தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

நாடு நகரங்கள் தாண்டி

காடுகள்  புகுந்து மீண்டு

சில  மலைகளைத் துளையிட்டு

வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன நம்மை

நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன

வழியனுப்பிகளின் முகங்களையும்

கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்

நாம் ஏறிய  ரயில் நிலையங்களின்

நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

தண்டவாளங்களின் மேலும் 

நாம் இறங்கிய  பின்னர்

நம்முள்ளும் ….

Tags:

This entry was posted on Friday, October 24th, 2008 at 11:30 am and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments so far

 1 

தீபாவளிக்கு ஊருக்குப் போக ட்ரெயினில டிக்கெட் கிடைச்சுடுச்சுனு சொல்லிக்காட்டுறத்துக்கா..? :)

October 24th, 2008 at 12:01 pm
Rejovasan
 2 

:-)

வழியனுப்ப யாருமில்லன்னு சொல்றதுக்கும் கூட

October 24th, 2008 at 12:27 pm
 3 

நன்றாக இருக்கிறது.
‘நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன”
பொதுவாக இதை சுமந்துகொண்டு போவது
மாதிரி எழுதுவார்கள். நிங்கள் உல்டா.நம்ம
ஊர் ரயில் படம் போட்டிருக்கலாம்.கவிதை
மனதில் ஒட்ட. raviaditya.blogspot.com வாருங்கள்.”spam mail kavithaikal” படிக்கலாம்.

October 24th, 2008 at 12:42 pm
Rejovasan
 4 

வாங்க ரவி ..:-) என்ன விஷயம்ன்னா என் company ல blogspot உம் பார்க்க முடியாது .. imagum தேட முடியாது . எல்லாம் bolcked . அதான் கெடைச்ச படத்த போட்டுட்டேன் .

கண்டிப்பா வீட்டுக்கு போனதும் உங்க தளத்த பாக்கணும் . அழைப்பிற்கு நன்றி :-)

October 24th, 2008 at 1:25 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment