Archive for the ‘தொடரும் ...’ Category

 

கடவுளான பின்

 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு

 

சும்மாயிருக்க முடியுமா ..?

 

 

 

என்னென்ன கடமைகள்

 

என்னென்ன கவலைகள்

 

என்னென்ன சலுகைகள்

 

 

 

பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …

 

 

நான் வாங்கும் சம்பளம் போல

 

உடனே தீர்ந்து போனது

 

ஒட்டு மொத்தக் காகிதமும்

 

 

 

மிட்டாய் வாங்கித் தருவதாக

 

வாக்குறுதி தந்து

 

என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து

 

கிழித்த காகிதங்கள்

 

கணத்தில் காணாமல் போயின

 

 

 

இன்றைக்கு இது போதும்

 

கடவுள் வேலை கடினமானதோ

 

களைத்துப்போனதே பட்டியலுக்கே

 

கண்கள் கெஞ்ச

 

துவங்கலாம் வேலை நாளையிலிருந்து

 

தூங்கிப்போனேன்

 

—————————————

Read the rest of this entry »

 

 

எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்


எண்பத்தி ஒன்றவதாகத்


தேடிகொண்டிருக்கிறேன்


ஒரு பிச்சைக்காரனை


—————————


பரவாயில்லை அது


பிச்சைக்காரி என்ற போதிலும்


—————————


தலைகவசத்தை விட


தர்மமே தலை காக்குமாம்


வாகனம் வாங்கும் போது


கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம்


—————————–


அதனால்


என் இப்போதைய அவசரத் தேவை


தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம்


ஒரே பிச்சைப்பாத்திரம்.


 


விளம்பரமா கொடுக்கமுடியும்


தினசரிகளில் இதற்காக ..



கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன்

Read the rest of this entry »

 

 

உதடுகள் சில்லிட்டுப்போகும்

ஒரு முன்பனிக் காலத்தில்

உன் படுக்கையிலிருந்து

கனவு கலையாமல்

தூங்கும் தேவதையாய்

தூக்கிச் செல்வேன்

சிறகுகள் தந்து ..

 

———————————————- 

Read the rest of this entry »

17
Nov

சர்வம் சூன்யம்-7

   Posted by: RejovasanTags: ,

 

 

அபூர்வா .. அபூர்வா .. அபூர்வா …

 

அவள் மூஞ்சியைப் பார்க்க வேண்டுமே .நல்ல பெண் போல சேலையைப் போர்த்திக் கொண்டு வந்து எதுவுமே தெரியாதவள் போல் என் முன்னாலேயே வந்து நிற்கிறாள் . நீல நிற புடவை .

 

நான் வெறுக்கும் ஒரே நிறம் . ச்சே நீங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டீர்களே .

நீதி மன்றத்தில் …. சாதனாவை கொன்றவர்களை சும்மா விடலாமா .. இல்லை விட்டு தான் விடுவேனா … கொஞ்சம் நேரம் தப்பியிருந்தால் என்னையும் கொன்றுவிட்டிருப்பார்கள் . மென் ஆப் ஹாலோசாம் .. சன் ஆப் ……… உங்களுக்கு நடந்ததை எப்படித் தெளிவாக சொல்லுவது . ஹ்ம்ம் .. சரி .. அது தான் சரி .. நானே நடித்துக் காட்டுகிறேன் .

 

நான் தான் அபூர்வா இப்பொழுது .

 

இப்படித்தானே புடவைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, தலையைக்  குனிந்து கொண்டு  இரண்டு கால்களையும் இணைத்து வைத்துக் கொண்டு நின்றாள்.”நான் சொல்வதெல்லாம்  உண்மை .. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை ” முதலில் பகவத் கீதையை அவமதிப்பதை

நிறுத்த வேண்டும் .

 

“நீங்கள் எதாவது கூற விரும்புகிறீர்களா அபூர்வா ” எனக்கு அந்த நீதிபதியைப் பிடிக்கவே இல்லை . எதுவும் விசாரிக்காமல் தூக்கில் போட்டிருக்க வேண்டாமா அவளை .நான் சொல்லுகிறேன் போதாதா .. அதென்ன நம்பிக்கை இல்லாமல்

அவளையும் கேட்பது .

 

நீலிக் கண்ணீர் .. நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் . “என் கணவர் இப்படி ஒரு குற்றம் சுமத்தும் பொழுது நான் என்ன சொல்ல …” அடேயப்பா .. எப்பேர்ப்பட்ட நடிப்பு .

Read the rest of this entry »

17
Nov

சர்வம் சூன்யம் -6

   Posted by: RejovasanTags: ,

 

அபூர்வாவின் காதல் முகம் ஒருமுறை வந்து போனது மனதில் .பிரமை பிடிப்பது என்றால் என்ன என்பதன் முழு அர்த்தம் விளங்கக் கண்டேன் . என் தோள் தொட்டாள் சாதனா .

 

“அப்படின்னா , அபூர்வா வேற்றுகிரகத்தச் சேர்ந்தவளா??”

 

கைகளைக் கட்டிக் கொண்டு தலையசைத்தாள் . “யார் சொன்னது ?”

 

“என்ன தான் சொல்ல வர நீ ?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்றியா ??”

Read the rest of this entry »

“அபூ ….அபூ ..ர்ர்ர் … வ ..வா … வேணாம் .. கிட்ட வராத .. என்னை ஒன்னும் பண்ணிடாத … ” வாய் குழறியது . பின்னாலேயே நகர்ந்து  சென்றேன் .சுவர் இடித்தது ..   கீழே இறங்கினாள் . கொடியில் கிடந்த துண்டை எடுத்து  சுற்றிக் கொண்டாள் . நான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தேன் .  கீழே கிடந்த கத்தியை எடுத்தாள் . நிதானமாக என்னை நோக்கி நடந்து வந்தாள் .

 

“ப்ளீஸ் .. வேணாம் .. என்ன விட்டிடு ” கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை .. இடது கையை ஊன்றி சுவற்றில் சாய்ந்து எழுந்தேன் . கை நரம்பு வலித்தது . மீண்டும் கீழே விழுந்தேன் .கத்தியை இரண்டு கைகளாலும் பிடித்து என்னை நோக்கி உயர்த்தினாள்.

 

“இப்போ என்ன … என்னை கத்தியால குத்தனுமா ? இந்தாங்க .. குத்துங்க ..” என்னை நோக்கி நீட்டினாள் .

 

“இல்ல .. வேணாம் .. தப்பு .. பண்ணிட்டே .. ன் ..”  வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது .

 

“சரி நானே குத்திக்கறேன் ” உயர்த்திய கைகளை தன் மார்பை நோக்கிச் செலுத்தினாள். வெள்ளை ரத்தம் பீச்சிட்டுக் கொண்டு என்  முகத்தின் மேல் அடித்தது . சிரித்தாள் .. மிக சப்தமாக . வாஷ் பேசின் குழாயைத் திறந்து பொறுமையாக கத்தியைக் கழுவத்  தொடங்கினாள்.   என் நரம்புகள் இழுத்துக் கொண்டன . மொத்தமாக நினைவிழப்பதற்கு முன் கடைசியாக உதடுகள்

 பிரிந்தன .

 

“சா .. சாதனா .. நீ எங்கே ???”

Read the rest of this entry »

 

சர்வம்-4

சர்வம்-4

“அப்பூர்வாஆஆஆ “

 

 

 

“பாருங்க .. என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு . எல்லாம் உங்களால தான் ” கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாள் . ரத்தம் வழிந்து கொண்டிருந்தது . வளையல் கீரியதற்கு இவ்வளவா .தரையெல்லாம் வேறு சிதறியிருந்தது . கொழ கொழவென்று ….. ஆனால் வெள்ளையாக .

தலை சுற்றியது . எல்லாம் மங்கலாகத் தெரி …….

Read the rest of this entry »

சர்வம்-3

சர்வம்-3

“அபூர்வா பாவமில்லையா ? இவ்வளவு காதலித்துவிட்டு அவளைக் கொல்ல எப்படி உனக்கு மனது வருகிறது ? “

தெரியும் எனக்கு , உங்களுக்கும் அவளைத் தான் பிடிக்கும் என்று . நான் சொல்ல வந்ததை முழுதாகக் கேட்டு விட்டு பின் முடிவு செய்யுங்கள் யார் பாவமென்று. சில சம்பவங்களைச் சொன்னால் தான் உங்களுக்குப் புரியும் . நீங்கள் என்னை முழுவதுமாக நம்பித்தான் ஆக வேண்டும் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . அபூர்வா சாதரண பெண் அல்ல .. ஒரு வேளை அவள் பெண்ணாகவே கூட இல்லாமல் இருக்கலாம் .

மூன்று நாட்களுக்கு முன்பு ,

Read the rest of this entry »

சர்வம்-2

சர்வம்-2

அபூர்வாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது . யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் இவள் போன்ற ஒரு பெண்ணை . அபூர்வா . அவளை நான் சந்தித்தது எல்லா காதல் கதைகளிலும் வருவது போல , தாவணி கட்டிக் கொண்டு , பூ வைத்துக் கொண்டு ஏதோ ஓர் கோவில் பிரகாரத்தை அவள் சுற்றி வரும் போதல்ல .. முதலில் .கோவிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , இது காதல் கதையுமில்லை .

எங்கள் சந்திப்பு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதா எனத் தெரியாது எனக்கு .ஆனால் அவளை நான் பார்த்த வினாடியில் தான் எனக்கான சொர்க்கம் நிச்சயிக்கப்பட்டது . அம்மா கிடையாது எனக்கு . அப்பா … இருக்கிறார் .. எங்கோ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வினாடிகளைக் காசாக்கிக் கொண்டு . எனக்கென்று யாரும் கிடையாது . எந்த பொறுப்பும் கிடையாது .பெண்பார்க்கக் கூட தூரத்து பெரியம்மாவைத் தான் கூட்டிக் கொண்டு போயிருந்தேன் .

அதிகபட்சம் ஆறு நாட்கள் காதலித்திருப்பேன் . அதற்குள் எல்லாம் முடிந்து , இப்பொழுது என் மார்பில் அவள் காதனியின் அச்சுப் பதியும் தொலைவில் இருக்கிறாள் . நிறைய படித்துவிட்டேன் . நிறைய வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்தும் இட்டாகிவிட்டது . இனிமேல் மை நிச்சயம் தீராது எனத் தீர்மானித்த ஒரு நாளில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தோன்றியது . நேர் கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைக்கும் சில திருப்பங்கள் தேவைப்பட்டன .

Read the rest of this entry »

 

சர்வம் 1

சர்வம் 1

அபூர்வாவை ஒருமுறை பார்த்தவர்களால் நிச்சயமாய் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது . சாதாரணமாக வெறும் அழகென்று மட்டும் அதைச் சொல்லி விட முடியாது .நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன் . ஆனால் இவள் கொஞ்சம் அபூர்வமானவள் பெயரைப் போலவே .இவ்வளவு நிச்சயமாக நான் சொல்வதற்கு காரணமில்லாமல் இல்லை . அவள் வீணையைக் கையிலெடுத்த பொழுது தரகர் சத்தமாக காபியை உறிந்தது வரை நியாபகமிருக்கிறது . “எங்கயும் ஓடிட மாட்டா .. இப்போவே பார்த்து தீர்த்திடாத .. கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி என்ன பண்றதுன்னு யோசனை வந்திடும் ” என்று பெரியம்மா என் விலாவில் இடிக்கும் வரை அவளைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை .எல்லாரும் சிரித்தார்கள் என்றாலும் அபூர்வாவின் மௌனப் புன்னகை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது என் கண்களில் .

காபி தம்ளரை வாங்குகையில் வேண்டுமென்றே அவள் விரல் தொட்ட ஸ்பரிசம் தான் என்னுள் எழுகிறது ஒவ்வொருமுறை அவளைத் தொடும் போதும் . பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தெரிகிறாள் .

Read the rest of this entry »