Posts Tagged ‘’

 

ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு

இறைஞ்சி நிற்கிறேன்

உன் முன்னால் …

 

கோபம் கொண்ட பாவனையில்

விழி உயர்த்திப்

போதுமட்டும் ரசித்துவிட்டு ,

கைகுட்டையில் மீதம் வைத்திருந்த

மன்னிப்புகளில் ஒன்றை எடுத்து வீசிப்

புன்னகைக்கிறாய் ரகசியமாக ..

 

மீண்டுமொரு தவறு செய்யத் தயாராகிறேன் …  

Tags: ,

சற்றேறக்குறைய

கண்விழித்த கடிகார முள்ளின்

நிமிட பின்னோட்டத்தில்

என் கனவிலிருந்திறங்கி

காணாமல் ஓடிப்போயிருந்ததவ்வுருவம் …

பகலின் நிர்வாண வெளிச்சத்திலும்

வறண்ட காற்றின் வெக்கையிலும்

தேடிக் கொண்டேயிருந்தன யென் கண்கள் ..

Read the rest of this entry »

Tags:

 

 

கடந்து மறைகின்ற திருப்பங்களில் எல்லாம்

பிம்பங்களை உதிர்த்த வண்ணம்

என் விரல் பிடித்து வந்துகொண்டிருக்கின்றன

கனவுகள் 

 

 

கையிலிருக்கும் பொம்மைகளை எல்லாம்

தூக்கி  எறிந்து விட்டு

கடைவாயில் எச்சிலொழுக சிரிக்கும்

குழந்தை போல

ஒட்டிக் கொண்டு உதிர மறுக்கும்

பிம்பங்களை எல்லாம்

உதறி எறிந்து விட்டு சிரிக்கின்றன கனவுகள்

Read the rest of this entry »

Tags:

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

நாடு நகரங்கள் தாண்டி

காடுகள்  புகுந்து மீண்டு

சில  மலைகளைத் துளையிட்டு

வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன நம்மை

நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன

வழியனுப்பிகளின் முகங்களையும்

கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்

நாம் ஏறிய  ரயில் நிலையங்களின்

நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

தண்டவாளங்களின் மேலும் 

நாம் இறங்கிய  பின்னர்

நம்முள்ளும் ….

Tags:

மழையில் நனைவதாய்

நெடுநேர பிரமை …

என் நீண்ட பாதை முழுவதும்

நிலவும் விண்மீன்களும்

கதை பேசியபடி வந்தும்

காற்றின் வெம்மை

மழையின் ஸ்பரிசத்திற்கு

மறுப்பு தெரிவித்தும்

Read the rest of this entry »

Tags:

இரவுகளின் அந்தரங்கங்களில் கவிந்து கிடக்கும்

ரகசியங்களின் நிழல்களை

உற்றுப்பார்த்துக்

கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன

விண்மீன்கள் …

எல்லா வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும்

எலிகள் வரக்கூடுமென

புகைபோக்கியின் துளைகளும் கூட

அடைக்கப்பட்ட பின்னும்

கூரைகளைத் துளைத்து

எட்டிப் பார்க்கின்றன அவைகள்

Read the rest of this entry »

Tags:

கொஞ்ச நாட்களாய் ஏனோ

என் கன்னங்களில்

சிவப்பு பூசிக் கொண்டே தான் எழுகிறது

காலைப் பொழுதுகள் …

————————————————–

நாட்காட்டியில்

தினம் நூறுமுறை

யாரும் பார்த்திடாவண்ணம்

தேதி பார்த்திடும் போது

அச்சமும் கூச்சமும் பின்னிக் கொள்கின்றன

ஒரே அலைவரிசையில் என்னை …

————————————————–

நம் திருமண இரவன்று

உனக்குப் பரிசாகத் தருவதற்காக

வைத்திருக்கிறேன்

ஒரு கோடி ஆசைகள் ….

————————————————–

என் ஒவ்வொரு நொடிகளும்

உதடுகள் துடிப்பது

அதை உச்சரிக்கும் வேளை

எண்ணித்தான் ….

————————————————–

கேட்கிறாயா இப்பொழுதே …

————————————————–

நம் படுக்கை முழுவதும்

பொம்மைகள் வைத்து

விளையாடிட வேண்டும்

சில சமயம் நீ விளையாடிட

பொம்மையாகிட வேண்டும்

நானே ….

————————————————–

கிளி ஒன்று வளர்த்து

“சீய் போடா ” என மரியாதை இல்லாமல்

அழைக்கச் சொல்லித்தர வேண்டும்

நீ வேலைக்குச் சென்று விட்ட

வெறும் பகல் நேரத்தில் …

————————————————–

திடீர் அணைப்புகள்

தினம் தேவை

திருட்டு முத்தங்கள்

தினம் ஒரு முறையாவது …

Read the rest of this entry »

Tags:

வெகு காலத்திற்கு முன்பு

காலமும் நானும் கூட

கணக்கு வைக்க மறந்துபோன

ஏதேதோ நாட்களில் தொலைந்து போன

என்னிழல்கள்

கூடியிருந்தன ஒன்றாய் …

அத்தனை நிழல்களும் ஆடையில்லாமல்

உண்மையின் நிர்வாணத்துடன்

இன்று மட்டும் உண்மை மட்டும்

உறுதியாய் இருந்தன அத்தனையும் …

இதுகாறும்

மௌனங்கள் மட்டுமே மந்திரமாய்

முணுமுணுத்துக் கொண்டிருந்த

அவைகளின் உதடுகள்

இத்தனை நாட்களுக்கும் சேர்த்து

தொலைந்த கதை பேசத்துவங்கின ..

Read the rest of this entry »

Tags:

9
Oct

அனிச்சை

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

 

 

வேலை பிடிக்காத காலையொன்றில்

வீடு ஒதுக்குகையில்

பழைய புத்தகங்களுக்கிடையில்

பார்க்கக் கிடைக்கும் கையெழுத்துகளில்

Read the rest of this entry »

Tags:

 

உலகத்தின் நிழல் மறையும்

முற்றிலும் இருள் கவியும்

பின்னிரவுகளில்

விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே

மெதுவாக விழித்துப் பார்க்கின்றன

நட்பின் நினைவுகளும்

அதன் அழகான கவிதைகளும் …

 

தூக்கம் மறந்து

விழிகள் திறந்து

எரியும் கண்களில் விரியும்

கனவுகள் கலைந்த பின்

விட்டுச்சென்ற கால்சுவடுகளை

அலைகள் வந்து திருடிப் போகும் சுகம்

நெஞ்சின் அடுக்குகளில் இருந்து

நினைவுகள் வருடப் படுகையில் …

Read the rest of this entry »

Tags: