Posts Tagged ‘’

“அபூ ….அபூ ..ர்ர்ர் … வ ..வா … வேணாம் .. கிட்ட வராத .. என்னை ஒன்னும் பண்ணிடாத … ” வாய் குழறியது . பின்னாலேயே நகர்ந்து  சென்றேன் .சுவர் இடித்தது ..   கீழே இறங்கினாள் . கொடியில் கிடந்த துண்டை எடுத்து  சுற்றிக் கொண்டாள் . நான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தேன் .  கீழே கிடந்த கத்தியை எடுத்தாள் . நிதானமாக என்னை நோக்கி நடந்து வந்தாள் .

 

“ப்ளீஸ் .. வேணாம் .. என்ன விட்டிடு ” கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை .. இடது கையை ஊன்றி சுவற்றில் சாய்ந்து எழுந்தேன் . கை நரம்பு வலித்தது . மீண்டும் கீழே விழுந்தேன் .கத்தியை இரண்டு கைகளாலும் பிடித்து என்னை நோக்கி உயர்த்தினாள்.

 

“இப்போ என்ன … என்னை கத்தியால குத்தனுமா ? இந்தாங்க .. குத்துங்க ..” என்னை நோக்கி நீட்டினாள் .

 

“இல்ல .. வேணாம் .. தப்பு .. பண்ணிட்டே .. ன் ..”  வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது .

 

“சரி நானே குத்திக்கறேன் ” உயர்த்திய கைகளை தன் மார்பை நோக்கிச் செலுத்தினாள். வெள்ளை ரத்தம் பீச்சிட்டுக் கொண்டு என்  முகத்தின் மேல் அடித்தது . சிரித்தாள் .. மிக சப்தமாக . வாஷ் பேசின் குழாயைத் திறந்து பொறுமையாக கத்தியைக் கழுவத்  தொடங்கினாள்.   என் நரம்புகள் இழுத்துக் கொண்டன . மொத்தமாக நினைவிழப்பதற்கு முன் கடைசியாக உதடுகள்

 பிரிந்தன .

 

“சா .. சாதனா .. நீ எங்கே ???”

Read the rest of this entry »

Tags: ,