நீ கடந்து போன

நந்தவனப் பூக்கள் எல்லாவற்றிலும்

ஒரே வாசம்

திருடியது நீயா ?? பூக்களா ??

 

—————————————————

 

கனவில் நீ அணிந்து வரும்

ஆடையின் நிறத்தை எடுத்தே

போர்த்திக்கொள்கிறது

எனது பகல்…

 

————————————————-

 

தன்னில் தெரியும்

உன் பிம்பத்திற்கு

என் கண் பட்டுவிடாமல் இருக்க

உன் கண் மை கேட்டு

ஜன்னலில் பின்னே

காத்திருக்கிறது நிலவு.

 

———————————————

 

 

உன் இரு புருவங்களுக்கிடையே

நீ வைத்திடும் பொட்டு

கறையாக்குகிறது நிலவை.

 

————————————————-

 

யாரிடமேனும்

உன் பெயர் சொல்ல நேர்கையில்

கண நேரத்தில் என் இதழ்களில்

கடந்து போகும் குறுநகை பார்

ஒத்துக்கொள்வாய்

நாணமென்பது மகளிர்க்கு மட்டுமே

உரியதல்ல…

 

—————————————————–

 

அமாவாசை அன்று மட்டுமல்ல

என்று நான் நிலவு தேடினாலும்

என் கால்கள் வந்து நிற்கின்றன

உன் வாசலருகே…

 

——————————————————–

 

Tags:

This entry was posted on Tuesday, May 26th, 2009 at 10:46 pm and is filed under அவள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments so far

Revathi
 1 

//தன்னில் தெரியும்
உன் பிம்பத்திற்கு
என் கண் பட்டுவிடாமல் இருக்க
உன் கண் மை கேட்டு
ஜன்னலில் பின்னே
காத்திருக்கிறது நிலவு….//

இது போல சில வரிகள் இயல்பாக இல்லாவிட்டலும் …..ரசிக்க முடியாமலில்லை :-)
எங்கிருந்து அழகை திருடிக் கொண்டு வருகிறது உன் கவிதைகள் ?

May 27th, 2009 at 12:23 am
Rejovasan
 2 

நன்றி ரேவதி :-)

காதல் கவிதைகள் பெரும்பாலும் தற்குறிப்பேற்றல் அல்லது உயர்வு நவிழ்ச்சி தானே ..

எனக்கு தெரிந்து நிலா ஒரு தேசிய காதலி . காதல் தேவதையின் கையில் இருக்கும் ஒரு மாயக்கண்ணாடி . பிரபஞ்சத்திலேயே அழகான பெண்ணின் முகம் காட்டு என்று உத்தரவிடாமலேயே காதலி முகம் காட்டுவதது ….

May 27th, 2009 at 8:22 am
Rejovasakan
 3 

நீ கடந்து போன
நந்தவனப் பூக்கள் எல்லாவற்றிலும்
ஒரே வாசம்
திருடியது நீயா ?? பூக்களா ??

திருடியது அவளா இருந்த
மணம் எப்புடி இருக்கும்
————————————————
அமாவாசை அன்று மட்டுமல்ல
என்று நான் நிலவு தேடினாலும்
என் கால்கள் வந்து நிற்கின்றன
உன் வாசலருகே…

என்று …எப்பொழுது தேடினாலும்
என நான் வாசிக்கிறேன்
——————————————————

உங்களுக்கு எழுத திகட்டுவதில்லை
எனக்கு படிக்க திகட்டுவதில்லை

அதுனால என் பெயர மாத்திட்டேன்

May 27th, 2009 at 2:14 pm
Rejovasan
 4 

தங்களது அன்பு என்னை நெகிழச் செய்கிறது அப்பாஸ் :-) மிக்க நன்றி :-)

May 27th, 2009 at 5:19 pm
Revathi
 5 

இப்பவும் கவிதையைவிட பதில் அழகாயிடுச்சு :-)
சரி..இது போன்ற வரிகளையெல்லாம் காதலின் இயல்பா எடுத்துக்கலாம் …

May 28th, 2009 at 8:16 am
Phoenix
 6 

நாணமென்பது மகளிர்க்கு மட்டுமே
உரியதல்ல…

True !! I have seen you blushing !! :P

May 28th, 2009 at 8:48 am
Rejovasan
 7 

@Revathi ,

:-)

@Phoenix ,

is it ?? ;-)

May 28th, 2009 at 11:33 am
கவிக்குயில்
 8 

“கனவில் நீ அணிந்து வரும்
ஆடையின் நிறத்தை எடுத்தே
போர்த்திக்கொள்கிறது
எனது பகல்…”— அர்த்தம் பிடிபடவில்லை என்றாலும் அழகாக உள்ளது.

“உன் இரு புருவங்களுக்கிடையே
நீ வைத்திடும் பொட்டு
கறையாக்குகிறது நிலவை.”— இங்க வைக்கறது அங்க எதிரொலிக்கிறது எல்லாம் உன்னோட மன பிராந்தி.:)

May 29th, 2009 at 8:21 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment