வேலை முடிந்த நாளொன்றின்

களைத்துப் போன 

புறநகர் ரயில் பயணமொன்றில்

விழிப்பிற்கும் உறக்கத்திற்கும்

இடையேயான கனவொன்றிலிருந்து 

பலவந்தமாய் மீள வேண்டியிருந்தது

தொங்குங் கம்பியைத்

தொலைத்து விடாமலிருக்க ..

 

தூக்கம் துரத்த

ஏதாவது யோசித்திருக்க

சிக்கினார்

அன்றும் கடவுள் கைகளிலே ..

எத்தனை வேலைக ளவருக்கு

சொந்தத் தொழிலா

சம்பளமுண்டா

உயரதிகாரிக்கு பயப்படுவாரா

தான் வருமுன்னே

வந்துவிடக் கூடாதவரென

வேண்டியதுண்டா  

விடுப்புக்கு விண்ணப்பிப்பாரா

பயணத்திற்கு மூன்று மாதம் முன்பே

பதிந்து வைப்பாரா

ஊதிய உயர்விற்கு

சண்டை போடுவாரா  

 

பதில் தெரியாத

தொடர் கேள்விகளின் முடிவில்

அவர் ஒருவர் தானா

இல்லையெனில் எங்கிருக்கிறது

கடவுள்களின் அலுவலகம்

புதிய கேள்விகள்     

நிறுத்தத்தில் நின்றன .

 

ஒரு நாளின்

எட்டு மணி நேரம் மட்டுமே

நான் செய்யும்

கூட்டல் கழித்தலிற்கே

சுளுக்கிக் கொள்ள

 

பல நூறாண்டுகள் தாண்டியும்

படைத்துச் சலிக்க 

ஒருவரல்ல கடவுள்

பெயர்களெழுத

பயணச் சீட்டின்

பின்பக்கமாவது தாண்டும்

 

எனக்குத் தெரிந்த

கடவுளர்களின் பெயர் பற்றி

யோசித்துக் கொண்டே

நிலையம் தாண்டும்

மந்தையினூடே ஊர்கையில்

சாலையோரம் படுத்த படி 

பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்

பெயர் சொல்ல விரும்பாத

ஒரு கடவுள் .

Tags: ,

This entry was posted on Wednesday, December 31st, 2008 at 2:32 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments so far

 1 

:) நன்று..

December 31st, 2008 at 2:39 pm
Rejovasan
 2 

:-)

December 31st, 2008 at 2:54 pm
sathya
 3 

its good

December 31st, 2008 at 4:10 pm
 4 

மிக நன்று

December 31st, 2008 at 4:36 pm
Rejovasan
 5 

நன்றி சத்யா :-)

January 1st, 2009 at 5:07 pm
Rejovasan
 6 

ஆதிரை ,
தாங்கள் யாரெனத் தெரியவில்லை .. தெரிவிப்பதிலும் தங்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிகிறது .எனது படைப்புகளுக்கு தங்கள் அறுவடையில் இணைப்பு தந்து , தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி :-)

January 1st, 2009 at 5:10 pm
K.Ravishankar
 7 

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!

January 3rd, 2009 at 8:44 pm
Rejovasan
 8 

நன்றி ரவி :-)

January 3rd, 2009 at 8:59 pm
 9 

கடவுளும் கவிதையும் நன்று

January 4th, 2009 at 4:27 pm
Rejovasan
 10 

நன்றி முத்து :-)

January 4th, 2009 at 10:23 pm
Abbas
 11 

பல நூறாண்டுகள் தாண்டியும்

படைத்துச் சலிக்க

ஒருவரல்ல கடவுள்

பெயர்களெழுத

பயணச் சீட்டின்

பின்பக்கமாவது தாண்டும்

These lines u mean there are many gods and you start to list them in ur train ticket

and one more thing u mean the begger as a person or the gods photo in the last line….

January 9th, 2009 at 3:45 pm
Rejovasan
 12 

//hese lines u mean there are many gods and you start to list them in ur train ticket //

நேரடியாக எடுத்துக் கொள்வதானால் இது தான் பொருள் . இந்த கவிதைக்கான கரு உருவானது பற்றி சொன்னால் , இன்னும் தெளிவாக விளங்கும் என நினைக்கிறேன் .

ஒரு ரயில் நிலையத்தின் அருகில் , சாலையோரம் ஒரு கடவுளின் படம் வரையப்பட்டு மேலே சில நாணயங்கள் சிதறியிருந்தன .. அருகில் வரைந்தவர் யாரும் இல்லை .. தனியே அவரே படுத்துக் கொண்டு பிச்சை கேட்பது போல் இருந்தது .

அந்த தாக்கம் தான் இந்தக் கவிதைக்கான மூலம் .

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அப்பாஸ் :-)

January 12th, 2009 at 10:28 pm
 13 

நன்று! கடைசி வரிகளை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

- இன்னுமொரு கடவுள்

January 30th, 2009 at 7:38 am
Rejovasan
 14 

வரவேண்டும் கடவுளே :-) அங்கே எல்லாரும் சுகமா ??

February 6th, 2009 at 1:38 pm
Bhupesh
 15 

This one is my favorite in the ones I have read so far in your blog

May 21st, 2009 at 11:37 am
Rejovasan
 16 

Thanks na :-)

May 21st, 2009 at 2:58 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment