தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகள்

முண்டங்களென  தொங்கவிடப் பட்டிருக்கின்றன

குருதி சொட்ட

நகரத்தின் நுழைவாயிலில் …

 

வாலறுந்த நாய்கள் சிலவும்

முகம் சிதைந்த பலரும்

சண்டையிட்டபடி யிருக்கின்றனர்

சிவந்த ப்ரேதங்களுக்காக    

 

கைவிடப்பட்ட ரகசிய பிரதேசமொன்றில்

முனங்கியபடி  பறந்து திரிகின்றது

சர்பங்கள் உண்டு கொண்டிருக்கும் கடைசி பெண்ணின்

வியர்வை யேறிப்போன   உள்ளாடை …

 

ரத்தமூற்றப்பட்ட கோப்பைகள்

யாருக்காகவோ காத்திருக்கின்றன

அனேகமாக எல்லாத் தேநீர் கடைகளிலும் …

 

அருகிலேயே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது

புகைந்து கொண்டிருக்கும் ஆட்காட்டி விரலொன்று …

 

நிறமழிந்து போன குருட்டு வண்ணத்துப்பூச்சிகள்

ஒன்றையொன்று முட்டிக்கொண்டு

ஜன்னல்களின் வெளி வந்து விழும் 

சிதைந்த கருக்கள் கண்டு

அலறியபடி அலைகின்றன …

 

யாருமறியாத வெளியில் இருந்து

நகர் முழுவதும் பெய்து கொண்டிருக்கிறன

துர் நாற்றம் கொண்ட சிறகுகள் …

 

புகையும் நகர் பற்றிக்

கேட்கச் சுவாரசியமான கதைகள்

யாருமில்லாத தெருக்களில்

நிர்வாணமாய் அலைந்திருக்கின்றன..

 

யாவற்றையும் பார்த்தபடி கேட்டபடி

தெருமுனைக் கட்டணக் கழிப்பறையில்

சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் .

Tags: , , , , ,

This entry was posted on Thursday, April 23rd, 2009 at 1:14 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments so far

 1 

யப்பா.. ஏன் இந்த கொலை வெறி..?

April 23rd, 2009 at 1:34 pm
 2 

கொஞ்சம் குழப்புது.. இங்கு பிரதானம் யார்.. நகர் பற்றிய கதைகளா, அல்லது (கடைசிக்?) கடவுளா?

April 23rd, 2009 at 1:40 pm
Rejovasan
 3 

கொலைவெறி எல்லாம் இல்ல … கடைசி நாளைப் பற்றிய கற்பனைகளும் , தர்கங்களும் எப்பவுமே ஒரு புகை மாதிரி எனக்குள்ள இருந்திட்டே இருக்கு ..

நகர் தான் பிரதானம் .. அங்க என்னென்ன எல்லாம் இருக்க முடியும் ன்னு காட்சிப்படுத்த முயற்சி பண்ணிருக்கேன் .. அவ்ளோ தான் ..

கடவுள் எப்பவும் எனக்கு பிடித்த பாத்திரம் .. அவரைப் பற்றின கதைகள் எனக்கு எப்பொழுதுமே மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது …

April 23rd, 2009 at 1:58 pm
sathya
 4 

கடவுள் எப்பவும் எனக்கு பிடித்த பாத்திரம் .. அவரைப் பற்றின கதைகள் எனக்கு எப்பொழுதுமே மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது …(இது கடவுள பிடிச்சு எழுதுன மா3 இல்ல.எவ்ளோ insult pannanum nu ezhuthittu pidicha pathirama??).. paavi… ஆனா எனக்கு பயமா இருந்தது படிக்க:‍) but nalla iruku.. cool very nice..

April 23rd, 2009 at 6:53 pm
Rejovasan
 5 

:-)

April 24th, 2009 at 7:45 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment