என்னைப் பற்றி…

இருக்காது நிச்சயம்

என் பெயர் அதில் …

 

நாட்காட்டியுடன் 

நவம்பர் மாதத்திற்காக

காத்திருப்பவன் நானும் தான் …

 

அடுக்குமாடிக் குடியிருப்பில்

அடைக்கப்பட்டவர்களில்

ஒருவன் தான் என்றாலும்

நானொரு மழைப்பாடகன் என்பதில்

என்றுமே பெருமை உண்டெனக்கு …

 

அடைமழை பெய்யும் போது

அணைப்பதில் விருப்பம் சிலருக்கு

எட்ட நின்று ரசிப்பதில்

திருப்தி பலருக்கு …

 

உதடு குவித்து

முத்தம் தரப் பிடிக்கும்

சிலருக்கு

உள்ளங்கை காட்டி

முத்தம் வாங்கப் பிடிக்கும்

பலருக்கு …

 

மழையினில் நனைந்து

கொட்டும் ஒவ்வொரு துளியையும்

குருதியில் குழைத்து

மழையாகிடவே கனவெனக்கு..

 

எனது சில ஆயிர வினாடிகளுக்கு

தற்காலிக ஓய்வு தந்துவிட்ட

மாலை நேரம் அது

 

மெல்ல மழைநேரமாயும்

ஆகிக் கொண்டிருந்தது …

 

உதறிவிட்டாலும் சிதறியதுளிகள்

மீண்டும் சென்று மேகம் சேரும் …

 

உன் போலத்தானா

நானும் மழையே ..!

 

மழை தொட்டு

முத்தமிட்ட மண் கிளம்பும்

வாசம் போல்

என்னுள் சுவாசமாய் கலந்துவிட்ட

நம் நியாபகங்கள் …

 

எப்படி இருக்கிறாய்

என் பிரிய தோழி …

Read the rest of this entry »

Tags:

 

எல்லாரும் உறங்கிப்போன

இரண்டாம் சாமங்களின் இருண்ட பக்கங்களில்

விழித்தெழுந்து உலவத் துவங்குகின்றன

கரப்பான்கள்

 

காற்றின் அந்தரங்கப் பிரதேசங்களில்

தம் வாழ்வின் ரகசியங்களை

நீண்ட பெரு மீசையால்

துழாவியபடி இருக்கின்றன

Read the rest of this entry »

Tags:

1
Sep

முடிவிலி

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

 

ஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்

சுடும் கரை மணல் தொடுகையிலும் …

 

நிசப்த்தமான தெருக்களில்

நீண்ட தனி நடைகளிலும் …

 

மழை முடிந்த பின்

ஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …

 

கூட ஒட்டி வரும் தனிமையிலும்  

 

தேடிப்பார்க்கிறேன்

நாம் சந்தித்ததற்கான தடையங்கள்

ஏதேனும் உளதா என ..

Read the rest of this entry »

Tags:

  

 

 

யாமம் கூடிய சிறுபொழுதுகளிலும்

முன்பனி மூடிய பெரும்பொழுதுகளிலும்

ஆடித் திரியும் பறவைகளின் மேல்

கண்வைத்துக் கொண்டேயிருக்கிறது காலம் …

 

நூலிழை பிறழாமல் குறி தேடிச் சென்று

சிதைத்துச் சிதறடிக்கும்

வன்மம் கொண்ட தோட்டாக்கள் அதனிடம் ..

 

இளவெயிற் கதிர்களில் மிதக்கையிலோ

இணையுடன் கூடிச் சுகிக்கையிலோ 

நிழலினிற் பதுங்கிக் கிடக்கையிலோ

நித்திரைக் கனவினிற் தன்னை மறக்கையிலோ  

 

 

நினைவு பிறழ்ந்து தோட்டாவைத் தான்

பாய்சிடக் கூடுமென்று மிரட்டி

பேச்சுவார்த்தைக் கழைக்கிறது

பறவைகளை அது ..

 

தங்க இருக்கைகளைக் காட்டி

கழற்றித் தந்துவிடு இறகுகளை யெனக்

கேட்கிறதது ..

 

எதிர்த்துப் பேசும் பறவைகள்

வாயிலேயே சுடப்படுகின்றன

 

மீதமுள்ள பறவைகள்

இறகுகளைக் கழற்றித் தந்து விட்டு

இருக்கைகள் தந்த காலத்திற்கு

நன்றி சொல்லிக் கொண்டே ,

அமர்ந்தபடி

காலத்திற்கும் மென்றுகொண்டே யிருக்கின்றன

இறந்த பறவைகளின் சவங்களையும்

இணங்க மறுத்த மடத்தனங்களையும் .

Tags:

பாவம் என் வீட்டுக் கண்ணாடி.

 

ஏய்..

 

என்ன ?

 

ஒன்று சொல்ல வேண்டும்

உன்னிடம் .

 

என்ன சொல்லிவிடப் போகிறாய்

புதிதாக …

 

இல்லை இது புதிது தான்.

 

உண்மையாகவேவா

 

ஆம்

 

ஏமாற்றிவிடமாட்டாயே

சென்றமுறை போல் .

 

மாட்டேன் .

 

………………………………

 

கண்ணாடி மேல் சத்தியம் .

 

சரி சொல் .

 

தூக்கம் துரத்தும் அதிகாலை வேளையில்

எழுந்து ஓடத்துவங்குகிறேன் நான் …

 

எங்கே ???

 

தெரியாது .

 

எழுந்ததும் எதற்கோ கொஞ்சம்

பல்லைக் காட்ட வேண்டும்

 

எதாவது செய் – சில வினாடிகளாவது

சொட்ட வேண்டும் தலையில் தண்ணீர் ..

 

ஏன்  ???

 

தெரியாது .

 

பின் கண்ணாடியில்

கண்டுபிடிக்க வேண்டும்

என் பிம்பத்தை …

 

பாவம் என் வீட்டுக் கண்ணாடி

என் பிம்பம் பார்த்தே

கண் மங்கிப் போனது …

 

எத்தனை முறை சொல்வாய்

இதையே

தெரியுமெனக்கு ஏமாற்றுகிறாய்

நீயென்னை..

 

இனிமேல் தான் புதிது  .

Read the rest of this entry »

Tags:

ஓடிவிட்ட பல மாதங்களுக்குப் பின்னே

இருளின் நிழல் படிந்த

நகரின் முக்கியமில்லாத

ஏதோ ஒரு தெருவில்

சாலையின் எதிர்ப்புறத்தில்

அவளைச் சந்திக்க நேர்ந்தது

அல்லது அது அவளையொத்த

அடையாளங்களாகவும் இருக்கலாம்

கரைந்துக் கொண்டிருக்கும்

அந்நிழலைப் பார்த்திருந்த

அந்தப் பத்து வினாடிகளில்

காலத்தின் கொடிய கூர்

பற்சக்கரங்கள் போதியமட்டு மென்னை

நசுக்கி முடித்திருந்தன

வலி தாங்க மாட்டாமல்

தலை குனிந்து மீண்ட சமயத்தில்

மறுபடியும் காணாமல் போயிருந்தாள்

விரும்பி ஏற்றுக்கொண்ட

வெறுமை அப்பிய என் முகம் பார்த்து

ஜன்னலோரப் பேருந்திலிருந்து

கை காட்டிச் சிரித்தபடிச் செல்கிறது

சீருடை யணிந்த ஒரு குழந்தை

பதிலுக்குக் கைகாட்டிப் புன்னகைக்கிறேன்

நானும்

என்றேனும் ஒரு நாள்

நகரத்தின் ஏதோ ஒரு பக்கத்தில்

மீண்டும் உன்னைச் சந்திக்க நேரும்

அந்தப் பத்து வினாடிகள் வரும் வரை

என் நினைவுகளை விட்டு விலகி

இருப்பாயாக

Tags:

Page 3 of 3123