உன்னை நினைவு கூறும்
அடையாளங்களைச் சந்திக்கும்
போதெல்லாம்
புதியதோர் கவிதையையும்
சந்திக்கிறேன்
——————————————————————-
என்றென்னை
நீயும் சந்திக்கிறாயோ
அன்று உனக்கு மட்டும்
கவிதைகள் சொல்லிக் கொண்டிருப்பேன்
காதோரமாய்…
—————————————————————-
உன் ஒவ்வொரு புன்னகையின் போதும்
எங்கோ புதிதாய் பூக்கின்றன
பெயர் தெரியாத சில பூக்கள்…
———————————————————-
உன் நிழல் கூட
அறியா வண்ணம்
உன்னுள் நுழைந்தே தீருவேன்
ஒரு நாள்…
————————————————————
உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்…
——————————————————————-
என் படுக்கை அருகே
வைத்திருக்கும்
ரோஜா செடியில் என்றெல்லாம்
பூ பூக்கிறதோ
அன்றெல்லாம் நீ என் கனவில் வந்ததாய்
அர்த்தம் கொள்க ..
——————————————————————-
Tags: Love poems
This entry was posted
on Monday, May 18th, 2009 at 11:59 pm and is filed under அவள்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.

17 comments so far
Leave a reply