Archive for the ‘ஆதலினால் கவிதை’ Category

அழுது கொண்டிருந்தான்  ஆதாம்
இறைவன் காலடியில் …

என்னால் தானே இவ்வளவும் !

அவள் மீது கொண்ட நேசத்தால்
ஆப்பிள் கடிக்கப்போய் நாசமல்லவா இன்று …

அறிவைக் கொடுத்திருக்கலாம் ஆப்பிள்
அறிவியலையும் வளர்த்திருக்கலாம் !
ஆனால்  அதன் குட்டிகள்
குடித்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் குருதியல்லவா?

என்னால் உண்டான நரகத்தை
காண விரும்பவில்லை
நான் மட்டும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு
என்னைத் தொலைத்து விடு எங்கேனும் - இல்லை
சூன்யத்திலாவது புதைத்து விடு


விளையாட்டைத் தொடங்குவோமா
மீண்டும் ? இறைவன்.

ஆயிரம் மின்னல்கள்
ஒருசேர  ஜனித்து மடிந்தன
ஆதாமின் கண்களில் .

ஆடப்போகும் பரமபதத்தில்
இம்முறை  ஏணிகளில்லை,
சர்ப்பம் மட்டும் ஒன்றேயொன்று

முடிந்து போன ஆட்டத்தின் ஆறுதல் பரிசாக
தழும்புகள் உனக்கு மட்டும்
கூட்டைக் கிழித்துச் சிறகுவிரிக்கும்
பட்டுப்பூச்சி போல் பழையநினைவுகள் இன்றி
புதிதாகவே படைக்கப் படுவாள் ஏவாள்


இது ஒத்திகைதான்.
எல்லாமும் சரியாக நடந்தால்
ஒத்திகை நிஜமாகும் , நிஜம் ஒத்திகையாகும்.


என்ன சம்மதமா ?

முட்டாளாக மாட்டேன் மீண்டும் ஒருமுறை
தலையசைத்தான்

கடிகாரமுள் திசைமாற்றிச் சுற்றத் தொடங்கியது.

Read the rest of this entry »

“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”

தலையணை தினமும்

உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே

கண் சாய்க்கிறேன்.

——————————————————–

Read the rest of this entry »

தொலைந்து போன

ஜன்னல் தேடி

காற்று வீசிப் போகுமோ …

 

கலைந்து போன

கனவின் மீதி

கண்கள் மீண்டும் கேட்குமோ …

 

கரைந்து போன

மெழுகின் வாசம்

திரிகள் கருகித் தேடுமோ ..

 

பறந்து வந்த

திசையின் திசையை

மறந்து பறவை தவிக்குமோ …

Read the rest of this entry »

 

 

என் விரல்கள் பேசிய கவிதைகளே

இன்னும் சந்திக்க வில்லை

முட்டாள் உதடுகள்

அவைகளும் பேச வேண்டுமாம்

 

———————————————————- Read the rest of this entry »

எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்

சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய

பயணச் சீட்டுகளில்

உன் பெயரை

 

———————————————————

Read the rest of this entry »

 

 

நீ கடந்து போன

நந்தவனப் பூக்கள் எல்லாவற்றிலும்

ஒரே வாசம்

திருடியது நீயா ?? பூக்களா ??

 

—————————————————

Read the rest of this entry »

 

 

 

 

ஜன்னல் திறந்ததும்

ஆச்சர்யம் கொள்ளாதே

வண்ணத்துப்பூச்சிகளிடம் வழி விசாரித்து

வந்து சேர்ந்திருக்கலாம் நான் அங்கே..

 

———————————————————– 

Read the rest of this entry »

21
May

கனவில் வருபவள் 4

   Posted by: RejovasanTags:

 

 

 

 

எனக்கான தலைவிதி

உன் கண்களில் ஓடும்

ரேகைகளில் இருக்கிறது …

 

———————————————————-

Read the rest of this entry »

 

 

 

 

உன்னை நினைவு கூறும்

அடையாளங்களைச் சந்திக்கும்

போதெல்லாம்

புதியதோர் கவிதையையும்

சந்திக்கிறேன்

 

——————————————————————-

Read the rest of this entry »

18
May

பைத்தியக்காரர்கள்

   Posted by: RejovasanTags: , ,

 

 

வெகுநாட்கள் வறுத்தெடுத்த வெயிலுக்குப்

பின்னொரு  மாலையில்

மழை பெய்திருந்த பொழுது

நாங்கள்

பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ளிருந்தோம்

 

அணிந்திருந்த உடையோ

முதுகின் மேல் பை கொண்டிருக்கும்

பொருட்கள் பற்றிய கவலையோ

தோல் காலணிகள் என்கிற ஜாக்கிரதை உணர்வோ 

இல்லை வேறெதோ ஒன்றோ 

மழையிலிருந்து விலகி இருக்கச் செய்திருந்தது

Read the rest of this entry »