23
Oct
நி(ந)னைவுகள்
மழையில் நனைவதாய்
நெடுநேர பிரமை …
என் நீண்ட பாதை முழுவதும்
நிலவும் விண்மீன்களும்
கதை பேசியபடி வந்தும்
காற்றின் வெம்மை
மழையின் ஸ்பரிசத்திற்கு
மறுப்பு தெரிவித்தும்
எதிர்படும் வழியில்
தாழ்வாரங்களின் கீழ்
யாரும் ஒதுங்கி நிற்காத போதும்
நிசப்தமான தெருக்களின்
ஜன்னல்களின் வெளியே
நீட்டப்பட்ட பிஞ்சுக் கைகளை
பார்க்க நேராத போதும்
தூறாத மரக்கிளைகள்
வழியெங்கும் உதிர்த்த சருகுகள்
கால்களுக்கு அடியில் சப்தித்த போதும்
மழையில் நனைவதாய்
நெடுநேர பிரமை …
கரிய இருளை ஒருமுறை
ஊடுருவிப் பார்த்துவிட்டு
குடைஎடுத்து விரித்து
அதன் விளிம்புகளில் வழியும்
மழைத் துளிகளை ஸ்பரிசித்துக் கொண்டே
வந்துகொண்டிருக்கிறேன்
உன்னினைவுகளோடு உன் இருப்பிடம் தேடி …
Tags: ஆதலினால் கவிதை ...
This entry was posted
on Thursday, October 23rd, 2008 at 9:30 am and is filed under ஆதலினால் கவிதை.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.

5 comments so far
Leave a reply