Archive for January, 2009

தோழன் கூற்று   

 

 

 

எங்கும் தெரிந்திருக்கும் நிலா போல்

இசை யெங்கும் நிறைந்திருக்கும் இவ்வூரில்

முடிவிலாப் பிரிவொன்றின் லயத்திலமைத்து

காற்றைப் பாடியிருக்கும் மௌனத்தின் மொழியாளே

அவன் காணாக் கண்களால் ஆவது யென்னவென

இமைகள் பூட்டாதே  ! 

 

சற்றே வெளி வந்து பார் .

பௌர்ணமி யாகாது இரண்டாம் பிறை போலாவது

ஆழிலைக்கண் திறந்து சிறு பார்வை பாராயோ வென

சாரளத்துத் துளைகள் நோக்கி வதங்கி

முல்லைக் கொடிக ளெலாம் பூக்களாய்ப் புலம்பியிருக்கின்றன

உன் வீட்டு முற்றமெங்கும் .

Read the rest of this entry »

Tags:

6
Jan

பொய்

   Posted by: Rejovasan   in கதை நேரம்

“எனிதிங் எல்ஸ் விவேக் ??”

தினமும் இந்திய நேரப்படி மாலை 5.30 ற்கு நடக்கும் ஸ்டேடஸ் காலில் முடியும் தருவாயில் தோரணையாகக் கேட்டது மணிகண்டன் . ஆன் சைட் கோ-ஆர்டினேட்டர் .லண்டனில் இருந்துகொண்டு , இங்கே சென்னையில் அவருக்கு கீழே இருப்பவர்களைக் கட்டி மேய்த்துக் கொண்டிருக்கிறார் . வயது சுமார் 30.மூக்குக் கண்ணாடியையும் தொப்பையையும் பார்க்கையில் அதிகமாகக் கூட இருக்கலாம். சமீபத்தில் திருமணமாகி மனைவியை ஊரில் விட்டு விட்டு தனியே ஹனி மூன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் . இந்த கூடுதல் தகவல் அவரது கடமை உணர்வையும் , போங்கடா நீங்களும் உங்கள் வேலையையும் என விட்டு விட்டு வர முடியாத கையலாகாதனத்தையும் சொல்வதற்காக நிச்சயம் அல்ல .

“ஒன்னும் பிரச்சனை இல்ல மணி . அடுத்த வாரத்துக்குள்ள டெஸ்டிங் முடிச்சு யு.ஏ.டி அனுப்பிடலாம் .. அப்பறம் மணி இந்த ஃபிரைடே லீவ் வீணும்

குரலில் மட்டும் மரியாதையைக் குழைத்து , தூரத்திலிருப்பவனுக்கு முகமா தெரியப் போகிறது என்ற மகா தைரியத்தில் முகத்துள் முறுக்கையும் காட்டி , விடுமுறைக்கு கெஞ்சிக் கொண்டிருப்பது விவேக் . வயது 23 . முன்னந்தலையில் இன்னும் கொஞ்ச நாளில் மணியை முந்தி விடுவேன் என்பவன் .இந்த மென்பொருள் துறையில் பரிணாம வளர்ச்சியே இப்படித்தான் . முன்னந் தலையிலும் முட்டிக் கொண்டு வரும் தொப்பையிலும் வெகு சீக்கிரம் வந்து முடிந்து விடும் . குழந்தை பிறந்த உடனேயே அப்பா என்று சொல்லி சொல்லி வளர்த்து விட்டு விட வேண்டும் . இல்லை வாயைத் திறந்த உடனேயே அழகாக அங்கிள் என்று சொல்லி விடும் .

Read the rest of this entry »

Tags: ,

5
Jan

காதல் கதை

   Posted by: Rejovasan   in கதை நேரம்

வெயிலுக்கு முன்பே பனி பெய்திருந்த அந்நாளில் அவளைச் சந்தித்தேன் ..

தெருவினைத் தெளித்து வரைந்து கொண்டிருந்தாள் . கொஞ்ச நேரம் நின்று நனைத்து கொண்டிருந்தேன் .

பனியின் படலம் திரையிட்டு இருந்தும் , அவள் மட்டும் தெரிந்தாள் ஓவியம் போலவே .

மின்னல் அவள் பெயரா ? கண்கள் பார்த்தேன் .ஆமாம் என்றன .

குளிரில் நடுங்கும் உதடுகள் பார்த்தேன் .அதிலிருந்த வரிகளில் உதிர்ந்து கொண்டிருந்தன எனக்கான கவிதைகள் .

அணிந்திருந்தது அவளுக்கான பிரத்யேக ஆடையா இல்லை ஆடைக்கான பிரத்யேக அவளா ??

நெற்றி முன் விழுந்த முடி , தேடி வந்து கை தள்ள ; மீண்டும் என்றேன் .

ஒருமுறை பார்த்தாள் . திரும்பியே சிரித்தாள் .நொடியினில் மறைந்தாள்

தனியே நின்றேன் .

Read the rest of this entry »

Tags: ,