எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்
சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய
பயணச் சீட்டுகளில்
உன் பெயரை
———————————————————
இன்றய உணவு எண்பது ரூபாய்
பேருந்து செலவு பதினான்கு ரூபாய்
புத்தகம் வாங்கியது நூற்றி எழுபதிற்கு
பரிசொன்று சேர்ந்தது ஐம்பதிற்கு
உனது நினைவுகள் எங்கே செல்வேன்
விலையொன்று சொல்ல???
என்ன செய்ய
வரவு செலவு குறிப்புகளிலும்
வந்து நிற்கிறாய் நீயே
ஓர் கவிதை என…
————————————————-
தூரிகை நான்
ஓவியம் நீ
அப்படியே உனை வரைய
என்னால் மட்டுமே முடியும்
வரைந்து கொள்
————————————————-
தவறாக நினைத்துக் கொள்ளாதே
நீ அழுது கொண்டிருக்கும் போதும்
அதன் அழகையும் ரசித்து விட்டு தான்
அணைப்பேன்
——————————————————–
ஒரு உருவமில்லா இசை போல
உன் பார்வை
தொலைதூரம் கடந்து சென்ற பின்னும்
கூடவே வருகிறது
————————————————————-
காலில் குத்தும் நெறிஞ்சு முள்ளையும்
பூவென தூக்கி எறிகிறேன்
புன்னகையுடன்
நீ வரும் பாதை என்பதால்…
————————————————————
Tags: Love poems

11 comments so far
Leave a reply