Archive for the ‘கதை நேரம்’ Category

21
Mar

வெண்ணிலா … 10

   Posted by: RejovasanTags: ,

10

Love does nothing but make you weak! It turns you into an object of pity and derision–a mewling pathetic creature no more fit to live than a worm squirming on the pavement after a hard summer rain.
                                                                                                                 -   Teresa Medeiros

 

“என்ன சார் ? தூக்கம் வரலியா ?” கார்த்திக் நின்று கொண்டிருந்தார். ஆமாம் என்று தலை அசைத்தேன்.

“சிக்ரெட் ? ”

“இல்ல கார்த்திக் ..பழக்கம் இல்ல .. இங்க சிகரெட் பிடிகறது தப்பில்ல ..?”

“சும்மா ரெண்டு பஃப் … எனக்கும் தூக்கம் வரல .. உங்களைக் காணோம் .. இங்க தான்  இருப்பீங்கன்னு தோணுச்சு …”

எனக்கு லேசாக இருமல் வந்தது.

“சாரி பிரபு .. ” கீழே தூக்கி எறிந்தார் சிகிரெட் துண்டை.

“ஸோ ?  எதுக்காக ஹைதராபாத் .. ? ” அவர் பேச்சை மாற்ற விரும்பினார்.

“வெண்ணிலாவைப் பார்க்க .. ”

“மறுபடியும் ஏதாவது ட்ரைனிங்கா ? ”

“அவ என்னை விட்டு இங்க வந்து மூணு மாசம் ஆகுது”

எத்தனை முறை மனதிற்குள்ளே நினைத்துப் பொருமினாலும், பேசும் பொழுதே மனம் அமைதி கொள்கிறது. பேசத் தவறிய தருணங்களுக்கெல்லாம் சேர்த்துப் பேசுவது போலத் தோன்றியது. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தார் கார்த்திக்.

“எப்படி வந்தனா கூட எங்கேஜ்மெண்ட்கு ஒத்துக்க முடிஞ்சது உங்களால ? ”

Read the rest of this entry »

16
Mar

வெண்ணிலா … 9

   Posted by: RejovasanTags: ,

9

             “Some of us think holding on makes us strong; but sometimes it is letting go.”

-        Herman Hesse

 

பத்து நாட்களில் என்ன நடந்து விட முடியும். என்ன வேண்டுமானாலும் நடந்து விட முடியும். எனக்கு நடந்தது போல.

பகலிலேயே நான் கனவுகள் கண்டு கொண்டிருந்த காலம் இது. வந்தனாவை அன்று சந்தித்திருந்ததும் ஒரு பகல் கனவாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் அது கனவில்லை.

வெயில் நேரத்து மழை போல, என்றோ  சிறு வயதில் ஒரு மாலை நேரத்தில் தலையில் நச் நச்சென்று குட்டிப் பெய்த ஆலங்கட்டி போல , சிறுவர் மலரில் நான் படித்த ஒரு தேவதைக் கதை போல நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அவள் என் முன் நிஜமாகவே நின்று கொண்டிருந்தாள்.

நான் ஊமை மொழி பழகிக் கொண்டிருந்தேன். வெண்ணிலா தான் எனை அசைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தாள். அதற்குள் என் அலுவலகத் தளம் வந்திருந்தது.

வந்தனாவும் எங்களுடன் இறங்கிக் கொண்டாள்.

“ஹலோ .. ” மூன்றாவது முறையாக அவள் சொன்னாள்.

“ஹாய் “ என்றேன். அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ஹலோ என்ன நடக்குது இங்க ..? ” வெண்ணிலா இடையே புகுந்தாள்.

“வெண்ணிலா .. இவ.. இவங்க வந்தனா .. என் காலேஜ் மேட் .. ”

“என்னப்பா மரியாதை எல்லாம் அதிகமா இருக்கு .. ” சொல்லிக்கொண்டே வெண்ணிலாவிற்குக் கை கொடுத்தாள்.

