காதலிக்காவிட்டிருந்தால்
என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்
எண்ணும் போதே
அடிக்கக் கை ஒங்குகின்றன
உன்னைப் பற்றிய கவிதைகள்
——————————————————-
எதுவும் தெரியாது
உன்னைப் பற்றி
எல்லாம் காதல் கற்றுத்தரும்
என்ற நம்பிக்கையில் …
———————————————————
வசீகரமாய் பார்த்துப்
புன்னகை செய்கையில்
பறிக்கச் சொல்லிக் கேட்கும்
நந்தவனப் பூக்களுக்கு
நடுவே நான்…
—————————————————-
உன்னைப் பார்த்த பின் தான்
அதிகம் பார்த்துக்கொள்ளத் துவங்கினேன்
என்னை
——————————————————–
நிறைய கனவு காண்
எனக்கும் வேலை வேண்டும் அல்லவா???
————————————————————
மழை பெய்யும் போதெல்லாம்
உன் ஞாபகம்
மழை இல்லா நாட்களில்
மழை பெய்யும் ஞாபகம்
————————————————————
Tags: cute, Love poems, she
This entry was posted
on Thursday, May 14th, 2009 at 1:23 pm and is filed under அவள்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.

8 comments so far
Leave a reply