Archive for May, 2009

எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்

சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய

பயணச் சீட்டுகளில்

உன் பெயரை

 

———————————————————

Read the rest of this entry »

Tags:

 

 

நீ கடந்து போன

நந்தவனப் பூக்கள் எல்லாவற்றிலும்

ஒரே வாசம்

திருடியது நீயா ?? பூக்களா ??

 

—————————————————

Read the rest of this entry »

Tags:

 

 

 

 

ஜன்னல் திறந்ததும்

ஆச்சர்யம் கொள்ளாதே

வண்ணத்துப்பூச்சிகளிடம் வழி விசாரித்து

வந்து சேர்ந்திருக்கலாம் நான் அங்கே..

 

———————————————————– 

Read the rest of this entry »

Tags:

 

 

 

 

எனக்கான தலைவிதி

உன் கண்களில் ஓடும்

ரேகைகளில் இருக்கிறது …

 

———————————————————-

Read the rest of this entry »

Tags:

இந்தத் தெருவின் பெண்

இந்தத் தெருவில் ஒரு பெண் உன் போலவே இருக்கிறாள்.

இங்கிருந்து மூன்றோ நான்கோ வீடுகள் தள்ளியிருக்கும் நீல நிற வீடு அவளது .நட்சத்திரங்களாய் சிதறியிருக்கும் வெள்ளை நிற சங்குப் பூக்களும் ,குரோட்டன் செடிகள் நிறைந்த தொட்டிகளும் அவ்வீட்டின் அடையாளங்கள்.

உன்னைச் சந்தித்தது போலவே மறந்து போன ஒரு நாளில் , தெருவளைவில் முதலில் அவளைப் பார்த்த பொழுது நீ என்று எண்ணியே ஏமார்ந்து போனேன்.ஒரே உயரம் தான் .அவளும் கூட உன் நடையில் தான் நடக்கிறாள்.

Read the rest of this entry »

Tags: ,

 

 

 

 

உன்னை நினைவு கூறும்

அடையாளங்களைச் சந்திக்கும்

போதெல்லாம்

புதியதோர் கவிதையையும்

சந்திக்கிறேன்

 

——————————————————————-

Read the rest of this entry »

Tags:

 

 

வெகுநாட்கள் வறுத்தெடுத்த வெயிலுக்குப்

பின்னொரு  மாலையில்

மழை பெய்திருந்த பொழுது

நாங்கள்

பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ளிருந்தோம்

 

அணிந்திருந்த உடையோ

முதுகின் மேல் பை கொண்டிருக்கும்

பொருட்கள் பற்றிய கவலையோ

தோல் காலணிகள் என்கிற ஜாக்கிரதை உணர்வோ 

இல்லை வேறெதோ ஒன்றோ 

மழையிலிருந்து விலகி இருக்கச் செய்திருந்தது

Read the rest of this entry »

Tags: , ,

எல்லா நதியின் பயணமும்

கடல் தேடியே

நதியாகிறேன் நானும் …

————————————————————-

Read the rest of this entry »

Tags: ,

15
May

மீண்டும் 15 …

   Posted by: Rejovasan   in சுவடுகள்

 

 

 

இன்னும் ஓர் வருடம் .. கல்லூரி நாட்கள் முடிந்து போய் ..

 

பார்க்கையில் சில பிரிவுகள் அவசியம் தேவை என்றே தோன்றுகிறது . சென்ற வருடம் போன்ற , உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் எதையும் எழுதத் தோன்றவில்லை. இது ஒரு மறக்க முடியாத நாள் என்பதில் மட்டும் எந்த மாறுதலும் இல்லை .

 

மனமும் , உடலும் கொஞ்சமேனும் மாறி இருக்கின்றன. பார்க்கும் பார்வைகளும் , அவைகள் குறித்தான அவதானிப்புகளும் வேறு விதமாகியிருக்கின்றன. தினம் பேருந்தோ ஏதோ ஒன்று ஏறி  அலுவலகம் செல்லும் கட்டாயங்களாலும் , கண் எதிர் படும்  உணவகங்களில் பசியாறும் பழக்கங்களாலும்  , எனக்காக வாழ்ந்த நாட்கள் ice age காலத்திய மாமூத் யானையின் தந்தங்களாய் மனதின் கீழ் அடுக்குகளில் உறைந்து கொண்டிருக்கிறது .

Read the rest of this entry »

Tags:

 

 

காதலிக்காவிட்டிருந்தால்

என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்

எண்ணும் போதே

அடிக்கக் கை ஒங்குகின்றன

உன்னைப் பற்றிய கவிதைகள்

 

——————————————————-

Read the rest of this entry »

Tags: , ,

Page 1 of 212