“ஹாய் ஐ’ம் வெண்ணிலா .. ” வந்தனா இவள் யார் என்பது போல் என்னைப் பார்த்தாள். வெண்ணிலாவும் நீயே சொல்லேன் பார்ப்போம், என்பது போல என்னைப் பார்த்தாள். எனக்கு எங்கே பார்ப்பதென்று தெரியவில்லை. மனதிற்குள் நூறு முறை தோன்றியது , சொல்லடா இவளைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று. வார்த்தைகள் தான் ஒத்துழைக்கவில்லை.

பேசியிருக்க வேண்டிய இடம் அது. நான் பேசவில்லை.

Read the rest of this entry »

13
Mar

வெண்ணிலா … 8

   Posted by: RejovasanTags: ,

8

He felt now that he was not simply close to her, but that he did not know where he ended and she began. 

-       Leo Tolstoy

சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.

இத்தனை நாட்களுக்குப் பிறகு என்னிடம் இருப்பது இந்த இனிமையான நினைவுகளும் , வாசனை நாட்களும் , அவள் உதட்டு ஈர ஞாபகங்களும் மட்டுமே.

அழுது அழுது கண்ணீர் எப்பொழுதோ வற்றிப்போயாகிவிட்டது.  தினமும் உண்பது போல வலியையும் ஒரு அன்றாடச் செயலாக உட்கொள்ளப் பழகி நாட்களாகிறது.

இரவுகள் என் எதிரிகள். என் எல்லா இன்பங்களுக்கும் சாட்சியாக இருந்த இரவுகள். என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொல்லும் அதே இரவுகள். என் உறக்கம் திருடிக் கொண்ட வெண்ணிற இரவுகள். அழியாத மச்சம் போல எனைச் சுற்றிலும் கவிந்திருக்கும் என் எல்லா நினைவுகளையும் போலவே இந்த இரவுகளையும் அறவே வெறுக்கிறேன்.

நன்றாக நினைவிருக்கிறது அந்த இரவு.

மே மாதம் . 29 ம் நாள் …

வழக்கம் போல நான் வீட்டுக்குள் நுழையவும் அவள் என்னை அழைக்கவும் சரியாக இருந்தது.

“என்னடா பண்ற ?”

“உன்ன தான் நெனச்சிட்டு இருக்கேன் ..”

“சும்மா பொய் சொல்லாதடா ..”

“கரெக்டா கண்டு பிடிச்சிட்ட ..  டிரஸ்  சேஞ் பண்ணட்டு இருக்கேன்னு சொல்ல ஒரு மாதிரி இருந்தது .. “

“அதான பார்த்தேன் .. சரி அப்படியே உன்கிட்ட இருக்கறதிலேயே சுமாரான ஒரு டிரெஸ்ஸ எடுத்துப் போட்டு சீக்கிரம் ரெடி ஆகு பார்ப்போம் ..”

“இந்த ராத்திரில ரெடி ஆகி என்ன பண்ணப் போறேன் .. ”

கொஞ்சம் நேரம் இடைவெளியில் , பதில் வந்தது.

“அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்காங்க .. வீட்ல தனியா தான் இருக்கேன் ..”

“ஓ தனியா இருக்க பயமா இருக்கா … நாம ஃபோன் பேசிட்டே இருக்கலாம் … நீ அப்படியே தூங்கிடு ..”

 

“உன்னை வந்தனா லவ் பண்ண மாட்டேன்னு சொன்னதில தப்பே இல்ல…” அடிக்கடி வந்தனாவைப் பற்றி விளையாட்டாக நாங்கள் பேசிக்கொள்ளத் துவங்கியிருந்தோம். விளையாட்டாக .. அப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டு , இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மீண்டும் சொன்னாள் “அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்காங்க .. வீட்ல தனியா தான் இருக்கேன் ..”

“ச்சே .. நான் இவ்ளோ மக்கா .. சார் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் .. ”

“என் வீடு தெரியுமா ? அட்ரெஸ் வேணாமா ..?”

“உன் வீட்டு அட்ரஸ் மட்டுமில்ல .. உன் ஏரியா ப்ளூ ப்ரிண்டே என்கிட்டே இருக்கு .. நீ ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ண அடுத்த நாளே சென்சஸ் எடுத்தாச்சு .. ”

“திருட்டுப் பய நீ .. ஆனா இப்பவே சொல்லிறேன் .. வீட்டுக்கு வந்து நல்ல பிள்ளையா நடந்துக்கணும் … இல்லன்னா வரவே வராத .. ”

“சொல்லிட்டேல .. எவ்ளோ சமத்துப் பிள்ளையா நடந்துக்கறேன்னு மட்டும் பாரு .. ஆனா என்ன, என் கை என் அளவுக்கு நல்ல பிள்ளை இல்ல..  சொன்ன பேச்சே கேக்காது .. ட்ரை பண்றேன் .. ”

Read the rest of this entry »

3
Mar

வெண்ணிலா … 7

   Posted by: RejovasanTags: ,

7

 

“May I print a kiss on your lips?” I said, and she nodded her full permission: So we went to press and I rather guess we printed a full edition.

-       Joseph Lilienthal

மணி பத்து ஆகியிருந்தது. கம்பார்ட்மென்டில் எல்லாரும் விளக்கை அணைக்கத் துவங்கியிருந்தார்கள் . காலையில் பேசிக் கொள்ளலாம் என நாங்களும் தூங்கச் சென்றோம்.

எனக்கு தான் தூக்கம் வரவில்லை. எழுந்து சென்று கதவைத் திறந்து வைத்து நின்று கொண்டேன். வெளிச்சப் புள்ளிகளும் , இருளும் மாறி மாறி கடந்து போய்க்கொண்டிருந்தன.

எங்கோ தூரத்தில் மழைபெய்து கொண்டிருக்க வேண்டும். முகத்தில் ஈரக்காற்று படுகையில் அவள் தொலைதூரத்தில் உதடுகளைக் குவிப்பதாகத் தோன்றியது.

முத்தத்தின் மேல் ஏன் எனக்கு அத்தனை பைத்தியம் என்று தெரியவில்லை. ஒருவேளை காத்திருந்த அத்தனை வருடத்து முத்தங்களையும் மொத்தமாக வாங்கித் தீர்த்து விடும் வேகமா எனத் தெரியவில்லை.

வாங்கும் பொழுதே கொடுக்கவும் , கொடுக்கும் பொழுதே எடுத்துக் கொள்ளவும் முடிகின்ற ஒன்று முத்தங்கள் மட்டும் தானே.

நான் ஒவ்வொரு முறை அவளைக் காதலிப்பதாகச் சொல்லிய போதும், எனக்கு முன்னால் அவள் நீட்டிய  இரண்டு கைகளிலும் முத்தங்கள் ஒளித்து வைத்ததையே, நான் சலிக்காமல் எடுத்துக் கொண்டிருந்தேன். என் கன்னப் பைகள் முத்தங்கள் கொள்ளாமல் போன பின்பும் அவள் உதடுகள் கொண்டே உள்ளே திணித்துக் கொண்டிருந்தேன். கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்ட ஒரு ரோஹி இறப்பதற்கு முதல் இரவு எல்லாப் பதார்த்தங்களையும் தின்று தீர்ப்பது போல நான் முத்தங்கள் தின்றுகொண்டிருந்தேன். ஆசை மட்டும் தீரவே இல்லை.

அவள் தனது காதலைச் சொல்வதற்கு தகுதியான ஒரு நாளைத் தேர்வு செய்துவிட்டு அதற்காத்தான் காத்துக் கொண்டிருந்தாள் என அப்பொழுது தெரியாது எனக்கு.

ஒன்றுமில்லாத உலகத்தில் மின்னலுடன் மழை பெய்து ஆழி சூழ்ந்து குளிர்ந்த பின்பு , ஒரு செல் உயிரி அமீபா ஆகி , அது வளர்ந்து வால் முளைத்து , அதுவும் ஒட்ட நறுக்கப் பட்டு மனிதனானதற்குள் ஏகப்பட்ட பரிணாம நிலைகள் இருப்பது போலவே, அவள் முத்தம் தர அனுமதி தந்து பின்பு ஒரு நாள் இரவு என்னை வீட்டுக்கு வரச் சொன்னதற்குள்ளும் சில பரிணாம நிலைகள் இருந்தன.

Read the rest of this entry »

1
Mar

வெண்ணிலா 6 …

   Posted by: RejovasanTags: ,

6

 

As we grow older together, as we continue to change with age, There is one thing that will never change. . . I will always keep falling in love with you.

                                                                                                - Karen Clodfelder

 

கையை அறுத்துக் கொள்வதையும்  , சிவப்பு நிற திரவம் டியுப்களின் வழியாக இறங்குவதைப் பார்த்து ஐ.ஸி.யூ விற்கு வெளியிலிருந்து வாய் பொத்தியபடி அழுதுகொண்டிருப்பதையும் சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.

மருத்துவமனை என்றுமே எனக்குப் பிடிக்காத ஒன்று. அங்கே சதா யாரேனும் அழுதபடியே இருக்கின்றார்கள். கடைசியாக என்னிடம் அழுது முடித்தது மன்சூரின் அம்மா.

“நேத்து நைட் கூட காலைல சீக்கிரம் எழுப்பும்மா .. டான்ஸ் ப்ராக்டிஸ் இருக்குன்னு சொன்னானே .. பாவிப் பய இப்படி பண்ணிக்கிட்டேனே … ” அவரிடம் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.

அவர்கள் யாருக்கும் அவன் ஏன் அப்படிச் செய்து கொண்டான் என்பதற்கான உண்மையான காரணம் தெரியாது. நானும் ஒரு வகையில் காரணம் என்ற எண்ணம் ஏனோ அங்கிருந்து என்னை உடனடியாக எழுந்து போகச் சொல்லித் துரத்திக் கொண்டிருந்தது.

வெண்ணிலா இரவு அங்கேயே தங்கிக் கொள்ளப் போவதாச் சொல்லிவிட்டாள்.

கையை அறுத்துக் கொள்ளுவதென்றால் எவ்வளவு காதல் இருக்க வேண்டும். அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் மன்சூர் கழுதையாகப் பிறக்கட்டும். இந்த ஜென்மத்தில் நான் தான் கழுதை போல.

ஒரு கத்தியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு தடவிப் பார்த்தேன். பயமாக இருந்தது. தூர எறிந்துவிட்டுப் படுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றேன். அபாய நிலை தாண்டி இருந்தான். ஆனால் கண்கள் திறக்க வில்லை. வெண்ணிலா இரண்டொரு வார்த்தைகள் மட்டும் தான் பேசினாள். இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்றாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அவளிடம் ஒருமுறை கூட பேசவில்லை. எந்த குறுஞ்செய்திக்கு அவள் பதிலும் அனுப்ப வில்லை. நான் மனதளவில் தயாராகத் துவங்கினேன்.

புதன் கிழமையும் அவள் அலுவலகம் வரவில்லை. ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அவளது பாட்டி வீட்டிற்கு இன்னமும் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

ஆனால் புதன் கிழமை மன்சூர் அலுவலகத்திற்கு வந்தான்.

Read the rest of this entry »

27
Jan

வெண்ணிலா … 5

   Posted by: RejovasanTags:

5

“I was half in love with her by the time we sat down.  That’s the thing about girls.  Every time they do something pretty, even if they’re not much to look at, or even if they’re sort of stupid, you fall half in love with them, and then you never know where the hell you are.“

-       J.D. Salinger

 

என் இனிய நண்பர்களே , இந்த நான்கு அத்யாயங்களைப் படித்துவிட்டு வெண்ணிலாவைப் பற்றி நீங்கள் எதையாவது உருவகப்படுத்தியிருந்தால் , அதை நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டிய தருணமிது.

வெண்ணிலா கணிக்கப்படவே முடியாதவள்.

ஒரே நேரத்தில் தண்ணீரைப் போல எனக்குள் விழுந்து என்னை நிறைக்கவும் , நெருப்பைப் போல என்னை இழுத்தணைத்து உருக்கி அவளாக வார்க்கவும் முடிந்திருந்தது.

நான் ஓவியனா இல்லை அவள் வண்ணங்கள் குழைத்துப் பூசி விளையாடும் கிறுக்கலோவியமா ? புரியாமல் ஒன்பதாவது வானத்தில் மிதந்தலைந்த நாட்கள் அவை.

சென்னையின் அதே அங்காடித் தெருக்கள், கடற்கரைச் சாலைகள், மொட்டை மாடி நட்சத்திரங்கள் , அதே எரிபொருள் நிரப்பும் கடைகள் , அதே உணவகங்கள் .. ஆனால் எல்லாமே வேறொரு பரிமாணங்கள் காட்டின.

இது வரையிலும் நான் கேட்காத பேசாத வார்த்தைகளோ அல்ல .. ஆனால் அவளிடம் பேசும் பொழுதும் , அவள் பேசிக் கேட்கும்போழுதும் வேறென்னன்னவோ சொல்லின அதே வார்த்தைகள்.

அவளைப் பற்றி நினைப்பதே  கூட கவிதையாகத்தான் இருந்தது.

அவளைப் பொறுத்த வரையில் நாங்களிருவரும் குரு ரம்யா உடன் செல்கிறோம். ஆனால் உண்மையில் எங்கள் இருவருடன் தான் அவர்கள் வந்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல அவளிடமான எனது அணுகுமுறைகளில் நிறைய மாற்றம் தெரிந்தது. அதை அவள் கவனிக்கவே செய்தாள் . என் மீதான அவள் பார்வையில் நிறையவே மாற்றம் தெரிந்தது. அதை நானும் கவனிக்கவே செய்தேன்.

உறவுகளின் நெருக்கமே உரிமைகள் தருவதிலும் , எடுத்துக் கொள்வதிலும் என புரியவந்த நாட்கள்.

அது ஒரு சனிகிழமை.

Read the rest of this entry »

13
Jan

வெண்ணிலா … 4

   Posted by: RejovasanTags:

4

Do you want me to tell you something really subversive? Love is everything it’s cracked up to be. That’s why people are so cynical about it. It really is worth fighting for, being brave for, risking everything for. And the trouble is, if you don’t risk anything, you risk even more.

                                                                                                            - Erica Mann Jong

குரு.

சண்டாளன். இதுவரை என்னைத் திட்டுவதற்காகவும், புகார் செய்வதற்காகவும் மட்டுமே வாயைத் திறப்பவன் , என்னைப் பார்த்ததும் நரசிமராவ் முகமூடி எடுத்து மாட்டிக் கொள்பவன், எதற்காக என்னைத் தனியாகக் கூப்பிட்டு வெண்ணிலா பற்றி பேசுகிறான் ? ஒரு வேளை அவளுக்கும் தெரிந்து போயிருக்குமோ ? எல்லாருமா என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் ?  என்னென்னவோ கேள்விகள் தோன்றினாலும் முதலில் தோன்றியது இது தான்.

“என்னது குருவும் வெண்ணிலாவ லவ் பண்ணானா ? ” கார்த்திக்கும் ஹரிணியும் ஒருசேரக் கேட்டார்கள்.

அந்த நினைப்பில் எனக்குக் கொஞ்சம் வியர்க்கக் கூடச் செய்ததாக நியாபகம்.

ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு ஒரு மாதிரி ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.

“குட் சாய்ஸ் .. நல்ல பொண்ணு .. ” நெஞ்சில் பாலை வார்த்தான் . அப்பொழுது இவனுக்கு வெண்ணிலா பற்றிய கவலை இல்லை என்றால் ஏன் என்னிடம் தேவை இல்லாத உரையாடல்? அவனே தொடரட்டும் என்று மெளனமாக இருந்தேன்.

“அட்ரெஸ் தவிர அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும் ..? ”

அட்ரெஸ்? இந்த விஷயம் எல்லாம் இவனுக்கு எப்படித் தெரிந்தது? மானமே போச்சு.

“எங்க தெரிஞ்சிகறது ? அவ தான் யார் கூடவும் எதுவும் பேச மாட்டேங்கறாளே .. உன்னைத்  தவிர ..”

“ச்சில்  .. விட்டா அடிச்சிருவ போல ..” அவன் சிரித்தது எனக்கு எரிச்சலாக வந்தது. என் சொந்த விஷயம். உனக்கென்ன , போய் வேலையைப் பார் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லியும் இருப்பேன். அவன் அடுத்து அப்படி சொல்லியிருக்காவிட்டால் ..

“ கவலைப் படாத .. நான் ஹெல்ப் பண்றேன் .. ”

Read the rest of this entry »

7
Jan

வெண்ணிலா … 3

   Posted by: RejovasanTags:


And think not you can Direct the course of love, For love, If it finds you worthy, Directs your course.
                                                                                               -  Kahlil Gibran

 

அந்த இரவு என்னால் நிச்சயமாக மறக்க முடியாதது.

கண்கள் மூடிக்கொண்டு படிக்க முடிகிற ஒரே புத்தகம் கனவு தானே. எத்தனையோ காட்சிகள் என்னறையின் இருளின் ஊடாக கண்களில் விரிந்து கொண்டிருந்தன. எல்லா காட்சிகளிலும் நானும் வெண்ணிலாவும். இடங்களும் பொருட்களும் ஏவல்களும் மாறினாலும் எல்லாவற்றிலும் நானும் வெண்ணிலாவும் மட்டும்.

எனது அலுவலகத்தின் மொட்டை மாடியில் இருந்தோம். வானம் முழுதும் நிலா அடைத்திருந்தது. அவளைத் தழுவிய காற்று வேண்டா வெறுப்பாக என்னையும் மோதிச் சென்றது.

“இன்னும் எவ்ளோ நேரம் தான் பேசாமயே நிக்க போற? ” அவள் கிளம்புவது போல திரும்பினாள்.

நான் மெளனமாக நின்றிருந்தேன். மெளனமாக மட்டுமே நின்றிருந்தேன். எவ்வளவு முயன்றும் என்னால் எதையும் பேச முடியவில்லை. வாயைத் திறக்க முயன்றேன். ஒரு வார்த்தையும் வரவில்லை.

கடைசியில் மிகவும் பிரயாசைப் பட்டு வாயைத் திறந்தேன்.

Read the rest of this entry »

30
Dec

வெண்ணிலா … 2

   Posted by: RejovasanTags:

  

            “When I saw you I fell in love, and you smiled because you knew. “

 

                                                                                     – William Shakespeare

 

அவள் சிரித்தாள் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் முதல் முறை பார்த்த பொழுது சிரிக்கவில்லை.

மிக இயல்பாக சென்று கொண்டிருந்த வாழ்கை மொத்தமாக மாறிப் போனது அவளைப் பார்த்த அந்த வினாடி. என் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இருந்தது எங்கள் முதல் சந்திப்பு.

ஜூன் 18, மணி மூன்று பதினான்கு .. அவளைச் சந்திப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு,

“பிரபு , ஒரு ரெஸ்யூமே அனுப்பிருக்கேன் .. ஆர்த்தி ரீப்ளேஸ்மென்ட்.. எவாலுவேட் பண்ணி சொல்லு ” மல்லிகா, என் ப்ராஜெக்ட் லீட். இரண்டு வாரங்களில் அவர் டென்வர் செல்வதாக இருந்ததால் அடுத்த லீடாக நான் தேர்வாகியிருந்தேன். ட்ரான்சிஷன்  பீரியடில் இருந்தேன்.

மல்லிகா

“ம்ம .. சொல்லுடா ..”

“இந்த ரெஸ்யூமே வேணாம்னு சொல்லிருங்க …”

“ஏன்டா ? என்ன பிரச்சனை ?”

“நல்ல அகாடமிக் மார்க்ஸ்.. அண்ணா யுநிவர்சிட்டி … ட்ரைனிங்ல டாப்பர் ..”

“அப்பறம் என்னடா பிரச்சனை ? ”

“என்ன பிரச்சனைனா , கேண்டிடட் பொண்ணு .. ஏற்கனவே டீம் ல பதினாலு பேர்ல எட்டு பொண்ணுங்க … நைட் ஷிப்ட் பிரச்சனை வரும் .. பையனை எடுத்தா பிரச்சனை இல்லேல .. அதுவும் இல்லாம ப்ரெஷர் வேற .. எல்லாத்தையும் சொல்லித் தரணும் மொதல்ல இருந்து ..”

“பொண்ணுங்கறத எல்லாம் ஒரு காரணமா சொல்ல முடியாது தம்பி ..  நேர்ல கூப்ட்டு பேசு .. எதாவது காரணம் கண்டுபிடிச்சு சொல்லு …திருப்பி குடுத்திடலாம் … ”

“வேற யாரையாவது பண்ண சொல்ல வேண்டியது தான ..”

“ஒரு பொறுப்பு குடுத்தா தட்டிக் கழிக்கக் கூடாது …”

ரெஸ்யூமில் அவளது எண் இருந்தது. அழைத்தேன். காத்திருந்தேன். அத்தனை வருடங்களுக்குப் பிறகான கடைசி இரண்டு நிமிடக் காத்திருப்பு.

“ஹலோ திஸ் இஸ் வெண்ணிலா …”

Read the rest of this entry »

22
Dec

வெண்ணிலா … 1

   Posted by: RejovasanTags:

1
“Love does not begin and end the way we seem to think it does. Love is a battle, love is a war; love is a growing up. “

                                                                                                            – James Baldwin


         நின்று கொண்டிருந்த ரயிலொன்றின் புகையினூடே அவள் உருவம் ஒரு முறை தோன்றி மறைந்து போனது. சக்கரம் நின்ற பிறகு முழு ஒரு ருபாய் நாணயத்தைப் போடவும். சிகப்பு வெள்ளைச் சக்கரம் சுற்றி நின்றது. ஒரு ரூபாய் நாணயம் ஒரு நொடியில் அவளைப் பார்த்த கணத்தில் நான் தொலைந்தது போலவே தொலைந்து போனது.

ஹேய் நீ கொஞ்சம் சதை போட்டன்னு நெனைக்கறேன்

எங்க ?” இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கேட்டாள்.

அங்கயே  தான்

கெட்ட பையன் நீ .. அங்க எல்லாம் ஏன் பாக்கற?”  கோபம் போன்ற கோபமில்லா பார்வை பார்த்தாள்.

என் தப்பு இதுல என்ன இருக்கு .. நியாயமா பார்த்தா பொடவை கட்டின உன்னை நீயே தான் திட்டிக்கணும்

திட்டறேன் .. திட்டறேன் .. நான் ஒன்னும் வெயிட் போடல ..  அதே அம்பத்தாறு தான்

நாலு கிலோ கூடிருக்க ..”  இறக்கி விட மனமில்லாமல் தூக்கியபடியே நின்றிருந்தேன்.

ச்சீ .. கீழ இறக்கிவிடு .. “

வாக்குவாதத்தின் முடிவில் கிண்டி ரயில் நிலையத்தின் எடை பார்க்கும் இயந்திரத்தின் அருகில் இருந்தோம். என் பையில் இருந்து ஒரு ருபாய் நாணயத்தை எடுத்துப் போட்டாள். எனது மனதைப் போடவே ஒரு முறை துடித்து அச்சிடப்பட்ட அட்டையைத் துப்பியது அது. அட்டையை எடுத்துப் பார்த்தவள் கைகளுக்குள் ஒளித்துக் கொண்டாள்.

இப்போ எதுக்கு மறைக்கற .. ஒழுங்கா காட்டு ..”

ம்ம்ஹீம் .. மாட்டேன்உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லியா .. “

கண்ணா பின்னான்னு காட்டிருச்சோ ..? “

நீ மட்டும் என்ன .. நீயும் தான் வெயிட் போட்ட ..”

அப்படியாஎவ்ளோன்னு சொல்லு பாப்போம் .. ” கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு சொன்னேன்.

மேலும் கீழும் பார்த்தவள்தொண்ணூறுஎன்றாள்.

இது போங்கு.. ஒழுங்கா தூக்கிப் பார்த்து சொல்லு ..”

ஆஹா .. ஆசை தான் .. ஒழுங்கா மெஷின் மேல ஏறி நில்லு “  இது போன்ற பாவனைகளை எல்லாம் எந்த தேவதையிடமிருந்து கற்றுக் கொள்ளுகிறாளோ !

என்னைப் போலவே ஏமாற்றத்துடன் பெருமூச்சுவிட்டது இயந்திரம். Read the rest of this entry »

Page 2 of 512345