எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்


எண்பத்தி ஒன்றவதாகத்


தேடிகொண்டிருக்கிறேன்


ஒரு பிச்சைக்காரனை


—————————


பரவாயில்லை அது


பிச்சைக்காரி என்ற போதிலும்


—————————


தலைகவசத்தை விட


தர்மமே தலை காக்குமாம்


வாகனம் வாங்கும் போது


கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம்


—————————–


அதனால்


என் இப்போதைய அவசரத் தேவை


தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம்


ஒரே பிச்சைப்பாத்திரம்.


 


விளம்பரமா கொடுக்கமுடியும்


தினசரிகளில் இதற்காக ..



கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன்


—————————-


ஏன் என்று தெரியவில்லை


எனக்கவனைப் பிடித்தது ….?


 


ஒருவேளை


எனது அலுவலகத்தின்


அருகிலேயே இருக்கிறான் அவன்


என்ற என் சோம்பேறித்தனம்


காரணமாக இருக்கலாம்


 


தினமும் ஒரு ரூபாய்


அவனுக்கு


தீர்ந்திடும் கண்டம்


எனக்கு ….


——————————————–


முதல் நாள்


அவன் தட்டிலிருந்த


நிறைய சில்லறைகளில்


தொலைந்து போனது


என் ஒற்றை நாணயம்


 


இரண்டாம் மூன்றாம் தடவைகளில்


கண்டுகொண்டான் அடையாளம்


என்னை


 


நான்காம் நாளில்


புன்னகை பூத்தான்


 


ஐந்தாம் நாளில் பார்த்ததுமே


ஐயா என்றான்


 


ஆறாம் நாளில்


நல்ல இருங்க ஆசி தந்தான்


 


ஏழாம் நாள் விடுமுறை நாள்


தேடிவந்த என்


கடமை உணர்வு கண்டு


கடவுளே என்றான்


————————————-


முதல்முறை கேட்டபோது


ஏதும் தோன்றவில்லை


 


இரண்டாம் மூன்றாம் தடவைகளில்


இனம்புரியா உணர்வொன்று


என்னுள் ஓடக் கண்டேன்


 


நான்காம் தடவையில்


நிஜமாகவே நானா


கேள்வி கொண்டேன்


 


ஐந்தாம் தடவையில்


ஐயம் வேண்டாம்


பதிலும் கண்டேன்


 


ஆறாம் தடவையில்


கர்வம் கொண்டேன்


 


ஏழாம் தடவையில்


கடவுளாகிப் போனேன்


———————————-

 

- தொடரும்

Tags: , , ,

This entry was posted on Wednesday, August 12th, 2009 at 11:34 pm and is filed under தொடரும் ..., நெடுங்கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments so far

 1 

m.!

August 13th, 2009 at 9:15 am
Pravinska
 2 

:)

-piriyamudan,
Pravinska

August 13th, 2009 at 8:54 pm
Rejovasan
 3 

:-) :-)

August 13th, 2009 at 10:17 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment