Posts Tagged ‘ஆதலினால் கவிதை …’

26
Sep

காரணி

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

 

பெருந்தாகங் கொண்ட

வருணனைக் கொவ்வாத 

விலங்கொன்று

எச்சில் சொட்டச் சொட்ட

எதிர்ப்பட்டிருக்கலாம் தெருமுனையில்

 

Read the rest of this entry »

Tags:

 

முன்னறிமுகமில்லாத தெருக்களே

தூண்டிலெனக் குத்தி இழுத்து

கண்களில் பாய்ச்சுகின்றன கவனத்தை

 

இறந்து போன

ஏதோ ஒரு இரவில்

இங்கு தானா வந்து போனது

 

அடைக்கப் பட்ட வாகனத்தில்

சென்றாலும்

கருப்பு பூசிய கண்ணாடியை

ஊடுருவிப் பார்க்கின்றன கண்கள்

Read the rest of this entry »

Tags:

இருள் மேவிய 

நேற்றைய நீள் இரவின்

கடிகாரம் காண முடியா

ஒரு தருணத்தில்

திறந்து வைத்த சாரளத்தின் வழி

தப்பியோடிக் கொண்டிருந்தன  

என் கவிதைகள்

Read the rest of this entry »

Tags:

கூடுகட்ட மரங்களற்று

குறைந்த பட்சம் புகை போக்கிகளும் காணாமல்

டிஷ் ஆண்டெனாக்கள் தேடி

நகர் நோக்கிப் பறந்தபடி இருக்கின்றன

காகங்கள்

 

கதை சொல்ல யாருமின்றி

உருக்குலைந்து திண்ணைகளோரம்

மூப்பேறிய குறு உரல்களில்

பாக்குடன் சேர்த்து

பழசையும் இடித்தபடி

வானம் பார்த்துக் கிடக்கின்றனர்

கதை சொல்லிப் பாட்டிகள்

Read the rest of this entry »

Tags:

தற்சமயம் நகரவாசியாகிவிட்ட

கிராமத்துத் தந்தை தன்

பிறவி நகரக் குழந்தையுடன்

புதிதாய் வாங்கிய அடுக்கு மாடி வீட்டில்

புதுமானைப் புகுவிழா கொண்டாடிய

மூன்றாம் நாள் ..

 

இறக்குமதி  வாசனைத் திரவியம்

ஊரே மணக்கும்

கர்வமாய்ச் சொன்னார்

கிராமத்துத் தந்தை

 

ஜன்னல் திறந்து வைத்தால்

வருமா வண்ணத்துப் பூச்சிகள்

கேட்கிறது

நகரத்துக் குழந்தை .

Read the rest of this entry »

Tags:

 

 

தொடர்ந்து ஒடவேண்டியிருக்கும்

நேரங்களிலும் கூட

வேகமாக ஓடியும்

நிலையங்கள் காண்கையில்

நிதானித்து நின்று போகும்

புகை வண்டியினைப் போல்

உன் நினைவுகள் நிறுத்துகையில்

உருக்கும் வெயிலிலும்

கைக்குட்டையில் வியர்வையினை

மடித்து வைத்துக் கொண்டு

புன்னகைத்துக் கடக்கிறேன்

உன் நினைவுகளை அல்ல …

Tags:

 

புன்னகைகள் மலர வேண்டும்

வெகு இயல்பாய்

பறவைகள் பாடித் திரியும்

வழியின்போக்கன் பார்வை திருடும்

பெயர் தெரியாத

ஒரு பூவைப் போல …

செடி போலத் தோன்றினாலும்

பால் ஊற்றி வேண்டினாலும்

என்றும் பூப்பதில்லை

தொட்டியில் புதைக்கப்பட்ட

குரோட்டன் செடிகள் ..

Tags:

 

எல்லா நாட்களிலும்

வந்து போகத்

தவறுவதில்லை நிலவு

 

அரை வட்டமாய் தேய்ந்தோ 

உட்குழிந்து வளைந்து

வெள்ளை வானவில்லாகவோ

முனை மழுங்கியோ

எப்படியும் வந்துவிடுகிறது

 

அம்மாவாசை அன்று கூட

பார்க்கும் இடங்களிலெல்லாம்

வெறுமை வைத்து

தன் இருப்பை அறிவிக்கிறது

Read the rest of this entry »

Tags:

 

மீட்சியுரா

கடந்த காலங்கள்

காயங்கள் மீறிய தழும்பென

நிலைத்து நினைவுறுத்துகின்றன 

சம்பவங்களை ..

 

கம்பிகள் அறியாமல்

மீட்டும் விரல்கள் அறியாமல்

கேட்கும் செவிகள் அறியாமல்

இசையின் வழியே வந்திறங்கி

மீட்டுகின்றன புலன்களை …

Read the rest of this entry »

Tags:

வலுக்கட்டாயமாக

என் துயில் உறியப்படும்

சாமங்களின் மீதங்கள்

இமைகள் மூடாமலேயே

கரிய இருளின் பின்னே கழிகின்றன

Read the rest of this entry »

Tags:

Page 2 of 3123