Archive for the ‘தொடரும் …’ Category

27
Jan

வெண்ணிலா … 5

   Posted by: RejovasanTags:

5

“I was half in love with her by the time we sat down.  That’s the thing about girls.  Every time they do something pretty, even if they’re not much to look at, or even if they’re sort of stupid, you fall half in love with them, and then you never know where the hell you are.“

-       J.D. Salinger

 

என் இனிய நண்பர்களே , இந்த நான்கு அத்யாயங்களைப் படித்துவிட்டு வெண்ணிலாவைப் பற்றி நீங்கள் எதையாவது உருவகப்படுத்தியிருந்தால் , அதை நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டிய தருணமிது.

வெண்ணிலா கணிக்கப்படவே முடியாதவள்.

ஒரே நேரத்தில் தண்ணீரைப் போல எனக்குள் விழுந்து என்னை நிறைக்கவும் , நெருப்பைப் போல என்னை இழுத்தணைத்து உருக்கி அவளாக வார்க்கவும் முடிந்திருந்தது.

நான் ஓவியனா இல்லை அவள் வண்ணங்கள் குழைத்துப் பூசி விளையாடும் கிறுக்கலோவியமா ? புரியாமல் ஒன்பதாவது வானத்தில் மிதந்தலைந்த நாட்கள் அவை.

சென்னையின் அதே அங்காடித் தெருக்கள், கடற்கரைச் சாலைகள், மொட்டை மாடி நட்சத்திரங்கள் , அதே எரிபொருள் நிரப்பும் கடைகள் , அதே உணவகங்கள் .. ஆனால் எல்லாமே வேறொரு பரிமாணங்கள் காட்டின.

இது வரையிலும் நான் கேட்காத பேசாத வார்த்தைகளோ அல்ல .. ஆனால் அவளிடம் பேசும் பொழுதும் , அவள் பேசிக் கேட்கும்போழுதும் வேறென்னன்னவோ சொல்லின அதே வார்த்தைகள்.

அவளைப் பற்றி நினைப்பதே  கூட கவிதையாகத்தான் இருந்தது.

அவளைப் பொறுத்த வரையில் நாங்களிருவரும் குரு ரம்யா உடன் செல்கிறோம். ஆனால் உண்மையில் எங்கள் இருவருடன் தான் அவர்கள் வந்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல அவளிடமான எனது அணுகுமுறைகளில் நிறைய மாற்றம் தெரிந்தது. அதை அவள் கவனிக்கவே செய்தாள் . என் மீதான அவள் பார்வையில் நிறையவே மாற்றம் தெரிந்தது. அதை நானும் கவனிக்கவே செய்தேன்.

உறவுகளின் நெருக்கமே உரிமைகள் தருவதிலும் , எடுத்துக் கொள்வதிலும் என புரியவந்த நாட்கள்.

அது ஒரு சனிகிழமை.

Read the rest of this entry »

13
Jan

வெண்ணிலா … 4

   Posted by: RejovasanTags:

4

Do you want me to tell you something really subversive? Love is everything it’s cracked up to be. That’s why people are so cynical about it. It really is worth fighting for, being brave for, risking everything for. And the trouble is, if you don’t risk anything, you risk even more.

                                                                                                            - Erica Mann Jong

குரு.

சண்டாளன். இதுவரை என்னைத் திட்டுவதற்காகவும், புகார் செய்வதற்காகவும் மட்டுமே வாயைத் திறப்பவன் , என்னைப் பார்த்ததும் நரசிமராவ் முகமூடி எடுத்து மாட்டிக் கொள்பவன், எதற்காக என்னைத் தனியாகக் கூப்பிட்டு வெண்ணிலா பற்றி பேசுகிறான் ? ஒரு வேளை அவளுக்கும் தெரிந்து போயிருக்குமோ ? எல்லாருமா என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் ?  என்னென்னவோ கேள்விகள் தோன்றினாலும் முதலில் தோன்றியது இது தான்.

“என்னது குருவும் வெண்ணிலாவ லவ் பண்ணானா ? ” கார்த்திக்கும் ஹரிணியும் ஒருசேரக் கேட்டார்கள்.

அந்த நினைப்பில் எனக்குக் கொஞ்சம் வியர்க்கக் கூடச் செய்ததாக நியாபகம்.

ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு ஒரு மாதிரி ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.

“குட் சாய்ஸ் .. நல்ல பொண்ணு .. ” நெஞ்சில் பாலை வார்த்தான் . அப்பொழுது இவனுக்கு வெண்ணிலா பற்றிய கவலை இல்லை என்றால் ஏன் என்னிடம் தேவை இல்லாத உரையாடல்? அவனே தொடரட்டும் என்று மெளனமாக இருந்தேன்.

“அட்ரெஸ் தவிர அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும் ..? ”

அட்ரெஸ்? இந்த விஷயம் எல்லாம் இவனுக்கு எப்படித் தெரிந்தது? மானமே போச்சு.

“எங்க தெரிஞ்சிகறது ? அவ தான் யார் கூடவும் எதுவும் பேச மாட்டேங்கறாளே .. உன்னைத்  தவிர ..”

“ச்சில்  .. விட்டா அடிச்சிருவ போல ..” அவன் சிரித்தது எனக்கு எரிச்சலாக வந்தது. என் சொந்த விஷயம். உனக்கென்ன , போய் வேலையைப் பார் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லியும் இருப்பேன். அவன் அடுத்து அப்படி சொல்லியிருக்காவிட்டால் ..

“ கவலைப் படாத .. நான் ஹெல்ப் பண்றேன் .. ”

Read the rest of this entry »

7
Jan

வெண்ணிலா … 3

   Posted by: RejovasanTags:


And think not you can Direct the course of love, For love, If it finds you worthy, Directs your course.
                                                                                               -  Kahlil Gibran

 

அந்த இரவு என்னால் நிச்சயமாக மறக்க முடியாதது.

கண்கள் மூடிக்கொண்டு படிக்க முடிகிற ஒரே புத்தகம் கனவு தானே. எத்தனையோ காட்சிகள் என்னறையின் இருளின் ஊடாக கண்களில் விரிந்து கொண்டிருந்தன. எல்லா காட்சிகளிலும் நானும் வெண்ணிலாவும். இடங்களும் பொருட்களும் ஏவல்களும் மாறினாலும் எல்லாவற்றிலும் நானும் வெண்ணிலாவும் மட்டும்.

எனது அலுவலகத்தின் மொட்டை மாடியில் இருந்தோம். வானம் முழுதும் நிலா அடைத்திருந்தது. அவளைத் தழுவிய காற்று வேண்டா வெறுப்பாக என்னையும் மோதிச் சென்றது.

“இன்னும் எவ்ளோ நேரம் தான் பேசாமயே நிக்க போற? ” அவள் கிளம்புவது போல திரும்பினாள்.

நான் மெளனமாக நின்றிருந்தேன். மெளனமாக மட்டுமே நின்றிருந்தேன். எவ்வளவு முயன்றும் என்னால் எதையும் பேச முடியவில்லை. வாயைத் திறக்க முயன்றேன். ஒரு வார்த்தையும் வரவில்லை.

கடைசியில் மிகவும் பிரயாசைப் பட்டு வாயைத் திறந்தேன்.

Read the rest of this entry »

30
Dec

வெண்ணிலா … 2

   Posted by: RejovasanTags:

  

            “When I saw you I fell in love, and you smiled because you knew. “

 

                                                                                     – William Shakespeare

 

அவள் சிரித்தாள் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் முதல் முறை பார்த்த பொழுது சிரிக்கவில்லை.

மிக இயல்பாக சென்று கொண்டிருந்த வாழ்கை மொத்தமாக மாறிப் போனது அவளைப் பார்த்த அந்த வினாடி. என் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இருந்தது எங்கள் முதல் சந்திப்பு.

ஜூன் 18, மணி மூன்று பதினான்கு .. அவளைச் சந்திப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு,

“பிரபு , ஒரு ரெஸ்யூமே அனுப்பிருக்கேன் .. ஆர்த்தி ரீப்ளேஸ்மென்ட்.. எவாலுவேட் பண்ணி சொல்லு ” மல்லிகா, என் ப்ராஜெக்ட் லீட். இரண்டு வாரங்களில் அவர் டென்வர் செல்வதாக இருந்ததால் அடுத்த லீடாக நான் தேர்வாகியிருந்தேன். ட்ரான்சிஷன்  பீரியடில் இருந்தேன்.

மல்லிகா

“ம்ம .. சொல்லுடா ..”

“இந்த ரெஸ்யூமே வேணாம்னு சொல்லிருங்க …”

“ஏன்டா ? என்ன பிரச்சனை ?”

“நல்ல அகாடமிக் மார்க்ஸ்.. அண்ணா யுநிவர்சிட்டி … ட்ரைனிங்ல டாப்பர் ..”

“அப்பறம் என்னடா பிரச்சனை ? ”

“என்ன பிரச்சனைனா , கேண்டிடட் பொண்ணு .. ஏற்கனவே டீம் ல பதினாலு பேர்ல எட்டு பொண்ணுங்க … நைட் ஷிப்ட் பிரச்சனை வரும் .. பையனை எடுத்தா பிரச்சனை இல்லேல .. அதுவும் இல்லாம ப்ரெஷர் வேற .. எல்லாத்தையும் சொல்லித் தரணும் மொதல்ல இருந்து ..”

“பொண்ணுங்கறத எல்லாம் ஒரு காரணமா சொல்ல முடியாது தம்பி ..  நேர்ல கூப்ட்டு பேசு .. எதாவது காரணம் கண்டுபிடிச்சு சொல்லு …திருப்பி குடுத்திடலாம் … ”

“வேற யாரையாவது பண்ண சொல்ல வேண்டியது தான ..”

“ஒரு பொறுப்பு குடுத்தா தட்டிக் கழிக்கக் கூடாது …”

ரெஸ்யூமில் அவளது எண் இருந்தது. அழைத்தேன். காத்திருந்தேன். அத்தனை வருடங்களுக்குப் பிறகான கடைசி இரண்டு நிமிடக் காத்திருப்பு.

“ஹலோ திஸ் இஸ் வெண்ணிலா …”

Read the rest of this entry »

22
Dec

வெண்ணிலா … 1

   Posted by: RejovasanTags:

1
“Love does not begin and end the way we seem to think it does. Love is a battle, love is a war; love is a growing up. “

                                                                                                            – James Baldwin


         நின்று கொண்டிருந்த ரயிலொன்றின் புகையினூடே அவள் உருவம் ஒரு முறை தோன்றி மறைந்து போனது. சக்கரம் நின்ற பிறகு முழு ஒரு ருபாய் நாணயத்தைப் போடவும். சிகப்பு வெள்ளைச் சக்கரம் சுற்றி நின்றது. ஒரு ரூபாய் நாணயம் ஒரு நொடியில் அவளைப் பார்த்த கணத்தில் நான் தொலைந்தது போலவே தொலைந்து போனது.

ஹேய் நீ கொஞ்சம் சதை போட்டன்னு நெனைக்கறேன்

எங்க ?” இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கேட்டாள்.

அங்கயே  தான்

கெட்ட பையன் நீ .. அங்க எல்லாம் ஏன் பாக்கற?”  கோபம் போன்ற கோபமில்லா பார்வை பார்த்தாள்.

என் தப்பு இதுல என்ன இருக்கு .. நியாயமா பார்த்தா பொடவை கட்டின உன்னை நீயே தான் திட்டிக்கணும்

திட்டறேன் .. திட்டறேன் .. நான் ஒன்னும் வெயிட் போடல ..  அதே அம்பத்தாறு தான்

நாலு கிலோ கூடிருக்க ..”  இறக்கி விட மனமில்லாமல் தூக்கியபடியே நின்றிருந்தேன்.

ச்சீ .. கீழ இறக்கிவிடு .. “

வாக்குவாதத்தின் முடிவில் கிண்டி ரயில் நிலையத்தின் எடை பார்க்கும் இயந்திரத்தின் அருகில் இருந்தோம். என் பையில் இருந்து ஒரு ருபாய் நாணயத்தை எடுத்துப் போட்டாள். எனது மனதைப் போடவே ஒரு முறை துடித்து அச்சிடப்பட்ட அட்டையைத் துப்பியது அது. அட்டையை எடுத்துப் பார்த்தவள் கைகளுக்குள் ஒளித்துக் கொண்டாள்.

இப்போ எதுக்கு மறைக்கற .. ஒழுங்கா காட்டு ..”

ம்ம்ஹீம் .. மாட்டேன்உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லியா .. “

கண்ணா பின்னான்னு காட்டிருச்சோ ..? “

நீ மட்டும் என்ன .. நீயும் தான் வெயிட் போட்ட ..”

அப்படியாஎவ்ளோன்னு சொல்லு பாப்போம் .. ” கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு சொன்னேன்.

மேலும் கீழும் பார்த்தவள்தொண்ணூறுஎன்றாள்.

இது போங்கு.. ஒழுங்கா தூக்கிப் பார்த்து சொல்லு ..”

ஆஹா .. ஆசை தான் .. ஒழுங்கா மெஷின் மேல ஏறி நில்லு “  இது போன்ற பாவனைகளை எல்லாம் எந்த தேவதையிடமிருந்து கற்றுக் கொள்ளுகிறாளோ !

என்னைப் போலவே ஏமாற்றத்துடன் பெருமூச்சுவிட்டது இயந்திரம். Read the rest of this entry »

 

கடவுளான பின்

 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு

 

சும்மாயிருக்க முடியுமா ..?

 

 

 

என்னென்ன கடமைகள்

 

என்னென்ன கவலைகள்

 

என்னென்ன சலுகைகள்

 

 

 

பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …

 

 

நான் வாங்கும் சம்பளம் போல

 

உடனே தீர்ந்து போனது

 

ஒட்டு மொத்தக் காகிதமும்

 

 

 

மிட்டாய் வாங்கித் தருவதாக

 

வாக்குறுதி தந்து

 

என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து

 

கிழித்த காகிதங்கள்

 

கணத்தில் காணாமல் போயின

 

 

 

இன்றைக்கு இது போதும்

 

கடவுள் வேலை கடினமானதோ

 

களைத்துப்போனதே பட்டியலுக்கே

 

கண்கள் கெஞ்ச

 

துவங்கலாம் வேலை நாளையிலிருந்து

 

தூங்கிப்போனேன்

 

—————————————

Read the rest of this entry »

 

 

எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்


எண்பத்தி ஒன்றவதாகத்


தேடிகொண்டிருக்கிறேன்


ஒரு பிச்சைக்காரனை


—————————


பரவாயில்லை அது


பிச்சைக்காரி என்ற போதிலும்


—————————


தலைகவசத்தை விட


தர்மமே தலை காக்குமாம்


வாகனம் வாங்கும் போது


கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம்


—————————–


அதனால்


என் இப்போதைய அவசரத் தேவை


தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம்


ஒரே பிச்சைப்பாத்திரம்.


 


விளம்பரமா கொடுக்கமுடியும்


தினசரிகளில் இதற்காக ..



கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன்

Read the rest of this entry »

 

 

உதடுகள் சில்லிட்டுப்போகும்

ஒரு முன்பனிக் காலத்தில்

உன் படுக்கையிலிருந்து

கனவு கலையாமல்

தூங்கும் தேவதையாய்

தூக்கிச் செல்வேன்

சிறகுகள் தந்து ..

 

———————————————- 

Read the rest of this entry »

17
Nov

சர்வம் சூன்யம்-7

   Posted by: RejovasanTags: ,

 

 

அபூர்வா .. அபூர்வா .. அபூர்வா …

 

அவள் மூஞ்சியைப் பார்க்க வேண்டுமே .நல்ல பெண் போல சேலையைப் போர்த்திக் கொண்டு வந்து எதுவுமே தெரியாதவள் போல் என் முன்னாலேயே வந்து நிற்கிறாள் . நீல நிற புடவை .

 

நான் வெறுக்கும் ஒரே நிறம் . ச்சே நீங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டீர்களே .

நீதி மன்றத்தில் …. சாதனாவை கொன்றவர்களை சும்மா விடலாமா .. இல்லை விட்டு தான் விடுவேனா … கொஞ்சம் நேரம் தப்பியிருந்தால் என்னையும் கொன்றுவிட்டிருப்பார்கள் . மென் ஆப் ஹாலோசாம் .. சன் ஆப் ……… உங்களுக்கு நடந்ததை எப்படித் தெளிவாக சொல்லுவது . ஹ்ம்ம் .. சரி .. அது தான் சரி .. நானே நடித்துக் காட்டுகிறேன் .

 

நான் தான் அபூர்வா இப்பொழுது .

 

இப்படித்தானே புடவைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, தலையைக்  குனிந்து கொண்டு  இரண்டு கால்களையும் இணைத்து வைத்துக் கொண்டு நின்றாள்.”நான் சொல்வதெல்லாம்  உண்மை .. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை ” முதலில் பகவத் கீதையை அவமதிப்பதை

நிறுத்த வேண்டும் .

 

“நீங்கள் எதாவது கூற விரும்புகிறீர்களா அபூர்வா ” எனக்கு அந்த நீதிபதியைப் பிடிக்கவே இல்லை . எதுவும் விசாரிக்காமல் தூக்கில் போட்டிருக்க வேண்டாமா அவளை .நான் சொல்லுகிறேன் போதாதா .. அதென்ன நம்பிக்கை இல்லாமல்

அவளையும் கேட்பது .

 

நீலிக் கண்ணீர் .. நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் . “என் கணவர் இப்படி ஒரு குற்றம் சுமத்தும் பொழுது நான் என்ன சொல்ல …” அடேயப்பா .. எப்பேர்ப்பட்ட நடிப்பு .

Read the rest of this entry »

17
Nov

சர்வம் சூன்யம் -6

   Posted by: RejovasanTags: ,

 

அபூர்வாவின் காதல் முகம் ஒருமுறை வந்து போனது மனதில் .பிரமை பிடிப்பது என்றால் என்ன என்பதன் முழு அர்த்தம் விளங்கக் கண்டேன் . என் தோள் தொட்டாள் சாதனா .

 

“அப்படின்னா , அபூர்வா வேற்றுகிரகத்தச் சேர்ந்தவளா??”

 

கைகளைக் கட்டிக் கொண்டு தலையசைத்தாள் . “யார் சொன்னது ?”

 

“என்ன தான் சொல்ல வர நீ ?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்றியா ??”

Read the rest of this entry »

Page 1 of 212