Archive for June, 2009

 

 

 

 

 

 

 

“இப்படிக் கூட நடக்குமா ?” அப்பாவின் நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன்.

 

“என்னடா எழுதியிருக்காரு ஒம்ம அய்யா .. இந்த முழி முழிக்கிற ”

 

இது எங்கள் மறைவிடம்.  எங்களிடம் இருக்கும் கேள்விக் குறிகள் தான் இந்த ஆலமரத்தில் விழுதுகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.எங்கள் ஊர் பெரியவர்களால் மறைத்து வைக்கப் பட்ட விடயங்கள் எங்களுக்கான ருசிகரமான பண்டங்கள். யாருக்கும் தெரியாத, இல்லை தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கும் எங்களது கும்பல் கொஞ்சம் விவாதத்திற்குரியது. விவாதங்களுக்கே உரியது.

 

சுருளான் , ஊமையன் , செவலை , மருது இன்றைய கூட்டத்தில் இருப்பவர்கள் . நான் அமுதன். இன்றைய அதிகாலையின் ஒரு பொழுதில் பரண் மேல் கண்டெடுக்கப் பட்ட அப்பாவின் நாட்குறிப்பேடு இன்றைய விவாதப்பொருள் என ஆக்கப் பட்டிருந்தது.

 

 

என் அப்பாவிற்கு எழுதத் தெரியும் என்பதே இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் பேசி நான் என்றுமே கேட்டதில்லை. எங்களைப் போல் ஒலி எழுப்ப அவருக்குத் தெரிந்ததில்லை. சதா நேரமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பார். வினோதமான சைகைகளுடன் கத்திக் கொண்டே இருப்பார். எரிச்சலுடன் ,எரிச்சல் படுத்திக் கொண்டிருப்பார். ஆனாலும் எப்பொழுதும் எதையோ சொல்ல முயன்று கொண்டிருப்பதாகவே தோன்றும்.

 

 

அவர் மட்டுமல்ல. இந்த ஊரில் ,சரியாகச் சொல்லுவதென்றால் வீட்டுக்கு ஒருவராவது திண்ணைக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறார்கள். பேச முடியாமல் , கேட்க முடியாமல் , பார்வை மங்கிப் போய் , ஒரு புரியாத பொது மொழிக்குச் சொந்தக்காரர்களாய் … அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஆனால் அதைச் சொல்லும் மொழி அவர்களிடம் இல்லை.

 

ஓரளவேனும் இது புரிய எங்கள் ஊரின் அமைப்பைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

Read the rest of this entry »

Tags: , ,

  

குஜய் TV நேயர்களுக்கு டோபிநாத்த்தின் வணக்கங்கள் .. Welcome to the show ,மாசிலாமணி- The Team Strikes Back Again …  சொல்லுங்க nagul .. Ho do u feel ??

 

அய்யே .. மாமே .. நீ இன்னும் அந்த award function hang over ல இருந்து வெளிய வரவே இல்லியா .. எல்லாருகிட்டயும் அத்தையே தான் கேப்பியா .. தள்ளு தள்ளு இந்த படத்துக்கு நானே போதும் ..

 

வணக்கம் பாஸ் .. நான் தான் ..

 

எனக்கும் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது .. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தோரணை .. மூணு நாளுக்கு முன்னாடி முத்திரை .. நேத்து மாசிலாமணி .. திருந்தவே மாட்டேனா நான் ..

 

காதலில் விழுந்தேன் பார்த்த அப்போவே உசாராயிருந்திருக்கணும் .. எல்லாரும் படம் மொக்க மொக்கன்னு சொல்றானுங்களே .. அப்படி என்ன தான் மொக்கையா இருக்கு பாக்கலாமேன்னு போயிட்டேன் ..

 

அதே மாதிரி ஒரு சாயங்காலம் .. அதே தியாகராஜா தியேட்டர் .. அதே மாதிரி மழை கூட விழுந்தது .. நானும் , ராம் ன்னு ஒரு அப்பாவியும் ஆப்பீஸ்ல இருந்து வீட்டுக்கு திரும்பும் போது . டைடல் பார்க் சிக்னல் ல மனசு மாறி தியேட்டர் பக்கம் ஒதுங்கிட்டோம் .. உள்ள போகும் போதே நாக்க மூக்க style ல ஒரு பாட்டுக்கு அதே செட்ல நகுல் ஆடிட்டு இருந்தார் .. அப்போவே படம் எப்படி இருக்கும் ன்னு புரிஞ்சு போச்சு … 

 

“சீக்கிரம் கிளம்புங்கன்னு சொன்னேன் .. பாருங்க இப்போ படம் ஆரம்பிச்சுருச்சு .. எவ்ளோ நேரம் போச்சோ .. பக்கத்துல இருக்கறவன் கிட்ட கேளுங்க எவ்ளோ நேரம் ஆச்சுன்னு “ என்றான் ராம் ..

 

“ இப்போ தாம்பா பத்து நிமிஷம் ஆச்சு .. “

 

“ டேய் பத்து நிமிஷம் ஆச்சாண்டா .. “

 

“ சரி அப்டியே ஹீரோயின் இன்ட்ரோ வந்திருச்சான்னு கேளுங்க .. “

 

“ @!%^#%^$%$ “

 

சும்மா சொல்லக் கூடாதுங்க .. போன படத்துல பொணம்  மாதிரி வாழ்ந்திருந்த சுனைனா , இந்தப் படத்தில மார்ச்சுவரில இருந்து எழுந்து வந்தா மாதிரி அவ்ளோ fresh ஆ இருக்காங்க … என்னம்மா மூஞ்சில அபிநயம் புடிக்கறாங்க .. படத்துல அவங்க பரதம் கத்துகறாங்கலாமாம் .. என்ன கொடுமை சார் இது ???

Read the rest of this entry »

Tags: , , , ,

 

 

       அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள்

       இழப்பை நான் உணரும் போது

       துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் 

                                              

       - பாப்லோ நெருடா

-                                                                                                                                                       

சந்தியா கொஞ்ச கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறாள் . என் உயிர் நீ .. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் என போராடுவதற்கு எதுவுமில்லை . எல்லாம் முடிந்து விட்டது என்ற நிதர்சனம் மனம் பூராவும் பரவிக் கிடக்கிறது . துடித்துக் கொண்டிருக்கும் அவள் உடலைப் பார்க்கும் போது உயிர் போவதே பரவா இல்லை என எல்லாருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் .

 

மணி மூன்றடித்தது . இன்னமும் அவள் நினைவு திரும்பவில்லை .போவதற்கு முன் ஒரு முறையாவது கண்ணைத் திறந்து பார்க்க மாட்டாளா என தான் அவள் அருகிலேயே உட்கார்ந்திருக்கிறேன்.

 

நேற்று தான் இவளைப் பெண் பார்க்கச் சென்றது போல் இருக்கிறது .

 

பார்த்ததுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது . யார் தான் வேண்டாம் என்பார்கள் இவளைப் போன்ற ஒருத்தியை . மிகவும் அமைதியாகவே என்னருகில் நின்றிருந்தாள் . கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் பால்கனியில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தூரத்திலிருந்த கோவிலொன்றில்  மணியடித்தது .

 

“என்னங்க எதுவுமே பேச மாட்டீங்களா நீங்க ??”

 

அவள் எவ்வளவு பேசுவாள் என்பது அப்பொழுது தெரியாமல் நான் கேட்டது . பைத்தியக்காரி . விட்டால் இரவு முழுவதும் கூட பேசிக் கொண்டேயிருப்பாள் . விரும்பிய இசை கூட சலித்துப்போகும் ஒரு காலத்திற்கு பிறகு . கொஞ்சம் கூட பொருள் , நோக்கம் எதுவுமில்லாமல் அவள் பேசுவது இன்றும் கூட சலித்ததே இல்லை .

 

 ” ஹேய்  பைத்தியக்காரி , ஒரே ஒரு முறை என்னைப் பார்த்து பேசேன் இப்பொழுது “

 

எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் மெதுவாக . நிச்சயம் அவளுக்கு இது கேட்டிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்திறந்து என்னைப் பார்க்கத் தான் போகிறாள்.அவள் முகத்தைப் பார்த்தேன் . கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் இருக்கிறாள் . அன்றும் கூட இதே போல் தான் இருந்தாள்.

 

“ஏதாவது பேசலாமே .. அதுக்கு தான பெரியவங்க தனியா அனுப்பிருக்காங்க . “

 

மெதுவாக தலையை மட்டும் அசைத்தாள்.மீண்டும் கொஞ்ச நேரம் மௌனம் .

 

“சரிங்க , நாம நெறைய பேசிட்டோம்ன்னு நெனைக்கறேன் .. அப்போ கீழ போகலாமா ” என இரண்டடி எடுத்து வைத்தேன் .

 

ம்ம்ஹீம் .. என வேகமாக மறுத்து தலையசைத்தாள். அந்த வெட்கம் கலந்த முகம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது . நின்று அவளையே பார்த்தேன் .

Read the rest of this entry »

Tags: , ,

 

 

என் விரல்கள் பேசிய கவிதைகளே

இன்னும் சந்திக்க வில்லை

முட்டாள் உதடுகள்

அவைகளும் பேச வேண்டுமாம்

 

———————————————————- Read the rest of this entry »

Tags: , ,

 

 

லீவுக்கு மாமனார் வீட்டுக்கு போனா என்னங்க பண்ணனும் .கொஞ்சம் அதிகாரம் பண்ணலாம் . டிவி ரிமோட்ட கைல எடுத்து வச்சுக்கலாம் . கிரிக்கெட் இல்லன்னா புரியாட்டியும் பரவா  இல்லன்னும் புட் பால் ரக்பின்னு கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பாக்கலாம் . ஒரு சானல்ல ,சீன குட்டிங்க கொஞ்சூண்டு துணி போட்டு சகதில கட்டிப் பிடிச்சு சண்ட போடுதுங்க .. அதையாவது ஸ்வாப்பிங்-ல ஜெட்டிக்ஸ் -அ வச்சிக்கிட்டு பாக்கலாம் . நல்லா தூங்கலாம் . சாப்டலாம் . சாயங்காலம் கஞ்சி போட்டு அயர்ன் பண்ண துணிய மாட்டிகிட்டு வொய்ஃபோட கோவிலு சினிமான்னு போயிட்டு வரலாம் . யாராவது கடவுளைக் காட்டறேன்னு சொல்லுவாங்களா . நான் சொல்லிருக்கனே .

 

உங்களுக்கு புரியறா மாதிரி சொல்லணும்னா நான் தெய்வானைய ஏன் கல்யாணம் பண்ணினேங்கறதுல   இருந்து ஆரம்பிக்கணும் .எதுக்குங்க நான் திருச்சில பொண்ணு எடுக்கணும் . நான் திருச்சி பெல்-ல தான் வேலை செய்யறேன் .   அதே ஊருன்னா ஞாயித்துக் கிழமையான போய் வர சௌரியமா  இருக்குமேன்னு தான் .

 

உங்களுக்கு திருவெறும்பீஸ்வரர் மலைக்கோயில் தெரியுமா ??ம்ம் .. ஹ்ம்ம் .. உச்சிபிள்ளையார் கோயில் இல்லைங்க .. இது தஞ்சாவூர் போற ரோட்ல இருக்கு .. பக்கத்துல கூட ஒரு கவர்மென்ட் காலேஜ் இருக்கு .. பொண்ணுங்க எல்லாம் கிளாஸ்க்கு டவுசர் பனியன் போட்டு போவாங்களாம் .. வள்ளி சொல்லுவா . வள்ளி யாருன்னு அப்பறம் சொல்றேன் .

 

மலைக்கோவில் இருக்கா .. அது தாண்டி கொஞ்ச தூரம் போனீங்கன்னா காட்டூருக்கு முன்னாடி தான் கைலாஷ் நகர் இருக்கு . பஸ்ல இருந்து எறங்குனதும் அங்க மளிகை கடை தெரியுது பாருங்க ..அவ்ளோ தாங்க ,அத ஒட்டினா மாதிரி போற சந்துல கடைசிக்கு மொத வீடு .இந்திரன் வாத்தியார் வீடுன்னா எல்லாருக்கும் தெரியும் . மாடில , சாயங்காலம் ஆனா இங்கிலீஷ் டியுசன் எல்லாம் எடுப்பாரு .அது தாங்க நம்ம மாமனார் வீடு .

 

இப்போ வள்ளி . முழு பேரு ஸ்ரீ வள்ளி .நம்ம வொய்ஃபோட தங்கச்சி .. எனக்கு அப்டின்னா மச்சினிச்சி .. இந்த பேர்ல அப்டி என்ன தான் கிக் இருக்கோ போங்க சார் . சொல்லும் போதே ஓரத்துல கள்ளச் சிரிப்பு வருது .மச்சினிச்சி . ஸ்கூல்ல பதினொன்னு படிக்கறா . நல்ல செகப்பா வின்னுன்னு இருப்பா . ஏ கியூப் ப்ளஸ் பி கியூப் னா சிவிக்ஸ் ல வருதான்னு கேப்பா . அல்ஜீப்ரா சொல்லிக் குடுக்கறேன்னு கைல தடவலாம் . கன்னத்தைக் கிள்ளலாம் .எதுவும் சொல்ல மாட்டா. அவங்கப்பாவுக்கும் மாத்ஸ் வாத்தியாருக்கும் ஆகாதது நமக்கு நல்லதா போச்சு . ஸ்கூல் முடிச்சிட்டு அந்த கவர்மென்ட் காலேஜ் தான் போகணும்னு ஆசையாம்.  அவளை பனியன்ல நெனச்சா இப்போவே சப்புக் கொட்டுது .

 

சண்டே மட்டன் ,சைனா காரிங்க குஸ்தி , வள்ளிக்கு மாத்தமாடிஃக்ஸ் , வொய்ஃபோட சோனா -மீனா தியேட்டர்ல சினிமான்னு வாழ்க்கை நல்லா தான் சார் போயிட்டு இருந்தது . எல்லாம் அந்த பாழா போன கடவுளைப் பாக்கற வரைக்கும் .

Read the rest of this entry »

Tags: ,

 

 

சில இடைவெளிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன . சில காரணங்களுக்கெனவே பிரித்து  வைக்கப்பட்டிருக்கின்றோம். சில புரிதல்களுக்காகத்  தான்  வெயிலும்  வருகிறது .

 

கடந்த நான்கு நாட்கள் பெங்களுரு மெட்ரோவில் .வெயில் படாத பிரதேசம் அது. கொஞ்சமேனும் வெயில் தலை காட்டினாலும் கூடவே மழை விரட்டி வருகிறது .

 

சென்னையின் வெயிலுக்கு பயந்து கொண்டு ஒரே ஒரு சட்டை மட்டும் அணிந்து கொண்டு ரயிலேறி , கே.ஆர்.புரத்தில் இறங்கிய பொழுது மணி அதிகாலை நான்கு. இறங்கியதுமே குளிர் ஒரு சட்டைக் கையின் வழியாக ஏறி மறுபுறம் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது.ஆனால் நன்றாகவே இருந்தது அந்தத் தழுவல். பாலா (உங்களுக்கு வழிப்போக்கன் பாலா ) ஜெர்கின் எல்லாம் போர்த்திக் கொண்டு , கடமை உணர்ச்சியுடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு (நான்கு  மணி !!!) ஒரு செட் அப் ஆகத் தான் வந்திருந்தார்.

 

வீட்டுக்குப் போனதும் தனியாக மெத்தை எடுத்துப் போடுகிறார். போர்த்திக் கொள்ள நமீதா போர்வை குடுக்கிறார் .காலை எழுந்தால் பற்பசையோடு நிற்கிறார். இன்னொரு கையில் சூடாக  ஹார்லிக்க்ஸ்.குளிக்க வெந்நீர் போடட்டுமா என்ற கேள்வி வேறு. வேண்டாமப்பா இந்தத் ‘தண்’ணீருக்கு மார்கழிவரை காத்திருக்க வேண்டும் சென்னையில்.எனக்கு இதுவே போதும். குளித்து விட்டு வந்தால் தேங்காய் சட்னி அரைத்து தோசை வேறு சுட்டு வைத்திருக்கிறார். டேய் நீ எல்லாம் ஒரு பேச்சுலரா ?? ஷேம் ஷேம் … அதாகப்பட்டது இந்தப் பாரா எதுக்காகன்னா ஒரு நல்ல குடும்ப இஸ்த்தன் தயார்.பெண்கள் அணுக வேண்டிய முகவரிக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும் .

Read the rest of this entry »

Tags: , , ,