ஃபீனிக்ஸ்

இந்த ஊர் அறவே பிடிக்கவில்லை எனக்கு.

இங்கு எல்லாரும் தனியாக இருக்கிறார்கள். எந்தக் கிளைகளிலும் இலைகள் இல்லை. பூக்களுக்கு நான் எங்கே செல்ல?

மரத்தில் தனித்து உறங்கிக் கொண்டிருக்கும் பூனையும், அதிகாலை பெய்த மழையின் சவத்தில் நீந்திக் கொண்டிருக்கும் ஒற்றை வாத்தும் , பனி விழும் சாலையில் தள்ளாடியபடி ஊன்று கோல் கொண்டு  நத்தையின் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் கிழவனும், அறையின் சாளரத்தை அறைந்து மூடச் சொல்கிறார்கள். என் மனதின் சாளரதிற்கான சாவி எங்கே ?

உலகின் மொத்த இசைக்கருவிகளையும் உடைக்க வேண்டும். மூங்கில்களைக் கொளுத்தலாம். மின்விசிறிச் சப்தம் கூட இல்லாத அறையின் கதவிடுக்கு  வழி கண்ணீர் கொண்டு வரும் காற்றின் இசையை எப்படி நிறுத்த ?

கவிஞர்களை நாடு கடத்தலாம். காற்றில் மிதந்து கொண்டு என்னைச் சுற்றி அலையும் ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளை என்ன செய்வது ?

இந்த ஊர் அறவே பிடிக்கவில்லை தான் எனக்கு.

இங்கு எந்தக் கிளைகளிலும் இலைகள் இல்லை. இருந்தும் வசந்தகாலத்தின் வருகைக்காக கைகள் விரித்தபடி காத்திருக்கும் கிளைகள் நிச்சயம் பூக்கள்  பூக்குமென்கின்றன.

மரத்தில் தனித்துறங்கும் பூனையின் கனவில் , அது நகரச் சந்தையில் சந்தித்த சீமாட்டியின் கைபையுள் இருந்து எட்டிப் பார்த்த வெண்பூனை புன்னகைத்துக் கொண்டிருக்குமோ ! இறகுகள் இழந்த ஒற்றை வாத்து தன் பெட்டைக்காக , இறந்து கிடக்கும் மழையை உயிர்ப்பிக்க முயன்று கொண்டிருக்கிறதோ ! குளிரில் நடுங்கியபடி வீடு சேரும் கிழவனின் ஊன்றுகோல் பிடுங்கி எறிந்துவிட்டு , கட்டியணைத்து சுடு முத்தமொன்றைக் கன்னத்தில் தரக்  கதவோரம் காத்திருக்கிறாளோ அவன் கிழ மனைவி !  சாவி போல சாளரத்தையும் நான் தொலைக்கத் தான் வேண்டும்.

எவ்வளவு தடுத்தும் அறை நுழையும் காற்றின் இசைக்கு , எனைச் சுற்றி அலையும் கவிதைகளில் இருந்து வார்த்தைகள் திருடி எனக்கான பாடல் எழுதிக் கொள்கிறேன். மூங்கில்களோடு பிழைத்துப் போகட்டும் கவிஞர்களும்.

ஒருவேளை இந்த ஊர் எனக்குப் பிடிக்கக் கூடும்.

 

—————————————————————————————————-

Tags:

 

 

அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு night shift வந்து கொண்டிருந்தேன்ஜோவும் பரணியும் பின்பு இந்த கதையின் நாயகனும் கூட ... நாயகனின் பெயர் பிரபு என்றே வைத்துக் கொள்வோம். எப்பொழுதுமே வேலை இருக்காது என்றாலும் இரவு இரண்டு மணிக்கு மேல் சத்தியமாக வேலை இருக்காது. பனிரெண்டாவது தளத்தில் எங்களுக்காகவே கடை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.

 

நன்றாக நினைவிருக்கிறதுஅன்று சப்போட்டா ஜூஸ் மட்டுமே இருந்தது.  நான்கு பேரும் சிப்பிக்கொண்டே வழக்கம் போல மொக்கை போட்டுக் கொண்டு இருந்தோம். என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைவில் இல்லை. திடீரென்று பரணி கேட்டான்.

 

நீங்க சொல்லிருக்கணும் பிரபு  .. ”
யார் கிட்ட என்ன சொல்லிருக்கணும்
… ?”
அந்த பொண்ணுகிட்ட உங்க மனசில தோன்றத
..”
ஏன்டா அவன ஏத்தி விடற ?

இல்ல ஜோ .. இவன் சொல்லிருக்கணும் .. சொல்லாம சும்மா பீல் பண்ணிட்டு இருக்கறதுல .. Total waste”

டேய் .. மாட்டேன்னு சொல்லப் போறவகிட்ட எதுக்குடா தேவை இல்லாம சொல்லிட்டு .. அதுவும் இல்லாம I’m Trying to get over her .. போதும் ..

பரணி ஏதோ தீவிரமாக யோசித்தான்.

ஓகே .. இப்படி வச்சுக்கலாம் .. உங்க life இன்னொரு பொண்ணு வர்றா .. happily நீங்க ரெண்டு பெரும் settled ..  உங்களுக்கு ஒரு அறுபது வயசாகுது .. ஒரு வேளை அவ கிட்ட சொல்லிருக்கலாமோன்னு அப்போ தோணினா என்ன பண்ணுவீங்க ? “

கிட்டத் தட்ட எல்லாருக்குமே இந்தக் கேள்வி ஒரு முறையாவது தோன்றியிருக்கும்.


இப்படி ஆரம்பித்தது தான் வெண்ணிலா. Read the rest of this entry »

Tags: , ,

22
Mar

வெண்ணிலா … 11

   Posted by: Rejovasan   in கதை நேரம்

11

This time, this place Misused, Mistakes … Too long, too late, who was I to make you wait?
Just one chance, Just one breath … Just in case there’s just one left
‘Cause you know, you know, you know I love you
I have loved you all along And I miss you … Been far away for far too long
I keep dreaming you’ll be with me and you’ll never go
Stop breathing if I don’t see you anymore
                                                                                    - Nickel back (From the song Far away)

 

எல்லாம் முடிந்து போனது என்று தான் நினைத்திருந்தேன்.

இல்லையென்றது அவள் அழைப்பு.

ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்திருந்திருக்க முடியும் அவள் எங்கே இருக்கிறாள் என்று. அவளே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போன பின்பு , என்ன இருக்கிறது என்று தான் அத்தனை நாட்கள் சும்மா இருந்தேன்.

அது வெறும் அழைப்பு கிடையாது. என் மூடத்தனதிற்கான  வேக் அப் கால்.

போகிறேன் என்றால் அப்படியே விட்டுவிடுவாயா என்றது ரிஸீவ்டு காலில் இருந்த அவளது எண். அவளது அலைபேசியில் இருந்து அழைத்தால் எண் தெரிந்துவிடுமாம். நல்லவேளை ஏதோ ஒரு பொது தொலைபேசியில் இருந்து அழைத்திருந்ததால் தான் அவள் இருக்கும் இடம் தெரிந்தது.

மொத்தமாக மூன்று நிமிடங்கள் பனிரெண்டு வினாடிகள் அந்த அழைப்பு நீடித்திருந்தது. அதில் இரண்டே முக்கால் நிமிடங்கள் அழுது கொண்டிருந்தாள். ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டாள். வழக்கம் போல முகத்தில் விழிக்காதே என்றாள். வைத்தும் விட்டாள்.

எனக்கு அது “உன்னைப் பார்க்க வேண்டும் சீக்கிரம் வா ” என்றது போல் இருந்தது.

அவளுக்கான கடைசி மடல் எழுதத் துவங்கினேன். ஏனோ அது கடைசி என்று தோன்றியது. கடிதம் எழுதும் தூரம்  இனி அவளை விட்டு போகமாட்டேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

Read the rest of this entry »

Tags: ,

21
Mar

வெண்ணிலா … 10

   Posted by: Rejovasan   in கதை நேரம்

10

Love does nothing but make you weak! It turns you into an object of pity and derision–a mewling pathetic creature no more fit to live than a worm squirming on the pavement after a hard summer rain.
                                                                                                                 -   Teresa Medeiros

 

“என்ன சார் ? தூக்கம் வரலியா ?” கார்த்திக் நின்று கொண்டிருந்தார். ஆமாம் என்று தலை அசைத்தேன்.

“சிக்ரெட் ? ”

“இல்ல கார்த்திக் ..பழக்கம் இல்ல .. இங்க சிகரெட் பிடிகறது தப்பில்ல ..?”

“சும்மா ரெண்டு பஃப் … எனக்கும் தூக்கம் வரல .. உங்களைக் காணோம் .. இங்க தான்  இருப்பீங்கன்னு தோணுச்சு …”

எனக்கு லேசாக இருமல் வந்தது.

“சாரி பிரபு .. ” கீழே தூக்கி எறிந்தார் சிகிரெட் துண்டை.

“ஸோ ?  எதுக்காக ஹைதராபாத் .. ? ” அவர் பேச்சை மாற்ற விரும்பினார்.

“வெண்ணிலாவைப் பார்க்க .. ”

“மறுபடியும் ஏதாவது ட்ரைனிங்கா ? ”

“அவ என்னை விட்டு இங்க வந்து மூணு மாசம் ஆகுது”

எத்தனை முறை மனதிற்குள்ளே நினைத்துப் பொருமினாலும், பேசும் பொழுதே மனம் அமைதி கொள்கிறது. பேசத் தவறிய தருணங்களுக்கெல்லாம் சேர்த்துப் பேசுவது போலத் தோன்றியது. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தார் கார்த்திக்.

“எப்படி வந்தனா கூட எங்கேஜ்மெண்ட்கு ஒத்துக்க முடிஞ்சது உங்களால ? ”

Read the rest of this entry »

Tags: ,

16
Mar

வெண்ணிலா … 9

   Posted by: Rejovasan   in கதை நேரம்

9

             “Some of us think holding on makes us strong; but sometimes it is letting go.”

-        Herman Hesse

 

பத்து நாட்களில் என்ன நடந்து விட முடியும். என்ன வேண்டுமானாலும் நடந்து விட முடியும். எனக்கு நடந்தது போல.

பகலிலேயே நான் கனவுகள் கண்டு கொண்டிருந்த காலம் இது. வந்தனாவை அன்று சந்தித்திருந்ததும் ஒரு பகல் கனவாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் அது கனவில்லை.

வெயில் நேரத்து மழை போல, என்றோ  சிறு வயதில் ஒரு மாலை நேரத்தில் தலையில் நச் நச்சென்று குட்டிப் பெய்த ஆலங்கட்டி போல , சிறுவர் மலரில் நான் படித்த ஒரு தேவதைக் கதை போல நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அவள் என் முன் நிஜமாகவே நின்று கொண்டிருந்தாள்.

நான் ஊமை மொழி பழகிக் கொண்டிருந்தேன். வெண்ணிலா தான் எனை அசைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தாள். அதற்குள் என் அலுவலகத் தளம் வந்திருந்தது.

வந்தனாவும் எங்களுடன் இறங்கிக் கொண்டாள்.

“ஹலோ .. ” மூன்றாவது முறையாக அவள் சொன்னாள்.

“ஹாய் “ என்றேன். அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ஹலோ என்ன நடக்குது இங்க ..? ” வெண்ணிலா இடையே புகுந்தாள்.

“வெண்ணிலா .. இவ.. இவங்க வந்தனா .. என் காலேஜ் மேட் .. ”

“என்னப்பா மரியாதை எல்லாம் அதிகமா இருக்கு .. ” சொல்லிக்கொண்டே வெண்ணிலாவிற்குக் கை கொடுத்தாள்.

“ஹாய் ஐ’ம் வெண்ணிலா .. ” வந்தனா இவள் யார் என்பது போல் என்னைப் பார்த்தாள். வெண்ணிலாவும் நீயே சொல்லேன் பார்ப்போம், என்பது போல என்னைப் பார்த்தாள். எனக்கு எங்கே பார்ப்பதென்று தெரியவில்லை. மனதிற்குள் நூறு முறை தோன்றியது , சொல்லடா இவளைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று. வார்த்தைகள் தான் ஒத்துழைக்கவில்லை.

பேசியிருக்க வேண்டிய இடம் அது. நான் பேசவில்லை.

Read the rest of this entry »

Tags: ,

13
Mar

வெண்ணிலா … 8

   Posted by: Rejovasan   in கதை நேரம்

8

He felt now that he was not simply close to her, but that he did not know where he ended and she began. 

-       Leo Tolstoy

சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.

இத்தனை நாட்களுக்குப் பிறகு என்னிடம் இருப்பது இந்த இனிமையான நினைவுகளும் , வாசனை நாட்களும் , அவள் உதட்டு ஈர ஞாபகங்களும் மட்டுமே.

அழுது அழுது கண்ணீர் எப்பொழுதோ வற்றிப்போயாகிவிட்டது.  தினமும் உண்பது போல வலியையும் ஒரு அன்றாடச் செயலாக உட்கொள்ளப் பழகி நாட்களாகிறது.

இரவுகள் என் எதிரிகள். என் எல்லா இன்பங்களுக்கும் சாட்சியாக இருந்த இரவுகள். என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொல்லும் அதே இரவுகள். என் உறக்கம் திருடிக் கொண்ட வெண்ணிற இரவுகள். அழியாத மச்சம் போல எனைச் சுற்றிலும் கவிந்திருக்கும் என் எல்லா நினைவுகளையும் போலவே இந்த இரவுகளையும் அறவே வெறுக்கிறேன்.

நன்றாக நினைவிருக்கிறது அந்த இரவு.

மே மாதம் . 29 ம் நாள் …

வழக்கம் போல நான் வீட்டுக்குள் நுழையவும் அவள் என்னை அழைக்கவும் சரியாக இருந்தது.

“என்னடா பண்ற ?”

“உன்ன தான் நெனச்சிட்டு இருக்கேன் ..”

“சும்மா பொய் சொல்லாதடா ..”

“கரெக்டா கண்டு பிடிச்சிட்ட ..  டிரஸ்  சேஞ் பண்ணட்டு இருக்கேன்னு சொல்ல ஒரு மாதிரி இருந்தது .. “

“அதான பார்த்தேன் .. சரி அப்படியே உன்கிட்ட இருக்கறதிலேயே சுமாரான ஒரு டிரெஸ்ஸ எடுத்துப் போட்டு சீக்கிரம் ரெடி ஆகு பார்ப்போம் ..”

“இந்த ராத்திரில ரெடி ஆகி என்ன பண்ணப் போறேன் .. ”

கொஞ்சம் நேரம் இடைவெளியில் , பதில் வந்தது.

“அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்காங்க .. வீட்ல தனியா தான் இருக்கேன் ..”

“ஓ தனியா இருக்க பயமா இருக்கா … நாம ஃபோன் பேசிட்டே இருக்கலாம் … நீ அப்படியே தூங்கிடு ..”

 

“உன்னை வந்தனா லவ் பண்ண மாட்டேன்னு சொன்னதில தப்பே இல்ல…” அடிக்கடி வந்தனாவைப் பற்றி விளையாட்டாக நாங்கள் பேசிக்கொள்ளத் துவங்கியிருந்தோம். விளையாட்டாக .. அப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டு , இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மீண்டும் சொன்னாள் “அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்காங்க .. வீட்ல தனியா தான் இருக்கேன் ..”

“ச்சே .. நான் இவ்ளோ மக்கா .. சார் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் .. ”

“என் வீடு தெரியுமா ? அட்ரெஸ் வேணாமா ..?”

“உன் வீட்டு அட்ரஸ் மட்டுமில்ல .. உன் ஏரியா ப்ளூ ப்ரிண்டே என்கிட்டே இருக்கு .. நீ ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ண அடுத்த நாளே சென்சஸ் எடுத்தாச்சு .. ”

“திருட்டுப் பய நீ .. ஆனா இப்பவே சொல்லிறேன் .. வீட்டுக்கு வந்து நல்ல பிள்ளையா நடந்துக்கணும் … இல்லன்னா வரவே வராத .. ”

“சொல்லிட்டேல .. எவ்ளோ சமத்துப் பிள்ளையா நடந்துக்கறேன்னு மட்டும் பாரு .. ஆனா என்ன, என் கை என் அளவுக்கு நல்ல பிள்ளை இல்ல..  சொன்ன பேச்சே கேக்காது .. ட்ரை பண்றேன் .. ”

Read the rest of this entry »

Tags: ,

 

அறிமுகமில்லாத தெருக்கள்
நீண்டு கொண்டே செல்கின்றன
எந்தத் திருப்பத்தில்
வெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….

காற்றில் பறக்கும் இறகென 
அருகில் வருகிறாய்
விரல் தொடும் நேரத்தில் 
விலகி மிதக்கிறாய் ..

கண்களை மூடிக் கொண்டு
உன்னை நெருங்கிடப் பார்க்கிறேன் ..

நினைவுக்கு வர மறுக்கும் கனவென
பிம்பங்கள் அல்லாத
தடையங்கள் மட்டும் – நீ
வந்து போனதன் அடையாளமாய்
விழிகளுக்குள்  இருக்கின்றன …

யுகங்கள் தேடி – உனை
நெருங்கிடும் சமயங்களில்
கிடைத்தல் அல்ல
தேடல் சுகமென்கிறாய்
விரும்பித் தொலைக்கிறேன் …

எந்தத் திருப்பத்தில்
வெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….

Tags:

3
Mar

வெண்ணிலா … 7

   Posted by: Rejovasan   in கதை நேரம்

7

 

“May I print a kiss on your lips?” I said, and she nodded her full permission: So we went to press and I rather guess we printed a full edition.

-       Joseph Lilienthal

மணி பத்து ஆகியிருந்தது. கம்பார்ட்மென்டில் எல்லாரும் விளக்கை அணைக்கத் துவங்கியிருந்தார்கள் . காலையில் பேசிக் கொள்ளலாம் என நாங்களும் தூங்கச் சென்றோம்.

எனக்கு தான் தூக்கம் வரவில்லை. எழுந்து சென்று கதவைத் திறந்து வைத்து நின்று கொண்டேன். வெளிச்சப் புள்ளிகளும் , இருளும் மாறி மாறி கடந்து போய்க்கொண்டிருந்தன.

எங்கோ தூரத்தில் மழைபெய்து கொண்டிருக்க வேண்டும். முகத்தில் ஈரக்காற்று படுகையில் அவள் தொலைதூரத்தில் உதடுகளைக் குவிப்பதாகத் தோன்றியது.

முத்தத்தின் மேல் ஏன் எனக்கு அத்தனை பைத்தியம் என்று தெரியவில்லை. ஒருவேளை காத்திருந்த அத்தனை வருடத்து முத்தங்களையும் மொத்தமாக வாங்கித் தீர்த்து விடும் வேகமா எனத் தெரியவில்லை.

வாங்கும் பொழுதே கொடுக்கவும் , கொடுக்கும் பொழுதே எடுத்துக் கொள்ளவும் முடிகின்ற ஒன்று முத்தங்கள் மட்டும் தானே.

நான் ஒவ்வொரு முறை அவளைக் காதலிப்பதாகச் சொல்லிய போதும், எனக்கு முன்னால் அவள் நீட்டிய  இரண்டு கைகளிலும் முத்தங்கள் ஒளித்து வைத்ததையே, நான் சலிக்காமல் எடுத்துக் கொண்டிருந்தேன். என் கன்னப் பைகள் முத்தங்கள் கொள்ளாமல் போன பின்பும் அவள் உதடுகள் கொண்டே உள்ளே திணித்துக் கொண்டிருந்தேன். கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்ட ஒரு ரோஹி இறப்பதற்கு முதல் இரவு எல்லாப் பதார்த்தங்களையும் தின்று தீர்ப்பது போல நான் முத்தங்கள் தின்றுகொண்டிருந்தேன். ஆசை மட்டும் தீரவே இல்லை.

அவள் தனது காதலைச் சொல்வதற்கு தகுதியான ஒரு நாளைத் தேர்வு செய்துவிட்டு அதற்காத்தான் காத்துக் கொண்டிருந்தாள் என அப்பொழுது தெரியாது எனக்கு.

ஒன்றுமில்லாத உலகத்தில் மின்னலுடன் மழை பெய்து ஆழி சூழ்ந்து குளிர்ந்த பின்பு , ஒரு செல் உயிரி அமீபா ஆகி , அது வளர்ந்து வால் முளைத்து , அதுவும் ஒட்ட நறுக்கப் பட்டு மனிதனானதற்குள் ஏகப்பட்ட பரிணாம நிலைகள் இருப்பது போலவே, அவள் முத்தம் தர அனுமதி தந்து பின்பு ஒரு நாள் இரவு என்னை வீட்டுக்கு வரச் சொன்னதற்குள்ளும் சில பரிணாம நிலைகள் இருந்தன.

Read the rest of this entry »

Tags: ,

1
Mar

வெண்ணிலா 6 …

   Posted by: Rejovasan   in கதை நேரம்

6

 

As we grow older together, as we continue to change with age, There is one thing that will never change. . . I will always keep falling in love with you.

                                                                                                - Karen Clodfelder

 

கையை அறுத்துக் கொள்வதையும்  , சிவப்பு நிற திரவம் டியுப்களின் வழியாக இறங்குவதைப் பார்த்து ஐ.ஸி.யூ விற்கு வெளியிலிருந்து வாய் பொத்தியபடி அழுதுகொண்டிருப்பதையும் சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.

மருத்துவமனை என்றுமே எனக்குப் பிடிக்காத ஒன்று. அங்கே சதா யாரேனும் அழுதபடியே இருக்கின்றார்கள். கடைசியாக என்னிடம் அழுது முடித்தது மன்சூரின் அம்மா.

“நேத்து நைட் கூட காலைல சீக்கிரம் எழுப்பும்மா .. டான்ஸ் ப்ராக்டிஸ் இருக்குன்னு சொன்னானே .. பாவிப் பய இப்படி பண்ணிக்கிட்டேனே … ” அவரிடம் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.

அவர்கள் யாருக்கும் அவன் ஏன் அப்படிச் செய்து கொண்டான் என்பதற்கான உண்மையான காரணம் தெரியாது. நானும் ஒரு வகையில் காரணம் என்ற எண்ணம் ஏனோ அங்கிருந்து என்னை உடனடியாக எழுந்து போகச் சொல்லித் துரத்திக் கொண்டிருந்தது.

வெண்ணிலா இரவு அங்கேயே தங்கிக் கொள்ளப் போவதாச் சொல்லிவிட்டாள்.

கையை அறுத்துக் கொள்ளுவதென்றால் எவ்வளவு காதல் இருக்க வேண்டும். அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் மன்சூர் கழுதையாகப் பிறக்கட்டும். இந்த ஜென்மத்தில் நான் தான் கழுதை போல.

ஒரு கத்தியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு தடவிப் பார்த்தேன். பயமாக இருந்தது. தூர எறிந்துவிட்டுப் படுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றேன். அபாய நிலை தாண்டி இருந்தான். ஆனால் கண்கள் திறக்க வில்லை. வெண்ணிலா இரண்டொரு வார்த்தைகள் மட்டும் தான் பேசினாள். இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்றாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அவளிடம் ஒருமுறை கூட பேசவில்லை. எந்த குறுஞ்செய்திக்கு அவள் பதிலும் அனுப்ப வில்லை. நான் மனதளவில் தயாராகத் துவங்கினேன்.

புதன் கிழமையும் அவள் அலுவலகம் வரவில்லை. ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அவளது பாட்டி வீட்டிற்கு இன்னமும் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

ஆனால் புதன் கிழமை மன்சூர் அலுவலகத்திற்கு வந்தான்.

Read the rest of this entry »

Tags: ,

 

நான் களைத்திருக்கிறேன்

 

அதிகம் பயணித்திருக்கவில்லை
பயண நோக்கமே புரியாதிருக்கையில்
பயண தூரம் ஒரு பொருட்டல்ல
கணக்கு வைத்திருப்பதும்  ஒரு கணக்கல்ல

 

பாதி தூரம் இலக்கில்லாமல்
அலைந்திருந்திருக்கிறேன்
பாதைகள் மாறி மாறித் தொலைந்திருக்கிறேன்
ஆரம்பித்த இடைத்தையே சந்தித்துச்
சலித்திருக்கிறேன்

 

பாதிப் பொழுதுகளை உறங்கிக்
கழித்திருக்கிறேன்
அநேகநேரம் பேசியபடியே இருந்திருக்கிறேன்
கேட்பவர்கள் இருக்கிறார்களா என்பது
பற்றிய அக்கறையே இன்றி ..

கேட்பவர்கள் இல்லாமல் வார்த்தைகள்
செலவழிப்பது வீண் என்று
மௌனமாக மட்டுமே நகரும்
இந்நாட்கள் பார்கையில் புரிகிறது

இரவெல்லாம் தெருக்கள் தோறும்
குளிர்காற்றோடு
இதுகாறும் நான் பேசித் தீர்த்த
வறட்டு வார்த்தைகள் பெய்து
அதிகரிக்கின்றன
எனைச் சுற்றிலும் வெற்றிடங்களை ..

இன்னும் எத்தனை தூரம்
என்பது பற்றிய பிரக்ஞை
அகன்றாகிவிட்டது ..

ஏனெனில் என் பயணம் பற்றிய கேள்விகளுக்கு
யாரிடமும் பதிலிருக்கப்போவதில்லை
என்னிடமே இல்லையென்கையில்

நான் களைத்திருக்கிறேன்

இருந்தும்
எனக்கு முன்பு  பாதைகள் இருக்கும்வரை
எல்லைகள் பற்றிய எண்ணங்களின்றி
நான் பயணித்திருக்கப் போகிறேன் .

——————————————————————

 

 

 

 

 

Tags:

Page 2 of 1412345...10...Last »