Archive for November, 2008

சற்றேறக்குறைய

கண்விழித்த கடிகார முள்ளின்

நிமிட பின்னோட்டத்தில்

என் கனவிலிருந்திறங்கி

காணாமல் ஓடிப்போயிருந்ததவ்வுருவம் …

பகலின் நிர்வாண வெளிச்சத்திலும்

வறண்ட காற்றின் வெக்கையிலும்

தேடிக் கொண்டேயிருந்தன யென் கண்கள் ..

Read the rest of this entry »

Tags:

 

 

அபூர்வா .. அபூர்வா .. அபூர்வா …

 

அவள் மூஞ்சியைப் பார்க்க வேண்டுமே .நல்ல பெண் போல சேலையைப் போர்த்திக் கொண்டு வந்து எதுவுமே தெரியாதவள் போல் என் முன்னாலேயே வந்து நிற்கிறாள் . நீல நிற புடவை .

 

நான் வெறுக்கும் ஒரே நிறம் . ச்சே நீங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டீர்களே .

நீதி மன்றத்தில் …. சாதனாவை கொன்றவர்களை சும்மா விடலாமா .. இல்லை விட்டு தான் விடுவேனா … கொஞ்சம் நேரம் தப்பியிருந்தால் என்னையும் கொன்றுவிட்டிருப்பார்கள் . மென் ஆப் ஹாலோசாம் .. சன் ஆப் ……… உங்களுக்கு நடந்ததை எப்படித் தெளிவாக சொல்லுவது . ஹ்ம்ம் .. சரி .. அது தான் சரி .. நானே நடித்துக் காட்டுகிறேன் .

 

நான் தான் அபூர்வா இப்பொழுது .

 

இப்படித்தானே புடவைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, தலையைக்  குனிந்து கொண்டு  இரண்டு கால்களையும் இணைத்து வைத்துக் கொண்டு நின்றாள்.”நான் சொல்வதெல்லாம்  உண்மை .. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை ” முதலில் பகவத் கீதையை அவமதிப்பதை

நிறுத்த வேண்டும் .

 

“நீங்கள் எதாவது கூற விரும்புகிறீர்களா அபூர்வா ” எனக்கு அந்த நீதிபதியைப் பிடிக்கவே இல்லை . எதுவும் விசாரிக்காமல் தூக்கில் போட்டிருக்க வேண்டாமா அவளை .நான் சொல்லுகிறேன் போதாதா .. அதென்ன நம்பிக்கை இல்லாமல்

அவளையும் கேட்பது .

 

நீலிக் கண்ணீர் .. நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் . “என் கணவர் இப்படி ஒரு குற்றம் சுமத்தும் பொழுது நான் என்ன சொல்ல …” அடேயப்பா .. எப்பேர்ப்பட்ட நடிப்பு .

Read the rest of this entry »

Tags: ,

 

அபூர்வாவின் காதல் முகம் ஒருமுறை வந்து போனது மனதில் .பிரமை பிடிப்பது என்றால் என்ன என்பதன் முழு அர்த்தம் விளங்கக் கண்டேன் . என் தோள் தொட்டாள் சாதனா .

 

“அப்படின்னா , அபூர்வா வேற்றுகிரகத்தச் சேர்ந்தவளா??”

 

கைகளைக் கட்டிக் கொண்டு தலையசைத்தாள் . “யார் சொன்னது ?”

 

“என்ன தான் சொல்ல வர நீ ?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்றியா ??”

Read the rest of this entry »

Tags: ,

 

 

நரகாசுரன் வேறு வேலையில்லாமல்

செத்துத் தொலைத்து விட்டான்

எத்தனை வெத்து வேலைகள்

நமக்கிங்கே …

 

தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக

ஒரு வாரமாய்

வீடு வராமல் உழைத்துக் கொண்டிருக்கும்

அலுவலகக் கணவன்கள் …

 

ஊரே உறங்கிய பின்

ஒவ்வொருவராய் கம்பளி போர்த்திக் கொண்டு

தான் போட்ட கோலத்தை

தெருவோடு ஒப்பிட்டுப் பார்த்து

பெருமூச்செறியும்

வீட்டு மனைவிகள் …

Read the rest of this entry »

Tags: , , ,