இரவினைக் கொல் …

 

வார்த்தைகள் எல்லாம் சிதறிப் போய் , உள்ளிருந்து உடைத்துக் கொண்டு , கண்கள் கிழிந்து போகும் படி கண்ணீர் பீரிட்டு வருகையில் எப்படி உனக்குக் கடிதம் எழுதுவதுஇருந்தும் இந்த இரவில் உனக்குக் கடிதம் எழுதித் தான் ஆக வேண்டும்.

வெளிர் நீல வானத்தில் மறைந்து கொள்ள மேகமில்லாமல் நிலா அழுவதைப் பார்த்து விட்ட பிறகு  , என் பெயர் எழுதிய நட்சத்திரமொன்று வெடித்துச் சிதறி விண்ணில் சரிவதை நேர் கொண்டு விட்ட பிறகு , தனியே ஒரு பறவை உறக்கம் கொள்ளாது அகாலத்தில் ஓலமிட்டபடி பாதை தெரியாமல் தவித்துப் பறப்பதற்கு சாட்சியாகி விட்ட பிறகு எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நீ கடைசியாய் எனக்கு இட்டுத் தந்த கையொப்பம் என் விரல்களில் ஏறி விளையாடியபடி இருக்கிறது. இன்னொரு புறம் புகைப்படத்திலிருந்து இறங்கிவந்து விடும்படி இறைஞ்சிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய். போதுமென கண்கள் பொத்திக் கொண்டு வீடு தாண்டி ஓடி வந்தால், இலைகள் எல்லாம் உதிர்ந்து போன கிளைகள் வழி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலா , பொம்மை போல உறங்கிக் கொண்டிருக்கும் உன்னையும் சாளரத்துக் கம்பிகள் வழி பார்த்துக் கொண்டிருக்குமா என நினைக்கச் சொல்லுகிறது. எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நாளையும் இதே போல ஒரு இரவும் நிலவும் உண்டு எனத் தெரிந்து விட்ட பிறகும் எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

வேண்டுமானால் எழுதிய கடிதங்கள் அத்தனையும் கிழித்தெறியத் தயார். ஒன்று மட்டும் செய். எப்படியாவது எனக்கான இரவுகளைக் கொன்று விட வழி சொல். நீ இல்லாமல் வெறும் இரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் நான் ?

 

———————————————————————–

 

 

 

 

Tags:

This entry was posted on Friday, June 25th, 2010 at 4:39 am and is filed under காதல் கடிதங்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments so far

Rejovasan
 1 

The Cat Empire – Lonely Moon

Girl in the park one day
Killing all the bugs on the pavement
Seems like she got a nasty streak
But she does it in a beautiful way

Like a bullet from a gun
She sparks and then she runs
The only thing she’s sure of
Is that no one really understands

Sometimes … talking about
Things just seem so strange
Lie awake in the lonely night
Things just seem so strange

Maybe it’s all prearranged
Tears on an empty page
Look out the window see the full moon bloom and
This is what he says, Baby

Don’t you worry
When you feel so lonely, cos
Everyone’s lonely
They’re all crazy too
Like their mothers
Like their fathers
Everyone’s crazy
Under a lonely moon

Sometimes she gets this way
About her when she sways
Slips into a liquid tune
And vanishes away
And it’s only for herself
She can’t bring anyone else
Everyone’s got a special box
That they keep on a dusty shelf

Such a beautiful dangerous thing
Beautiful and strange
Making love to the night itself
Beautiful and strange

Maybe it’s all prearranged
Tears on an empty page
Look out the window see the full moon bloom and
This is what he says, Baby

Don’t you worry
If people call you crazy, cos
Everyone’s crazy
They’re all lonely too
Like their mothers
Like their fathers
Everyone’s crazy
Under a lonely moon

Don’t you worry
When you feel so lonely, cos
Everyone’s lonely
They’re all crazy too
Like their mothers
Like their fathers
Everyone’s lonely
Under a lonely moon
Don’t you worry
If people call you crazy, cos
Everyone’s crazy
They’re all lonely too
Like their mothers
Like their fathers
Everyone’s crazy
Under a lonely moon

June 25th, 2010 at 4:44 am
 2 

கவிஞர்களின் ஈர்ப்பின் புலத்தில் நிலவுக்கும் இரவுக்கும் தனித்ததொரு இடமுண்டு.
//
வெறும் இரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் நான் ?
//
good finish.. :)

commet la இருக்கே அது என்ன?

June 25th, 2010 at 10:56 am
Rejovasan
 3 

வழக்கம் போல எழுதி முடிச்சிட்டு பொம்ம தேடிட்டு இருந்தேன் .. Lonely Moon ன்னு .. இந்த song Lyrics கெடச்சது … ராத்திரி நாலு மணிக்கு நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு யோசிச்சிட்டே தான் தேடிட்டு இருந்தேன் …

// Don’t you worry
If people call you crazy, cos
Everyone’s crazy
They’re all lonely too
Like their mothers
Like their fathers
Everyone’s crazy
Under a lonely moon //

எனக்கே சொல்றா மாதிரி இருந்தது .. முடிஞ்சா song கேட்டு பார் .. கடைசி ஒரு நிமிஷம் தவிர நல்லாவே இருக்கு .. Guitar Score கூட நல்லா இருக்கு .

June 25th, 2010 at 11:58 am
 4 

ரைட்டு.. கேக்கறேன்..

June 25th, 2010 at 12:30 pm
வசந்த்
 5 

நீண்ட நாளாய் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்து சமயம் கிடைத்த பாடில்லை . மிகுந்த நேர்மையோடே இதை எழுதுகிறேன்.
சமீப காலங்களில் நான் அதிகம் ரசிக்கும் எழுத்துக்கள் உங்களுடயவை.
நீங்கள் கையாளும் நடை, வாசிக்கும் போது இதயம் நுழைந்து இசை மீட்டி செல்கிறது.
உணர்வுகளின் வெளிப்பாடை, மொழியின் அழகியலோடு எழுதும் கலை
நன்றாக வருகிறது ரெஜோ உங்களுக்கு…

“இலைகள் எல்லாம் உதிர்ந்து போன கிளைகள் வழி
என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலா ,
பொம்மை போல உறங்கிக் கொண்டிருக்கும் உன்னையும்
சாளரத்துக் கம்பிகள் வழி பார்த்துக் கொண்டிருக்குமா
என நினைக்கச் சொல்லுகிறது.”
எனக்கும் இருக்கும் இந்த அனுபவம் உங்கள் வார்த்தைகளில்
இன்னும் அழகாகி இருக்கிறது ….
வேண்டா வெறுப்பாக முகம் மூடிக் கொண்டு ஆதவன் முதுகு காட்டிச் சுற்றத் துவங்கிவிட்டால் ,
என்ன செய்யும் நிலவில்லாத இரவு , எதை ஓடி வரச் சொல்லுவார்கள்
பிள்ளைகளுக்குச் சோறூட்ட அன்னைகள். என்ன செய்வேன் நானும் கூட ….
இதை வாசிக்கும் பொழுது எதிரே கணினி திரை மறைந்து எழுதியவரின் குரலில் கேட்கும்அனுபவம் தருகிறது .

வார்த்தைகள் வருடவும் , வண்ணத்துப்பூச்சிகள் துரத்தவும் நீயின்றி ,
வெறுமனே அலைபேசியில் உன் முகவரி கொண்ட எண்களை வெறித்துக் கிடக்கலாம்
இது எல்லோருக்குமானது தான். சொல்லிய விதம் அழகு.
ஆளில்லாத மேம்பாலமொன்றில் தனியாக நடந்து கொண்டோ , மின் தூக்கியின் பக்கங்களெல்லாம் தனித்து வியாபித்திருக்கும் என் பிம்பங்களில் ஒன்றை, அடுத்த தளத்தில் கதவு திறக்கும்முன் அழிக்க முயன்று கொண்டோ இல்லை இவை எதுவுமில்லாமல் சாளரங்கள் மொத்தமும் இமைகள் மூடிக்கிடக்க, உன் புன்னகை ஒன்றின் நினைவு வெளிச்சத்தில் துயர்மிகு வரிகளை வாசித்துக் கொண்டிருக்கலாம் ..
ஒரேயொருமுறை உன்னைச் சந்தித்துவிட்டால் போதும், நான் ஜீவித்திருப்பதற்கான ஓட்டைகள் விழுந்த காரணப் பாத்திரத்தைக் கொஞ்சமேனும் நிரப்பிக் கொள்வேன்
இன்னும்… இன்னும்… நிறைய. எங்கோ மறைந்திருந்த மழைகால மேகம் பொழிகையில் நடக்கும் இதம் . உங்கள் எழுத்துக்கள்….. வாழ்த்துக்கள்

June 29th, 2010 at 3:09 am
 6 

தொடர்ந்து வாசித்து வருகிறேன் உங்களின் முகவரி தொலைத்த கடிதங்கள்., வார்த்தைகள் வர்ணஜாலம் ஆடுகின்றன உங்களின் காதல் கடிதங்களில். பெண்களை கண்டாலே காத தூரம் ஓடுகிறேன், காதல் இல்லை எனபது பொய்யெனவே படுகிறது.கடிதங்கள் கவிதைகள் புனை கதைகள் அனைத்தும் அழகு.

July 2nd, 2010 at 4:30 pm
Rejovasan
 7 

வசந்த்,
வெறும் நன்றி என்று மட்டும் உங்களுக்கு பதிலிட என்னால் முடியவில்லை. உங்களது பின்னூட்டம் நிச்சயம் எதிர்பாராதது. காதலைப் பற்றி மட்டுமே ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் , நானே என்னை நிறைய முறை கேள்வி பிறகும் … எழுதவே வேண்டாம் என முடிவு செய்த பின்பும் கொஞ்ச நாள் எழுதாமல் இருந்த பின்னும் புதிதாய் துவங்கியிருக்கும் மழைக்காலம் மீண்டும் எழுத வைத்திருக்கிறது.

இனிமேல் இதே கேள்வி தோன்றினால் , உங்கள் பின்னூட்டத்தை நிச்சயம் படிப்பேன். மிக உற்சாகமாக உணர்கிறேன்.

மிக நன்றி :-)

ப்ரியமுடன்,
ரெஜோ

July 5th, 2010 at 11:45 am
Rejovasan
 8 

நீண்ட நாட்கள் ஆகிறது ..
வரவேண்டும் அடலேறு :-)

// பெண்களை கண்டாலே காத தூரம் ஓடுகிறேன் //

நீங்கள் ஓடும் பாதையில் உங்களுக்கானவள் காத்திருக்கக் கடவது :-)

July 5th, 2010 at 11:48 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment