17
May
கனவில் வருபவள் 3
எல்லா நதியின் பயணமும்
கடல் தேடியே
நதியாகிறேன் நானும் …
————————————————————-
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்குத் தெரியாமல்
என்னை நினைப்பதேயில்லை நீ
என்னைத் தெரியாததால் …
—————————————————————–
உயிர் தேடி வேராய்
மண்ணுக்குள்ளே நான்
நீயோ சிரித்துக் கொண்டு பூவாய்
கிளையின் மேலே ..
———————————————————
வேதனை
தலையணையும் நீயாக
வேண்டும்
தலையணையாய் நீயாக …
——————————————————-
என்று உனது நிழல் துணை கொண்டு
உன்னைத் தேடத் துவங்கினேனோ
அன்று தான் தொலைந்து போனது
எனக்கான அடையாளங்கள்.
——————————————————
நேற்றுப் பிறந்த குழந்தையாய்
எந்நேரமும் சிணுங்கிக்கொண்டு
என் இதயம்
மார்போடணைத்து அமைதிப்படுத்த
உன்னால் மட்டுமே முடியும்.
—————————————————–
Tags: dream, Love poems
This entry was posted
on Sunday, May 17th, 2009 at 2:17 pm and is filed under கனவில் வருபவள்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.

9 comments so far
Leave a reply