Archive for the ‘நட்பினிலே நட்பினிலே’ Category

 

உலகத்தின் நிழல் மறையும்

முற்றிலும் இருள் கவியும்

பின்னிரவுகளில்

விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே

மெதுவாக விழித்துப் பார்க்கின்றன

நட்பின் நினைவுகளும்

அதன் அழகான கவிதைகளும் …

 

தூக்கம் மறந்து

விழிகள் திறந்து

எரியும் கண்களில் விரியும்

கனவுகள் கலைந்த பின்

விட்டுச்சென்ற கால்சுவடுகளை

அலைகள் வந்து திருடிப் போகும் சுகம்

நெஞ்சின் அடுக்குகளில் இருந்து

நினைவுகள் வருடப் படுகையில் …

Read the rest of this entry »

            

 

மழைவாசமும்

மழலை வாசமும்

பிடிக்காதவர்கள் உண்டா

யாரேனும் இங்கே  ??

 

நீங்கள் பட்டியல் எடுப்பதாயிருந்தால்

விசாரிக்கத் தேவை இல்லை

என்னைப் பற்றி…

இருக்காது நிச்சயம்

என் பெயர் அதில் …

 

நாட்காட்டியுடன் 

நவம்பர் மாதத்திற்காக

காத்திருப்பவன் நானும் தான் …

 

அடுக்குமாடிக் குடியிருப்பில்

அடைக்கப்பட்டவர்களில்

ஒருவன் தான் என்றாலும்

நானொரு மழைப்பாடகன் என்பதில்

என்றுமே பெருமை உண்டெனக்கு …

 

அடைமழை பெய்யும் போது

அணைப்பதில் விருப்பம் சிலருக்கு

எட்ட நின்று ரசிப்பதில்

திருப்தி பலருக்கு …

 

உதடு குவித்து

முத்தம் தரப் பிடிக்கும்

சிலருக்கு

உள்ளங்கை காட்டி

முத்தம் வாங்கப் பிடிக்கும்

பலருக்கு …

 

மழையினில் நனைந்து

கொட்டும் ஒவ்வொரு துளியையும்

குருதியில் குழைத்து

மழையாகிடவே கனவெனக்கு..

 

எனது சில ஆயிர வினாடிகளுக்கு

தற்காலிக ஓய்வு தந்துவிட்ட

மாலை நேரம் அது

 

மெல்ல மழைநேரமாயும்

ஆகிக் கொண்டிருந்தது …

 

உதறிவிட்டாலும் சிதறியதுளிகள்

மீண்டும் சென்று மேகம் சேரும் …

 

உன் போலத்தானா

நானும் மழையே ..!

 

மழை தொட்டு

முத்தமிட்ட மண் கிளம்பும்

வாசம் போல்

என்னுள் சுவாசமாய் கலந்துவிட்ட

நம் நியாபகங்கள் …

 

எப்படி இருக்கிறாய்

என் பிரிய தோழி …

Read the rest of this entry »