உன்னை நினைவு கூறும்

அடையாளங்களைச் சந்திக்கும்

போதெல்லாம்

புதியதோர் கவிதையையும்

சந்திக்கிறேன்

 

——————————————————————-

 

என்றென்னை

நீயும் சந்திக்கிறாயோ

அன்று உனக்கு மட்டும்

கவிதைகள் சொல்லிக் கொண்டிருப்பேன்

காதோரமாய்…

 

—————————————————————-

 

உன் ஒவ்வொரு புன்னகையின் போதும்

எங்கோ புதிதாய் பூக்கின்றன

பெயர் தெரியாத சில பூக்கள்…

 

———————————————————-

 

உன் நிழல் கூட

அறியா வண்ணம்

உன்னுள் நுழைந்தே தீருவேன்

ஒரு நாள்…

 

————————————————————

 

உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்

ஒரு துளி மழை

சேர்த்துக் கொண்டிருக்கிறேன்

கடல் மட்டம் உயர்வதாக

யாரோ  சொல்லிச் செல்கிறார்கள்…

——————————————————————-

 

என் படுக்கை அருகே

வைத்திருக்கும்

ரோஜா செடியில் என்றெல்லாம்

பூ பூக்கிறதோ

அன்றெல்லாம் நீ என் கனவில் வந்ததாய்

அர்த்தம் கொள்க ..

 

——————————————————————-

 

 

Tags:

This entry was posted on Monday, May 18th, 2009 at 11:59 pm and is filed under அவள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments so far

Abbas
 1 

//————————————————————

உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்…
——————————————————————-

என் படுக்கை அருகே
வைத்திருக்கும்
ரோஜா செடியில் என்றெல்லாம்
பூ பூக்கிறதோ
அன்றெல்லாம் நீ என் கனவில் வந்ததாய்
அர்த்தம் கொள்க ..

——————————————————————-//

இந்த இரண்டும் எனக்கு புரியல
ரசிக்க அர்த்தம் வேணும் ப்ளீஸ்

May 19th, 2009 at 5:59 pm
Revathi
 2 

/உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்…/

இதுவரை நீ எழுதி தீர்த்த காதல் கடலாகி விட்டதா ?
இனிமேல் எழுதுவது என்னவாகும் ?

May 19th, 2009 at 11:31 pm
 3 

யப்பா! முடியல :)

May 20th, 2009 at 9:39 am
Rejovasan
 4 

@ அப்பாஸ் ,

// உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்… //

எப்பொழுதெல்லாம் அவள் நினைவு தோன்றுகிறதோ , அதிகமில்லை ஒரே ஒரு துளி மட்டும் தான் சேர்த்து வைக்கிறேன் . சேர்த்து வைப்பதற்கு உள்ளங்கையோ இல்லை சின்ன மீன் தொட்டியோ போதவில்லை எனக்கு . நிலாக்கள் பிய்த்துக் கொண்டு போன கடற் பள்ளத் தாக்குகள் வேண்டியிருக்கிறது . கடல் மட்டம் உயர்வது இயல்பு . ஆனால் நான் சேர்த்து வைக்கும் மழைத் துளிகளால் தான் உயர்கிறது (தற்குறிப்பேற்றல் ???!!!) என்கிறான் காதலன் . துளித் துளியாய் சேர்த்து கடல் நீர் மட்டம் உயர ஒரு வினாடியில் எவ்வளவு முறை நினைத்திருக்க வேண்டும் !!!

பாஸ் , சுருக்கமா அம்மா தாயே உன்னையே தான் எப்பவும் நான் நெனச்சிட்டு இருக்கேன் அப்டின்னு தான் சொல்ல வரேன் .

May 20th, 2009 at 9:57 am
Rejovasan
 5 

// என் படுக்கை அருகே
வைத்திருக்கும்
ரோஜா செடியில் என்றெல்லாம்
பூ பூக்கிறதோ
அன்றெல்லாம் நீ என் கனவில் வந்ததாய்
அர்த்தம் கொள்க .. //

பூத்திருக்கும் பூ வொன்று தரும் உணர்வையும் , தினம் கனவில் பூக்கும் அவள் தரும் உணர்வையும் ஒப்பிட்டிருக்கிறேன் அவ்வளவுதான் .

அப்பாஸ் , இருக்கறதுலையே கஷ்டம் நம்ம எழுதின காதல் கவிதைகளுக்கு நாமே விளக்கம் சொல்றது .மறுபடியும் கலாய்கரீங்களா ?? ;-) :-)

May 20th, 2009 at 10:01 am
Rejovasan
 6 

@ ரேவதி

// இதுவரை நீ எழுதி தீர்த்த காதல் கடலாகி விட்டதா //

எவ்வளவு எழுதியும் தீராத காதல் …

// இனிமேல் எழுதுவது என்னவாகும் ? //

இனிமேல் நான் என்ன ஆகப் போகிறேனோ ;-)

May 20th, 2009 at 10:03 am
Rejovasan
 7 

@ சேரல் ,

இதுகேவாண்ணா ??!! ;-)

May 20th, 2009 at 10:04 am
sathya
 8 

உன் நிழல் கூட

அறியா வண்ணம்

உன்னுள் நுழைந்தே தீருவேன்

ஒரு நாள்…- ithu rompa nalla iruku :) too gud:)

May 20th, 2009 at 10:27 am
Rejovasan
 9 

நன்றி sat :-) நீயா சொல்ற இந்த கவிதை உனக்கு பிடிச்சிருக்குன்னு …

May 20th, 2009 at 11:50 am
 10 

ஒவ்வொரு கவிதையுமே வித்தியாசமான அனுபவம்..

May 20th, 2009 at 4:13 pm
Revathi
 11 

//எவ்வளவு எழுதியும் தீராத காதல் …//
கவிதையைவிட பதில் அழகாயிடுச்சு :-)

//இனிமேல் நான் என்ன ஆகப் போகிறேனோ //
உன்ன காதல் தான் காப்பாத்தனும் :-)

May 20th, 2009 at 11:23 pm
Rejovasan
 12 

நன்றி ஆதவா :-)

தங்களது பெயர் அழகாக இருக்கிறது ..

May 21st, 2009 at 10:55 am
Rejovasan
 13 

@ ரேவதி

:-)

May 21st, 2009 at 10:56 am
கவிக்குயில்
 14 

அத்தனை வரியும் கொள்ளை அழகு.இது வரை வந்த அவள் குறிப்புகளில்,இந்த குறிப்புகள் ரொம்பவே சிறப்பு.

May 29th, 2009 at 7:49 pm
Rejovasan
 15 

நன்றி கவி :-)

June 1st, 2009 at 4:38 pm
Hari
 16 

Sila varusham munnar indha kavidhaiyai naan padichirunthaa… Appove comment ezhudhi kondaadirukkalaam… Vaazhththa neram paarpaanen…

Arumai…

March 13th, 2011 at 8:27 pm
Rejovasan
 17 

:-)

March 14th, 2011 at 1:46 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment