இரவினைக் கொல் …

 

வார்த்தைகள் எல்லாம் சிதறிப் போய் , உள்ளிருந்து உடைத்துக் கொண்டு , கண்கள் கிழிந்து போகும் படி கண்ணீர் பீரிட்டு வருகையில் எப்படி உனக்குக் கடிதம் எழுதுவதுஇருந்தும் இந்த இரவில் உனக்குக் கடிதம் எழுதித் தான் ஆக வேண்டும்.

வெளிர் நீல வானத்தில் மறைந்து கொள்ள மேகமில்லாமல் நிலா அழுவதைப் பார்த்து விட்ட பிறகு  , என் பெயர் எழுதிய நட்சத்திரமொன்று வெடித்துச் சிதறி விண்ணில் சரிவதை நேர் கொண்டு விட்ட பிறகு , தனியே ஒரு பறவை உறக்கம் கொள்ளாது அகாலத்தில் ஓலமிட்டபடி பாதை தெரியாமல் தவித்துப் பறப்பதற்கு சாட்சியாகி விட்ட பிறகு எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நீ கடைசியாய் எனக்கு இட்டுத் தந்த கையொப்பம் என் விரல்களில் ஏறி விளையாடியபடி இருக்கிறது. இன்னொரு புறம் புகைப்படத்திலிருந்து இறங்கிவந்து விடும்படி இறைஞ்சிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய். போதுமென கண்கள் பொத்திக் கொண்டு வீடு தாண்டி ஓடி வந்தால், இலைகள் எல்லாம் உதிர்ந்து போன கிளைகள் வழி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலா , பொம்மை போல உறங்கிக் கொண்டிருக்கும் உன்னையும் சாளரத்துக் கம்பிகள் வழி பார்த்துக் கொண்டிருக்குமா என நினைக்கச் சொல்லுகிறது. எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நாளையும் இதே போல ஒரு இரவும் நிலவும் உண்டு எனத் தெரிந்து விட்ட பிறகும் எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

வேண்டுமானால் எழுதிய கடிதங்கள் அத்தனையும் கிழித்தெறியத் தயார். ஒன்று மட்டும் செய். எப்படியாவது எனக்கான இரவுகளைக் கொன்று விட வழி சொல். நீ இல்லாமல் வெறும் இரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் நான் ?

 

———————————————————————–

 

 

 

 

Tags:

அம்மாவும் நீயும் …

 

 

 

உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன் அம்மாவிடம். எப்பொழுதும் உன் பெயரைச் சரிகமபதநி எனச் சங்கீதமாய் சுரம் பிரித்துச் சொல்வதிலிருந்து தொடங்கும் அது. கூடவே உன் பெயரோடு என் பெயரை இணைத்துச் சொல்லுவாள் அவள்.

 

எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு. என் கவிதைகள் எப்பொழுதுமே அவளுக்குக் கேலிப்பொருட்கள்.

 

உன் கண்கள் பற்றிச் சொல்ல வாளும், வேலும், மீனும் போதுமா என்பாள். உன் முகம் பற்றிப் பேச நிலா தாண்டி போகமாட்டாயா என சொல்லிச் சிரிப்பாள். எப்பொழுதும் தொங்கும் காதணி , சிரிக்கும் கொலுசுகள் ஏன் எனக் கேட்பாள். எனக்குப் போட்டியாய் உன் பின்னே சுற்றி வரும் பட்டாம்பூச்சிகளைப் பிழைத்துப் போகும்படி விட்டு விடச் சிபாரிசு செய்வாள்.

 

என் கவிதைகள் எதுவுமே தன்னைப் போலில்லாத பொழுது , நான் எப்பொழுதும் உன்னை அவள் போலவே இருப்பதாகச் சொல்லுவது ஏன் எனக் கேட்டு நகைப்பாள்.

 

எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு.

 

அதனால் தான் உன்னைப் பற்றியும் , என் காதல் பற்றியும் நான் சொல்லியதை ஒரு போதும் நம்பியதேயில்லை அவள். மிகவும் பிரயாசைப் பட்டு உன் பெயரை நான் உச்சரிக்கும் தருணம் தான் என் நடிப்பின் உச்சம் என்பாள்.

 

அவளைப் போலவே இருப்பதால் தான் என்னவோ , உனக்கும் என் காதல் தெரிவதே இல்லையா ?

 

———————————————————–

Tags:

கனவும் மழையும், ஒருவேளை நீயும் … ?

 

 

 

கனவு பற்றியோ , மழை பற்றியோ இல்லை உன்னைப் பற்றியோ  மீண்டும் எழுதப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன் . எப்படி வருடும் கனவும்,  வருத்தும் மழையும் என் கண்களிலேயே ஒட்டிப்போய் விட்டனவோ ,அது போலவே நீயும்.

 

ஆனால் நிச்சயம் தெரியும் இது கனவென்று.

 

இரவா பகலா , விழிப்பா மயக்கமா எனத் தெரியாத மீள முடியாத தருணமொன்றின் வெகு ஆழத்தில் மூழ்கிய நிலையில் நான். உன் பெயரின் ஓங்காரம் மட்டும் இசையெனப் பெய்துகொண்டிருந்த என் செவிக்குள் மழை மெல்ல ஒழுகிக் கொண்டிருப்பதை உணர்ந்தபடி இருந்தேன். கடைசியாக வானவில் பார்த்தது என் நினைவில் இல்லை. மழையின் ஸ்பரிசம் கூட மறந்து தான் விட்டிருந்தேன். கடுங் கோடை மட்டுமே வெகுநாட்களாய் என்னைக் குடித்துக் கொண்டிருக்கையில் என்னை மறந்து போய் விட்டிருந்த மழையை எப்படி நம்ப முடியும் .

 

அதனால் நிச்சயம் தெரியும் இது கனவென்று.

 

உனக்கான கடிதங்களை மென்று மென்று விழுங்கி உடலின் ஏதோ ஒரு பகுதியில் , ஆலகால விஷமென பதுக்கிவிட்டிருந்த என் கண்களில் நீராய் தப்பியோடிக் கொண்டிருந்தன அவைகள். என் உயிர் வற்றிப் போய் பலநாட்களாகி இருக்கையில் எப்படி நம்புவது வழிவது வெறும் நீரென்று.

 

கண்களுக்கும் தெரியும் இதுவெறும் கனவென்று.

 

வெகு நாட்களாய் உனக்கென காத்திருந்து இற்றுப் போயிருந்த கதவில் , கேட்கும் வளையோசை உன்னுடையாதாக இருக்க வாய்ப்பில்லாத பொழுது , கதவு திறந்த என் முன் நிற்பது மட்டும் எப்படி நீயாக இருக்கமுடியும். வெகுநாட்களாய் நானே கூட உடனில்லாத நான் மட்டும் இருப்பது , சுற்றிலும் எதிரொலிக்கும் வெறுமைக்கும் தெரியும் என்பதால் , நீயில்லாத வீடென்று புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் சிலந்திகளுக்கும் தெரியும் ,இது கனவு மட்டுமேயென்று.

 

உடனிருக்கப் பிரியமின்றி கனவுகள் கூட பாதியில் சென்றுவிட்ட தருணத்தில் , இனியும் உறங்குவதில் அர்த்தமில்லையென விழித்திருந்தேன்.

 

வழக்கத்திற்கு மாறாக குளுமையை உணரமுடிந்தது என்னால். கண்கள் கூட சிவந்திருப்பதாய்த் தான் நம்ப வைக்க முயன்று கொண்டிருந்தது கண்ணாடி. கதவுகள்  கூடத் திறந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வீதி முழுதும் நனைந்திருப்பதைக் கண்டேன். மழை பெய்து கொண்டிருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த என்னைக் கேலி செய்வது போலிருந்தது , இரவு முழுதும் சேகரித்து வைத்திருந்த மழையை உதிர்த்துக் கொண்டிருந்த சிட்டுக் குருவியின் செய்கை.

 

கதவருகே உடைந்து சிதறியிருந்த கண்ணாடித் துண்டுகளைக் கண்ட தருணத்தில் தான் , மார்பில் அடித்தபடி சகதியாகிப் போயிருந்த தெருவின் வழி ஓடத் துவங்கினேன் உன் கால் தடங்களைத் தேடியபடி.

 

——————————————————————-

Tags:

 

 

 

                   எனக்கும் தேரைகளுக்குமான உறவு இருபது வருடக் காலச்சக்கரத்தின் பற்களில் குருதி தோய்ந்த மசி எனப் படிந்திருக்கிறது . ஒரு நண்பனை வஞ்சிக்கையில்  ஏற்படுகின்ற சுகம் , எதிரி ஒருவனின் இறந்து போன உடலை ரத்தம் சிதறச் சிதற துண்டு துண்டாக வெட்டுகையில் ஏற்படும் உச்சம் ,நீண்ட நாள் கழித்து கணவனுடன் பார்க்கும் முன்னாள் காதலியின் தளர்ந்த உடல் பற்றிய பரிகாசம் எல்லாமும் சேர்ந்ததது .

 

இந்த புது வீடு வரும் வரை தேரை பற்றிய எண்ணங்களைக் கொஞ்ச நாட்களாகவே மறந்து விட்டிருந்தேன் . ஜூலியையும் கூட. ! ஜூலி ! என் அழகிய தேரைப் பெண்ணே

 

குளியலறையில் என் நிர்வாணம் பார்த்துக் கொண்டு அசையாமல் இருக்கும் இந்தத் தேரைக்கு எனக்குள் புதைந்து போயிருக்கும் கருப்புப் பக்கங்களை புரட்ட வைக்கத் தெரிந்திருக்கிறது .

 

தேரை மீதான என் ஆர்வம் அல்லது வெறி எப்பொழுதிருந்து என்று தெரியவில்லை . சிறுவயதில் எல்லாரும் பட்டாம்பூச்சி துரத்திக் கொண்டிருக்கையில் நான் மட்டும் மழையூறிப் போன குறும்பாறைகளைப் புரட்டிப் பொன்னிறத் தேரைகளைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன்.  ஓடில்லாத ஆமை போலக் குறுகிப் படுத்திருக்கும் தேரையின் பின்புறத்தைக் குச்சியால் தட்டித் தட்டி ஏதேனும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை,  அடையச் செய்வதை ஒரு ரகசிய விளையாட்டாகவே வைத்திருந்திருக்கிறேன் .

 

என் உலகம்  ரகசியமானது . யாருக்கும் சொந்தமானது அல்ல. என்னைத் தவிர யாருக்கும் இடமில்லாதது . என் ஆழ்மனத்தின் அபத்தங்களும் அதைச் செயல்படுத்திப் பார்க்கும் இச்சைகளும் மட்டுமே நிரம்பியது.  எப்படியாயினும் எனக்கு சாதகமான விதிகள் கொண்ட விளையாட்டுகளைக் கொண்டது.

 

 

என் உலகிற்குள் நான் அனுமதித்த ஒரே ஒரு உயிரி ஜூலி தான்.  என் ரகசிய விளையாட்டின் துணை அவள் .

 

ஜூலியை யாருக்கும் பிடிக்காது . அவளது தோல் தேரையினுடையதைக் கடன் வாங்கி இருக்கும். ஒரு மாதிரி வறண்டு போன பளிங்காய் அவள் சட்டையில்லாத முதுகிருக்கும் . உனக்கெப்படித் தெரியும் என்று கேட்பவர்கள் மட்டும் கதையைத் தொடரவும். எனக்குத் தெரியும். அவள் தலைமுடிகளின் எண்ணிக்கை கூட என்னால் நிர்ணயிக்கப்பட்டது தான்.

 

அந்த இரட்டை குதிரை பின்னல்கள் கூட நான் சொன்னது போல ஆடுபவைகள். அவளது கண்களை உங்களுக்குப் பிடிக்காது. நிச்சயம் பிடிக்காது . வட்டச் சில்லுகள் கொண்ட  கண்ணாடிகளுக்குள்  அடைபட்டிருக்கும் அவள் கண்கள் காறிக் கொண்டே இருக்கும் .  கழுத்திலோ நெற்றியிலோ புறங்கைகளிலோ எனக்கு மட்டுமே காரணம் தெரிந்த காயங்கள் இருக்கும் .  பினோஃபார்மில் நடந்து வருகையில்  ஒரு பிராணி போலவே இருப்பாள். அந்தப் பிராணியை சரியாக இனம் கண்டு கொண்டவன் நான் மட்டுமே . இரு வார்த்தைகளில் சொல்வதானால் ஜூலி  என் அடிமை .

Read the rest of this entry »

Tags: , ,

 

                 கிட்டத் தட்ட ஒன்னரை வருடங்களாகியிருக்கிறது , ஏற்கனவே எழுதப்பட்ட கதை ஒன்றை எழுதியவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொள்ள , என்னை நானே மாற்றிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள . 

மோனாரிட்டா சென்ற வருடம் ஜனவரியில் பதிவிடப் பட்டு , ஒரே நாளில் மீண்டும் திருத்தி எழுதலாம் என நீக்கப்பட்டுவிட்ட கதை (??!) . என்னை நானே கொஞ்சமேனும் புரிந்து கொள்ள இந்த நாட்கள் இடம் தந்திருக்கின்றன. நன்றாக இருந்தால் என்ன , இல்லாவிட்டால் என்ன ? , இது என் கதை என்பதில் எந்தவிதப்  பொய்யும் இல்லையே . அதே போல எங்கும் வெறுமையும் வெற்றிடமுமே சந்திக்க நேர்ந்தாலும் இது என் வாழ்கை என்பது தானே நிதர்சனம் .

தேயும் நிலவை ரசிக்கும்  அதே மனதோடு ஓயும் இந்த வாழ்வையும் பார்க்கப் பழகவேண்டுமென்பது மட்டும் தெரிகிறது . விரக்தியா , வெறுமையா என்பது புரியவில்லை ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. காயங்கள் ஆறும் , தழும்புகள் மறையக் கொஞ்ச நாட்களாகுமல்லவா?  அல்லது இந்தத் தழும்பு அப்படியே மாறாமல் நின்றும் போகலாம் . கோடையின் தனிமை போன்ற குரு யாருமேயில்லை.

எது எப்படி ஆயினும் இதுவும் கடந்து போகட்டும் .

கல்லூரி இரண்டாவது வருடத்தில்  கதை போல எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே என்னுடன் இருந்து எல்லா இம்சைகளையும் சகித்து வரும் பாலாவிற்கு இந்த நூறாவது பதிவு .

 

 ————————————————————————

 

அண்ட் தென் தே லிவ்டு ஹேப்பிலி எவர் ஆஃப்டர் .

 

புத்தகத்தை மூடி மடியில் வைத்தேன் . எல்லா தேவதைக் கதைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் ஆரம்பிக்கின்றன . சூனியக்காரியோ , கொடுமைக்காரச் சித்தியோ , கிளியில் உயிர் உரித்து வைத்திருக்கும் மந்திரவாதியோ. தேவதைகளோ , ராஜகுமாரர்களோ தான் மாறுகிறார்கள் கதை மாறுவதில்லை . கதையின் முடிவில் முத்தமிடவும்  மறப்பதில்லை .

 

சென்னையிலிருந்து மதுரை  செல்லும் பாண்டியன் விரைவு ரயிலில் , சரியாக இரவு ஒன்பதரை மணிக்கு அவள் என்னை பார்த்துப்  புன்னகைத்த வினாடியில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது . ஒரு வேளை தேவதைக் கதைகள் இது போலவும் தொடங்கக் கூடும் .

Read the rest of this entry »

Tags: ,

இன்னும் ஒரேமுறை …

 

 

கடிதத்தின் முதல் வரி கிடைக்காமல் இருப்பது குறித்து வருத்தமாயிருக்கிறது. என்னைச் சுற்றிலும் சிதறும் வார்த்தைகள் நடுங்கியபடியே இருக்கின்றன நம்பிக்கையின்மையைப் பூசியபடி. மௌனமே பரவாயில்லை எனத் தோன்றுகிறது. யாருடைய செவிகளும் எனக்குத் தேவையில்லை என உரத்துக் கத்தத் தோன்றுகிறது. ஆனால இருளில் புதைந்து கிடக்கும் கேள்விகளைக் காட்டிலும் , பகலில் நிர்வாணமாக என்னைப் பார்த்திருக்கும் மௌனமே பயமேற்படுத்துவதாய் இருக்கிறது. உறக்கமின்றியும் கண்கள் மூடியிருக்கவே பிரியப்படுகிறேன், கனவில் ஸ்பரிசித்திருக்கும் உன் உள்ளங்கையின் வெம்மையை நிகழ்விற்கு எடுத்துவர முடியாது என நிச்சயமாய்ப் புரியும் வரை.

 

மார்பெலும்புகளின் குறுக்கே ஆயிரம் தசை நார்கள் பின்னிக்கொண்டு ஒத்திசைத்து அதிர்வது போல உள்ளே உன் பெயரே கேட்டுக் கொண்டிருக்கிறது , கட்டுப் படுத்தமுடியாமல். தொட்டியில் இருந்து எல்லாக் காலைகளிலும் ஆர்வமாய் எட்டிப் பார்க்கும் என் தோட்டத்து ரோஜா , மாலையில் தன் முள்ளெடுத்து தானே குத்திக் கொண்டு மடிந்து போகின்றது. முள்ளில்லாத நான் தொட்டிக்கு நீரூற்றியபடி அடுத்த பூவிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்.

 

ஒரேயொருமுறை உன்னைச் சந்தித்துவிட்டால் போதும், நான் ஜீவித்திருப்பதற்கான ஓட்டைகள் விழுந்த காரணப் பாத்திரத்தைக் கொஞ்சமேனும் நிரப்பிக் கொள்வேன்.

Read the rest of this entry »

Tags: ,

அழுது கொண்டிருந்தான்  ஆதாம்
இறைவன் காலடியில் …

என்னால் தானே இவ்வளவும் !

அவள் மீது கொண்ட நேசத்தால்
ஆப்பிள் கடிக்கப்போய் நாசமல்லவா இன்று …

அறிவைக் கொடுத்திருக்கலாம் ஆப்பிள்
அறிவியலையும் வளர்த்திருக்கலாம் !
ஆனால்  அதன் குட்டிகள்
குடித்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் குருதியல்லவா?

என்னால் உண்டான நரகத்தை
காண விரும்பவில்லை
நான் மட்டும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு
என்னைத் தொலைத்து விடு எங்கேனும் – இல்லை
சூன்யத்திலாவது புதைத்து விடு


விளையாட்டைத் தொடங்குவோமா
மீண்டும் ? இறைவன்.

ஆயிரம் மின்னல்கள்
ஒருசேர  ஜனித்து மடிந்தன
ஆதாமின் கண்களில் .

ஆடப்போகும் பரமபதத்தில்
இம்முறை  ஏணிகளில்லை,
சர்ப்பம் மட்டும் ஒன்றேயொன்று

முடிந்து போன ஆட்டத்தின் ஆறுதல் பரிசாக
தழும்புகள் உனக்கு மட்டும்
கூட்டைக் கிழித்துச் சிறகுவிரிக்கும்
பட்டுப்பூச்சி போல் பழையநினைவுகள் இன்றி
புதிதாகவே படைக்கப் படுவாள் ஏவாள்


இது ஒத்திகைதான்.
எல்லாமும் சரியாக நடந்தால்
ஒத்திகை நிஜமாகும் , நிஜம் ஒத்திகையாகும்.


என்ன சம்மதமா ?

முட்டாளாக மாட்டேன் மீண்டும் ஒருமுறை
தலையசைத்தான்

கடிகாரமுள் திசைமாற்றிச் சுற்றத் தொடங்கியது.

Read the rest of this entry »

Tags:

 

எனக்கு அவ்வளவாகக் கதை எழுதிப் பரிட்சயம் கிடையாது . இருந்தாலும் கதை போல்  எழுதுவதற்கு அவ்வளவு பரிட்சயம் தேவையும் கிடையாது. ”சிறுகதை எழுதுவது எப்படி ? ” என்று இணையத்தில் தேடினால் பக்கம் பக்கமாக வருகிறது. உள்ளே சுண்டி இழுக்கும் ஒரு துவக்கம் .. பின் இயல்பான கதை ஓட்டம் .. அந்தக் கந்தாயம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. அப்புறம் ஒரு திடுக்கிடும் திருப்பத்துடன் கூடிய முடிவு வேண்டுமாம். அங்கு தான் உண்மையான கதையே தொடங்க  வேண்டுமாம். அப்புறம் எப்படி அது முடிவு ஆகும் என்று தெரியவில்லை. இவை எவையும்  இல்லையென்றாலும் , நீங்கள் இதெல்லாம் ஒரு கதையா என்று சட்டைக் காலரைப் பிடித்தாலும் கூட எனக்குக் கவலையில்லை. ஏனெனில் இந்தக் கதை எழுதப்படும் நோக்கமே வேறு. இந்தக் கதையில் தான் என் பிரச்சனைக்குத் தீர்வு இருக்கிறது.

இப்ப உன் பிரச்சனை தான் என்ன என்கிறீர்களா..?  எல்லாவற்றுக்கும் இணையத்தில் தேடும் பழக்கம் தான் என் பிரச்சனையே. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் கடினம் தான். உங்களுக்கு அவ்வளவு அவசரமென்றால்  இப்போதைக்கு இதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். பிரியங்கா நாளைக்கே விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். இந்தப் பிரச்சனையில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் எங்களுக்குத் இன்னும் திருமணமே ஆகவில்லை.  

Read the rest of this entry »

Tags: , , ,

 

இன்னொரு காதல் கதை # 1

இன்னொரு காதல் கதை # 2

 

ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டாள் , ஹ்ம்ம் .. உங்களைப் போலத் தான் நானும் நினைத்தேன். உங்களுக்கு ஹரிணியைப் பற்றித் தெரியாது. அவளுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான் . மூன்று மணி நேரம் அவளின் கதவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அவள் அப்பா அம்மா யார் சொல்லியும் கூட வெளியே வரவில்லை.  ஒரு வார்த்தை  கூட அதன் பின் பேசவும் இல்லை.

உங்க சந்தோசம் தான் எங்க சந்தோசம் .. அதுக்காகத் தான் நாங்க உங்க காதலுக்கு ஒத்துகிட்டோம் . பிரச்சனைய மொதல்ல சரி பண்ணிகோங்க .. எப்போ வேணும்னாலும் கல்யாணத்த வச்சிக்கலாம் .. “  இருவரின் பெற்றோர்களும் சொல்லி வைத்தார் போல். 

உண்மையில் நான் தான் டீச்சரின் பிள்ளை போல். எல்லோரிடமும் போய் முறையிட்டுக் கொண்டிருந்தேன். நியாயமாகப் பார்த்தால் , இந்நேரம் அடுத்த மாதத்தின் , ஒரு அழகான தேதியில் எங்களின் திருமணத் தேதி குறிக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தத் தேதி எப்படியும் அடுத்த மாதத்தில் வரத்தான் போகிறது . ஆனால் எனக்குத் தான் கொடுத்துவைக்கவில்லை.

ஆரம்பத்தில் அவளிடம் பேச முயற்சித்தேன் . ஒரு நாள் அவள் தோழி என்னிடம் வந்தாள் .

“சொல்லு  அனிதா ..  “

“ஒண்ணு சொல்லணும் கார்த்திக்  .. கோபப்படமாடியே  .. “

” நீ  சொல்ல வரத சொல்றியா மொதல்ல  ? ” எரிச்சல் . எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும்.

“பாரு  .. நீ இப்போவே கோபப்படற .. ஹரிணி சொல்லி தான் வந்தேன் .. நான் போறேன் ..  “

“ஹே .. ப்ளீஸ் போகாத .. நில்லு .. நான் கோபப்படல ” அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன் .

“கைய விடு கார்த்திக் ..  எல்லாரும் பாக்கறாங்க .. “

“ஸாரி .. ஸாரி   ..  ப்ளீஸ் சொல்லு “


“நீ அவகிட்ட பேச முயற்சி பண்ணாத இனிமே .. அவ பேச மாட்டா .. “

“நீ யாரு இத சொல்ல .. “

“எனக்கெந்த ஆசையும் இல்ல .. இத சொல்லணும் ன்னு .. அவ சொல்ல சொன்னா ..  மீட்டிங் ரூம் முன்னால நிக்கறது .. அவள ஃபாலோ  பண்றது .. இனிமே எதுவும் வேணான்னு சொல்ல சொன்னா  “

“இல்ல .. இருக்காது .. என் ஹரிணி அப்படி சொல்லியிருக்க மாட்டா .. “

“கார்த்திக் .. புரிஞ்சுகோ .. இட்ஸ் ஓவர் ..  அதையும் நீ மீறி .. “

என் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

“… நீ அவளை ஆபீஸ் ல தொல்ல பண்றன்னு .. எச். ஆர் கிட்ட கம்ப்ளைன்ட் .. “

“போதும் அனிதா .. போதும் .. ” கை கூப்பினேன். “உன் ஃபிரண்ட் கிட்ட போய் சொல்லு .. என்னால இனிமே எந்த தொல்லையும் இருக்காது அவளுக்கு .. ” அனிதா போய்விட்டாள் . ஹரிணியும் போய்விட்டாள். எல்லாமும் போய்விட்டது. Read the rest of this entry »

Tags: ,

 

இன்னொரு காதல் கதை – 1

சரியாக அன்றிலிருந்து நாற்பத்தி இரண்டு நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியவர்களால் திருமணம் நிச்சயமானது. இருவரின் குடும்பத்திலும் எங்கள் இருவரையும் பிடித்துப் போயிருந்தது. நியாமாகப் பார்த்தால் காதலர்கள் எல்லாரும் சார்லஸ் பாபேஜுக்கு தனியாக கோவில் கட்டி இரண்டாவது காதல் தினமாகக் கொண்டாடியிருக்க வேண்டும். என்ன திருமணம் மட்டும் ஆறு மாதங்கள் கழித்து . அதிலும் ஒரு சௌகரியம் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது கொஞ்சம் கூடுதல் சுதந்திரம் .. கூடுதல் உரிமம். ஆறு மாதத்திற்கு ஆசை தீரக் காதலிக்கலாம்.ஓட்டுவது எப்படி. நவம்பர் மாதத்திற்கு நன்றி.

எனக்கு எல்லாமே புதிதாகத் தான் இருக்கிறது . ஹரிணியைப் போல ஒரு பெண் கற்பனையில் இருந்திருந்தாலும், நேரில் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதுவும் காதலித்து அது திருமணத்தில் வந்து முடியும் என்று .. ம்ம்ஹம்ம்.. எல்லாமே புதிதுதான் ..

சின்னப் பெண் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் திருமண நிச்சயத்திற்குப் பிறகு எவ்வளவு மாறிவிட்டாள். திருமணத்திற்குப் பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்ற  திட்டமிடல்கள் . ஒரு சின்ன பிளாட் ..கொஞ்சமே நீல நிறத்தில்… இப்பொழுதைக்கு ஒரு சி.பி.செட் எக்ஸ்ட்ரீம்… இரண்டு மூன்று வருடங்களில் ஸ்விப்ட் ..   . எங்கள் படுக்கை அறையில் கொஞ்சம் வெளிர் ஊதா. படிக்கும் அறை அவளின் புத்தகங்களை வைக்க .. குட்டி ஜிம் எனக்கு ..  ஒரு ஆண் .. ஒரு பெண் ..அவர்கள் படிக்கும் பள்ளி ..  எல்லாவற்றிகும் ஒரு சிறு புன்னகையுடன் சரி என்று சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது.

இத்தனை வருடங்களாகப் பேசாத பேச்செல்லாம் மொத்தமாகப் பேசித் தீர்ப்பது போல பேசியிருக்கிறோம். அவளின் கனவுகள் மொத்தமும் அழகானது . சில அபூர்வமானவைகள் கூட. பேசிக்கொண்டே இருக்கும் போதே அவள் முகம் பார்த்துக் கொண்டே சட்டென்று வார்த்தைகள் இல்லாது போவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது. கன்னங்கள் இரண்டையும் கைகளில் வைத்துக் கொண்டு , சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்று பாடத் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

முதல் கட்டமாக சி.பி.செட் வாங்கியாகிவிட்டது. வேளச்சேரியில் பில்டருக்கும் சொல்லியாகிவிட்டது. ஈ.எம்.ஐ இல்லாமல் வாழ்கையை

பைக் வாங்கிவிட்டதால் இப்பொழுதெல்லாம் ‘கேப்’ கிடையாது. நேராக அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு, பின் என் வீட்டிற்கு. இன்னும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அது ஒரு வெள்ளிக் கிழமை. அவள் மயில் நீல நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். நானும் ஊதா நிறம் . இப்பொழுதெல்லாம் என்றைக்கு என்ன நிற உடை அணியவேண்டும் என்பதைக் கூட அவள் தான் தீர்மானிக்கிறாள். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிய வேண்டுமாம்.மாயாஜால் போய்விட்டு வருவதற்கு இரவு நேரமாகிவிட்டது . சோழிங்கநல்லூர் தாண்டுவதற்குள்ளாகவே மழை மொத்தமாக நனைத்துவிட்டது.

அவளது அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்று . Read the rest of this entry »

Tags: ,

Page 4 of 14« First...23456...10...Last »