24
Oct
அதிர்வுகள்
தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்
நாடு நகரங்கள் தாண்டி
காடுகள் புகுந்து மீண்டு
சில மலைகளைத் துளையிட்டு
வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன நம்மை
நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன
வழியனுப்பிகளின் முகங்களையும்
கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்
நாம் ஏறிய ரயில் நிலையங்களின்
நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….
தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்
தண்டவாளங்களின் மேலும்
நாம் இறங்கிய பின்னர்
நம்முள்ளும் ….
Tags: ஆதலினால் கவிதை ...
This entry was posted
on Friday, October 24th, 2008 at 11:30 am and is filed under ஆதலினால் கவிதை.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.

4 comments so far
Leave a reply