21
May
கனவில் வருபவள் 4
எனக்கான தலைவிதி
உன் கண்களில் ஓடும்
ரேகைகளில் இருக்கிறது …
———————————————————-
உன்னிடம் மட்டுமே பேசுவதற்காய்
நிறைய வார்த்தைகள்
சேர்த்து வைத்திருக்கிறேன்
மெளனத்தின் மொழியில் …
————————————————————
இவ்வளவு கவிதைகள் தந்து விட்டாய்
காதலையும் தந்து விடேன்
வேண்டுமானால் திருப்பித் தந்துவிடுகிறேன்
உன் கவிதைகளை…
—————————————————————
உனக்கெடுக்கும் வார்த்தைகள் மட்டும்
வாசனையோடு வருகின்றன
ஆனால் எனக்கு தான்
ரத்த வாடை பிடிப்பதில்லை..
—————————————————————-
நீ வீட்டை விட்டு வராத நாட்கள்
விடுமுறை நாட்கள்
—————————————————————–
நான் தனிமையில் இல்லை
உன் நினைவுகள் போதுமென்று
எல்லவற்றையும்
விரட்டிவிட்டு விட்டேன் .
——————————————————————–
Tags: Love poems
This entry was posted
on Thursday, May 21st, 2009 at 9:55 pm and is filed under கனவில் வருபவள்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.

9 comments so far
Leave a reply