கனவில் வருபவள் 5
என் விரல்கள் பேசிய கவிதைகளே
இன்னும் சந்திக்க வில்லை
முட்டாள் உதடுகள்
அவைகளும் பேச வேண்டுமாம்
———————————————————- Read the rest of this entry »
தொலைந்து போன
ஜன்னல் தேடி
காற்று வீசிப் போகுமோ …
கலைந்து போன
கனவின் மீதி
கண்கள் மீண்டும் கேட்குமோ …
கரைந்து போன
மெழுகின் வாசம்
திரிகள் கருகித் தேடுமோ ..
பறந்து வந்த
திசையின் திசையை
மறந்து பறவை தவிக்குமோ …
என் விரல்கள் பேசிய கவிதைகளே
இன்னும் சந்திக்க வில்லை
முட்டாள் உதடுகள்
அவைகளும் பேச வேண்டுமாம்
———————————————————- Read the rest of this entry »
எனக்கான தலைவிதி
உன் கண்களில் ஓடும்
ரேகைகளில் இருக்கிறது …
———————————————————-
எல்லா நதியின் பயணமும்
கடல் தேடியே
நதியாகிறேன் நானும் …
————————————————————-
பிறக்கும் போதே
ஒட்டவைக்கப்பட்டிருந்தன
உன் உதட்டில் என் புன்னகைகளும்
என் கண்களில் உன் கண்ணீரும் …
—————————————————
காதல் கவிதைகள் அழகானவை
எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன
யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ
அவர்களைத் தவிர ..
————————————————————-