Archive for the ‘ஆதலினால் கவிதை’ Category

22
Jan

களிமண்ணின் கதை

   Posted by: RejovasanTags: ,

ஒன்பது மாத சொச்சம்

விடாது பெய்திருந்த மழையின்

மறுநாளில் கண்டெடுத்திருந்தார்கள்

அந்தக் களிமண்ணை …

 

எத்தனை முறை வேண்டுமானாலும்

எப்படி வேண்டுமானாலும்

எதற்கு வேண்டுமானாலும்

எதற்குள் வேண்டுமானாலும்

மாற்றிக்கொள்ள

மாறிக்கொள்ள முடிந்திருந்தால்

ஊரில் எல்லாருக்கும் அதைப் பிடித்திருந்தது …

 

தண்ணீரைப் போல என்றாலும் – அது

தண்ணீரல்ல களிமண் என

மறந்து போனார்கள் …

 

அதைக் கண்டெடுத்த குயவன்

அவன் பழக்கப்படி பானையாக்கலாம் என்றான் …

 

பக்கத்து வீட்டுக்காரர்கள் அதுதான் சரி என்றார்கள் …

 

ஊரின் உபாத்தியாயர்

அ னா ஆ வன்னா சொல்லிக்கொடுத்து

வேலைப்பாடுகள் கொண்ட கூஜா ஆக்கினால்

பட்டணத்திற்கு விற்கலாம் என்றார் ..

 

பக்கத்து வீட்டுக்காரகள் அதுதான் சரி என

பிரம்பெடுத்துத் தந்தார்கள் …

 

அந்தத் தெருவின் சாயமிடுபவன்

நிறப்பூச்சுப்பூச்சு செய்தால்

வெளிநாட்டில் மவுசு என்றான் …

 

பக்கத்து வீட்டுக்கார்கள் அது தான் சரி என

அதற்கு முன் விலைபோன

உறவினர்களின் பானைகள் பற்றிய கதைகளை

விடியும் வரை பேசியிருந்தனர் …

 

யார் விருப்பப்படியும் மாறிக்கொண்டே

இருக்க முடிந்ததால்

எதுவாகவும் ஆகமுடியவில்லை களிமண்ணால் …

களிமண்ணாகவே இருந்தது

கடைசி வரைக்கும் …

 

களைத்துப் போன எல்லாரும்

அதை என்ன செய்வதென்று தெரியாமல்

குப்பைத்தொட்டியில் போட முடிவு செய்தனர் ..

 

எல்லாரும் உறங்கிய நள்ளிரவில் ரகசியமாய்

பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் ..

ஒரு முறையாவது வாய் திறந்து

அதற்கு என்ன வேண்டுமென பேசியிருந்தால்

அது களிமண்ணாகவே இல்லாமல்

இருந்திருக்கக் கூடுமென ….

 

—————————————————————————————-

இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும்

சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது

வாய் புகுந்து மீண்டால்

இன்னொரு தெரு

இன்னொரு வாசல்

தப்ப முடியாதென்றே தெரிகிறது …

உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது

மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது

இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி

தொலைந்து போகத் தோன்றுகிறது

பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும்

மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது

மதில் மேல் பூனையாய் என் நிழல்

எந்தப் பக்கம் விழும் …

நிழலைத் துரத்திக் கொண்டு நானும்

என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும்

ஓடிக் கொண்டேயிருக்கிறோம்

Read the rest of this entry »

6
Mar

கண்ணாமூச்சி …

   Posted by: RejovasanTags:

 

அறிமுகமில்லாத தெருக்கள்
நீண்டு கொண்டே செல்கின்றன
எந்தத் திருப்பத்தில்
வெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….

காற்றில் பறக்கும் இறகென 
அருகில் வருகிறாய்
விரல் தொடும் நேரத்தில் 
விலகி மிதக்கிறாய் ..

கண்களை மூடிக் கொண்டு
உன்னை நெருங்கிடப் பார்க்கிறேன் ..

நினைவுக்கு வர மறுக்கும் கனவென
பிம்பங்கள் அல்லாத
தடையங்கள் மட்டும் – நீ
வந்து போனதன் அடையாளமாய்
விழிகளுக்குள்  இருக்கின்றன …

யுகங்கள் தேடி – உனை
நெருங்கிடும் சமயங்களில்
கிடைத்தல் அல்ல
தேடல் சுகமென்கிறாய்
விரும்பித் தொலைக்கிறேன் …

எந்தத் திருப்பத்தில்
வெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….

 

நான் களைத்திருக்கிறேன்

 

அதிகம் பயணித்திருக்கவில்லை
பயண நோக்கமே புரியாதிருக்கையில்
பயண தூரம் ஒரு பொருட்டல்ல
கணக்கு வைத்திருப்பதும்  ஒரு கணக்கல்ல

 

பாதி தூரம் இலக்கில்லாமல்
அலைந்திருந்திருக்கிறேன்
பாதைகள் மாறி மாறித் தொலைந்திருக்கிறேன்
ஆரம்பித்த இடைத்தையே சந்தித்துச்
சலித்திருக்கிறேன்

 

பாதிப் பொழுதுகளை உறங்கிக்
கழித்திருக்கிறேன்
அநேகநேரம் பேசியபடியே இருந்திருக்கிறேன்
கேட்பவர்கள் இருக்கிறார்களா என்பது
பற்றிய அக்கறையே இன்றி ..

கேட்பவர்கள் இல்லாமல் வார்த்தைகள்
செலவழிப்பது வீண் என்று
மௌனமாக மட்டுமே நகரும்
இந்நாட்கள் பார்கையில் புரிகிறது

இரவெல்லாம் தெருக்கள் தோறும்
குளிர்காற்றோடு
இதுகாறும் நான் பேசித் தீர்த்த
வறட்டு வார்த்தைகள் பெய்து
அதிகரிக்கின்றன
எனைச் சுற்றிலும் வெற்றிடங்களை ..

இன்னும் எத்தனை தூரம்
என்பது பற்றிய பிரக்ஞை
அகன்றாகிவிட்டது ..

ஏனெனில் என் பயணம் பற்றிய கேள்விகளுக்கு
யாரிடமும் பதிலிருக்கப்போவதில்லை
என்னிடமே இல்லையென்கையில்

நான் களைத்திருக்கிறேன்

இருந்தும்
எனக்கு முன்பு  பாதைகள் இருக்கும்வரை
எல்லைகள் பற்றிய எண்ணங்களின்றி
நான் பயணித்திருக்கப் போகிறேன் .

——————————————————————

 

 

 

 

 

 

ஒரு பொம்மையென
எனைக் கைகளுக்குள்
ஒளித்துக்கொள்விளையாடித் தீர்த்துவிட்டு
கை கால் கண்கள் பிய்த்துத்
தூக்கி எறி

உன் ஸ்பரிசங்கள் பற்றிய
நினைவுகளுடன்
காலத்திற்கும் புன்னகைத்துக் கிடப்பேன்
உன்  பொம்மைகளின் குப்பைத் தொட்டியில்

 

அழுது கொண்டிருந்தான்  ஆதாம்
இறைவன் காலடியில் …

என்னால் தானே இவ்வளவும் !

அவள் மீது கொண்ட நேசத்தால்
ஆப்பிள் கடிக்கப்போய் நாசமல்லவா இன்று …

அறிவைக் கொடுத்திருக்கலாம் ஆப்பிள்
அறிவியலையும் வளர்த்திருக்கலாம் !
ஆனால்  அதன் குட்டிகள்
குடித்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் குருதியல்லவா?

என்னால் உண்டான நரகத்தை
காண விரும்பவில்லை
நான் மட்டும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு
என்னைத் தொலைத்து விடு எங்கேனும் – இல்லை
சூன்யத்திலாவது புதைத்து விடு


விளையாட்டைத் தொடங்குவோமா
மீண்டும் ? இறைவன்.

ஆயிரம் மின்னல்கள்
ஒருசேர  ஜனித்து மடிந்தன
ஆதாமின் கண்களில் .

ஆடப்போகும் பரமபதத்தில்
இம்முறை  ஏணிகளில்லை,
சர்ப்பம் மட்டும் ஒன்றேயொன்று

முடிந்து போன ஆட்டத்தின் ஆறுதல் பரிசாக
தழும்புகள் உனக்கு மட்டும்
கூட்டைக் கிழித்துச் சிறகுவிரிக்கும்
பட்டுப்பூச்சி போல் பழையநினைவுகள் இன்றி
புதிதாகவே படைக்கப் படுவாள் ஏவாள்


இது ஒத்திகைதான்.
எல்லாமும் சரியாக நடந்தால்
ஒத்திகை நிஜமாகும் , நிஜம் ஒத்திகையாகும்.


என்ன சம்மதமா ?

முட்டாளாக மாட்டேன் மீண்டும் ஒருமுறை
தலையசைத்தான்

கடிகாரமுள் திசைமாற்றிச் சுற்றத் தொடங்கியது.

Read the rest of this entry »

“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”

தலையணை தினமும்

உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே

கண் சாய்க்கிறேன்.

——————————————————–

Read the rest of this entry »

தொலைந்து போன

ஜன்னல் தேடி

காற்று வீசிப் போகுமோ …

 

கலைந்து போன

கனவின் மீதி

கண்கள் மீண்டும் கேட்குமோ …

 

கரைந்து போன

மெழுகின் வாசம்

திரிகள் கருகித் தேடுமோ ..

 

பறந்து வந்த

திசையின் திசையை

மறந்து பறவை தவிக்குமோ …

Read the rest of this entry »

 

 

என் விரல்கள் பேசிய கவிதைகளே

இன்னும் சந்திக்க வில்லை

முட்டாள் உதடுகள்

அவைகளும் பேச வேண்டுமாம்

 

———————————————————- Read the rest of this entry »

எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்

சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய

பயணச் சீட்டுகளில்

உன் பெயரை

 

———————————————————

Read the rest of this entry »

Page 1 of 612345...Last »