
அழுது கொண்டிருந்தான் ஆதாம்
இறைவன் காலடியில் …
என்னால் தானே இவ்வளவும் !
அவள் மீது கொண்ட நேசத்தால்
ஆப்பிள் கடிக்கப்போய் நாசமல்லவா இன்று …
அறிவைக் கொடுத்திருக்கலாம் ஆப்பிள்
அறிவியலையும் வளர்த்திருக்கலாம் !
ஆனால் அதன் குட்டிகள்
குடித்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் குருதியல்லவா?
என்னால் உண்டான நரகத்தை
காண விரும்பவில்லை
நான் மட்டும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு
என்னைத் தொலைத்து விடு எங்கேனும் - இல்லை
சூன்யத்திலாவது புதைத்து விடு
விளையாட்டைத் தொடங்குவோமா
மீண்டும் ? இறைவன்.
ஆயிரம் மின்னல்கள்
ஒருசேர ஜனித்து மடிந்தன
ஆதாமின் கண்களில் .
ஆடப்போகும் பரமபதத்தில்
இம்முறை ஏணிகளில்லை,
சர்ப்பம் மட்டும் ஒன்றேயொன்று
முடிந்து போன ஆட்டத்தின் ஆறுதல் பரிசாக
தழும்புகள் உனக்கு மட்டும்
கூட்டைக் கிழித்துச் சிறகுவிரிக்கும்
பட்டுப்பூச்சி போல் பழையநினைவுகள் இன்றி
புதிதாகவே படைக்கப் படுவாள் ஏவாள்
இது ஒத்திகைதான்.
எல்லாமும் சரியாக நடந்தால்
ஒத்திகை நிஜமாகும் , நிஜம் ஒத்திகையாகும்.
என்ன சம்மதமா ?
முட்டாளாக மாட்டேன் மீண்டும் ஒருமுறை
தலையசைத்தான்
கடிகாரமுள் திசைமாற்றிச் சுற்றத் தொடங்கியது.
Read the rest of this entry »

கடவுளான பின்
கால் மேல் கால் போட்டுக்கொண்டு
சும்மாயிருக்க முடியுமா ..?
என்னென்ன கடமைகள்
என்னென்ன கவலைகள்
என்னென்ன சலுகைகள்
பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …
நான் வாங்கும் சம்பளம் போல
உடனே தீர்ந்து போனது
ஒட்டு மொத்தக் காகிதமும் …
மிட்டாய் வாங்கித் தருவதாக
வாக்குறுதி தந்து
என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து
கிழித்த காகிதங்கள்
கணத்தில் காணாமல் போயின …
இன்றைக்கு இது போதும்
கடவுள் வேலை கடினமானதோ
களைத்துப்போனதே பட்டியலுக்கே…
கண்கள் கெஞ்ச
துவங்கலாம் வேலை நாளையிலிருந்து
தூங்கிப்போனேன் …
—————————————
Read the rest of this entry »

எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்
எண்பத்தி ஒன்றவதாகத்
தேடிகொண்டிருக்கிறேன்
ஒரு பிச்சைக்காரனை …
—————————
பரவாயில்லை அது
பிச்சைக்காரி என்ற போதிலும் …
—————————
தலைகவசத்தை விட
தர்மமே தலை காக்குமாம் …
வாகனம் வாங்கும் போது
கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம் …
—————————–
அதனால் …
என் இப்போதைய அவசரத் தேவை
தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம் …
ஒரே பிச்சைப்பாத்திரம்.
விளம்பரமா கொடுக்கமுடியும்
தினசரிகளில் இதற்காக ..
கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன் …
Read the rest of this entry »
அய்யாமாரே அம்மாமாரே
எல்லாந்த் தெரிஞ்ச ராசாமாரே
கொஞ்ச நேரம் நில்லுங்க …
எம்முன்னால இல்லாத
என்னாச அவரோட
கடைசியா நாம்பேசும்
இந்தப் புழுதி மேட்டுக் காதலோட
மொத்தக் கதையும் கேட்டுப்புட்டு
எந்தப்பு இதில் என்னன்னு
எதாச்சும் தெரிஞ்சதுன்னா
எங்கிட்ட சொல்லுங்க ….
எல்லாப் பெண்டுக போலவே நானும்
எட்டுப்புள்ளிக் கோலம் போட்டும்
தாயமாடக் கோடு போட்டும்
ஒத்தக் காலில் நொண்டி ஆடி
கண்ணக் கட்டிப் பாண்டி பாடி
சந்தோசமாத் தான இருந்தேன் ..
எப்ப ஒன்னப் பாத்தேனோ
அப்பவே நான் தொலைஞ்சு போனேன்
உள்ளுக்குள்ள செவந்து போனேன் …
Read the rest of this entry »
வெகு காலத்திற்கு முன்பு
காலமும் நானும் கூட
கணக்கு வைக்க மறந்துபோன
ஏதேதோ நாட்களில் தொலைந்து போன
என்னிழல்கள்
கூடியிருந்தன ஒன்றாய் …
அத்தனை நிழல்களும் ஆடையில்லாமல்
உண்மையின் நிர்வாணத்துடன்
இன்று மட்டும் உண்மை மட்டும்
உறுதியாய் இருந்தன அத்தனையும் …
இதுகாறும்
மௌனங்கள் மட்டுமே மந்திரமாய்
முணுமுணுத்துக் கொண்டிருந்த
அவைகளின் உதடுகள்
இத்தனை நாட்களுக்கும் சேர்த்து
தொலைந்த கதை பேசத்துவங்கின ..
Read the rest of this entry »

மழைவாசமும்
மழலை வாசமும்
பிடிக்காதவர்கள் உண்டா
யாரேனும் இங்கே ??
நீங்கள் பட்டியல் எடுப்பதாயிருந்தால்
விசாரிக்கத் தேவை இல்லை
என்னைப் பற்றி…
இருக்காது நிச்சயம்
என் பெயர் அதில் …
நாட்காட்டியுடன்
நவம்பர் மாதத்திற்காக
காத்திருப்பவன் நானும் தான் …
அடுக்குமாடிக் குடியிருப்பில்
அடைக்கப்பட்டவர்களில்
ஒருவன் தான் என்றாலும்
நானொரு மழைப்பாடகன் என்பதில்
என்றுமே பெருமை உண்டெனக்கு …
அடைமழை பெய்யும் போது
அணைப்பதில் விருப்பம் சிலருக்கு
எட்ட நின்று ரசிப்பதில்
திருப்தி பலருக்கு …
உதடு குவித்து
முத்தம் தரப் பிடிக்கும்
சிலருக்கு
உள்ளங்கை காட்டி
முத்தம் வாங்கப் பிடிக்கும்
பலருக்கு …
மழையினில் நனைந்து
கொட்டும் ஒவ்வொரு துளியையும்
குருதியில் குழைத்து
மழையாகிடவே கனவெனக்கு..
எனது சில ஆயிர வினாடிகளுக்கு
தற்காலிக ஓய்வு தந்துவிட்ட
மாலை நேரம் அது
மெல்ல மழைநேரமாயும்
ஆகிக் கொண்டிருந்தது …
உதறிவிட்டாலும் சிதறியதுளிகள்
மீண்டும் சென்று மேகம் சேரும் …
உன் போலத்தானா
நானும் மழையே ..!
மழை தொட்டு
முத்தமிட்ட மண் கிளம்பும்
வாசம் போல்
என்னுள் சுவாசமாய் கலந்துவிட்ட
நம் நியாபகங்கள் …
எப்படி இருக்கிறாய்
என் பிரிய தோழி …
Read the rest of this entry »

பாவம் என் வீட்டுக் கண்ணாடி.
ஏய்..
என்ன ?
ஒன்று சொல்ல வேண்டும்
உன்னிடம் .
என்ன சொல்லிவிடப் போகிறாய்
புதிதாக …
இல்லை இது புதிது தான்.
உண்மையாகவேவா
ஆம்
ஏமாற்றிவிடமாட்டாயே
சென்றமுறை போல் .
மாட்டேன் .
………………………………
கண்ணாடி மேல் சத்தியம் .
சரி சொல் .
தூக்கம் துரத்தும் அதிகாலை வேளையில்
எழுந்து ஓடத்துவங்குகிறேன் நான் …
எங்கே ???
தெரியாது .
எழுந்ததும் எதற்கோ கொஞ்சம்
பல்லைக் காட்ட வேண்டும்
எதாவது செய் - சில வினாடிகளாவது
சொட்ட வேண்டும் தலையில் தண்ணீர் ..
ஏன் ???
தெரியாது .
பின் கண்ணாடியில்
கண்டுபிடிக்க வேண்டும்
என் பிம்பத்தை …
பாவம் என் வீட்டுக் கண்ணாடி
என் பிம்பம் பார்த்தே
கண் மங்கிப் போனது …
எத்தனை முறை சொல்வாய்
இதையே
தெரியுமெனக்கு ஏமாற்றுகிறாய்
நீயென்னை..
இனிமேல் தான் புதிது .
Read the rest of this entry »