Archive for April, 2009

 

காதல் கவிதைகள் அழகானவை

எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன

யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ

அவர்களைத் தவிர ..

 

————————————————————-

Read the rest of this entry »

Tags: , ,

 

 

உதடுகள் சில்லிட்டுப்போகும்

ஒரு முன்பனிக் காலத்தில்

உன் படுக்கையிலிருந்து

கனவு கலையாமல்

தூங்கும் தேவதையாய்

தூக்கிச் செல்வேன்

சிறகுகள் தந்து ..

 

———————————————- 

Read the rest of this entry »

Tags: , ,

 

 
 

தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகள்

முண்டங்களென  தொங்கவிடப் பட்டிருக்கின்றன

குருதி சொட்ட

நகரத்தின் நுழைவாயிலில் …

 

வாலறுந்த நாய்கள் சிலவும்

முகம் சிதைந்த பலரும்

சண்டையிட்டபடி யிருக்கின்றனர்

சிவந்த ப்ரேதங்களுக்காக    

Read the rest of this entry »

Tags: , , , , ,

பயம்

 

 

 

நடுநிசியின்

தொலைதூரச் சத்தத்தில்

திடுக்கிட்டு விழிக்கையில் எல்லாம்

ஜன்னலின் வெளி

கசியும் நிழலாய்

காட்சியளிக்கத் தவறுவதே இல்லை 

நினைவடுக்கின் புறப்பரப்பில்

அலைவுற்றிருக்கும்  

சமீபத்தில் பார்த்திருந்த 

சவத்தின் முகம் …

Read the rest of this entry »

Tags: , , , , , ,

 

ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு

இறைஞ்சி நிற்கிறேன்

உன் முன்னால் …

 

கோபம் கொண்ட பாவனையில்

விழி உயர்த்திப்

போதுமட்டும் ரசித்துவிட்டு ,

கைகுட்டையில் மீதம் வைத்திருந்த

மன்னிப்புகளில் ஒன்றை எடுத்து வீசிப்

புன்னகைக்கிறாய் ரகசியமாக ..

 

மீண்டுமொரு தவறு செய்யத் தயாராகிறேன் …  

Tags: ,

 

 

“பூமார்க் பீடி ஒரு கட்டு “

 

“மொதல்ல துட்டு .. அப்பறமாத்தான் கட்டு “

 

“பார்ரா பாய் டீயாரு கணக்கா வசனமெல்லாம் பேசறாரு .. இங்கன தான இருக்கோம் .. ஓடியா போயிருவோம் .. நம்ம பாய் கடைனு எவ்ளோ பாசமா வந்தா தொரத்துறியே “

 

“நீ ஓடி போனா சந்தோசப்பட போற மொத ஆளு நாந்தேன் .. தெனமும் காக்காய்க்கு சோறு எடுத்து வக்கிரா மாதிரி உனக்கும் எடுத்து வைக்க வேண்டியிருக்கு .. காக்காயாவது சோத்த தின்னுபுட்டு கா காய்னு காத்த வாச்சும் செய்யும் .. நீ என்னத்தப் பண்ற “

 

” ஒரு கட்டு பீடிக்காக ரொம்ப பேச வேணாம் பாய் .. நாங்க எல்லாம் மானஸ்தைங்க … துட்டு வெச்சுட்டு தான் அடுத்த தடவ பீடி கேப்பன் .. காக்கா தான் கா காணு கத்திட்டு அலையும் .. நாங்க எல்லாம் சிங்கம் தெரியும்ல ..”

 

“ஆக்கும் .. இங்க பார்யா .. இவுக சிங்கமாம்ல .. இந்த சிங்கம் பசிச்சா கறிக்கு பதிலா ஸ்டேசனுக்கு வந்து களி திங்கும் .. இப்போ என்ன கேஸு ..?”

 

Read the rest of this entry »

Tags: , ,