கௌதம் – ஹாரிஸ் -தாமரை கூட்டணி திரும்பவும் வந்திருக்கிறார்கள் வாரணம் ஆயிரத்தோடு .ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியானால் என்ன , போங்கடா என்று சொல்லி விட்டு இன்னும் ஆறு பாடல்கள் . இப்போதைய ஹாட் .
கௌதமின் படங்கள் , தலைப்பிலிருந்து , பாடல்கள் , காட்சிப் படுத்துதல் என எல்லாமே ஒரு தேர்ந்த கவிதையின் கட்டமைப்பில் இருக்கும் . வாரணம் ஆயிரம் என்ற பெயரே சாட்சி . நிச்சயம் படத்தில் ஒரு பாடலாவது பலமுறை கேட்கவைக்கும் . கண்மூடி தூங்க முயலும் போது தலைக்குள் தொடர்ந்து ஓடி ,கனவைக் கெடுக்கும் (ஹேங் ஓவர் ???!!) . அதற்கு ஒரே தீர்வு , ஊருக்கே தெரிந்த வைத்தியம் எழுந்து மீண்டும் ஒருமுறை பாடலைக் கேட்பது தான் .
வெண்மதி வெண்மதி – மின்னலே
ஒன்ற இரண்டா – காக்க காக்க
பார்த்த முதல் நாளே – வேட்டையாடு விளையாடு (இந்தப் பாடல் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது .. இருந்தாலும் இன்னமும் கேட்டுக் கொண்டிருப்பது தனி கதை.. அது இன்னொரு சமயம் )
காதல் கொஞ்சம் – பச்சை கிளி முத்துச் சரம்
சத்யம் ஊத்திக்கொண்ட பாடல்களால் (நெஜமாகவே நீங்க தானா ஹாரிஸ் ) ஒரு எதிர்பார்ப்பு இல்லாமலே பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன் . கேட்ட முதல் பாடல் அஞ்சலை கானா பாட்டு . கடுப்பாகிவிட்டது . போச்சுடா இதுவும் ஊத்தலா என சலிப்புடன் தான் மற்ற பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன் .
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை —
சரி அப்பறம்
நீருக்குள் மூழ்கிடும் தாமரை —
யாருகிட்ட ஓட்டறீங்க .. தாமரை எப்டியா தண்ணிக்குள்ள மூழ்கும் .. ரைமிங் கு என்ன வேணும் னா எழுதுவீங்களா
சட்டென்று மாறுது வானிலை
அடுத்த வரி தான் எழுந்து உட்கார வைத்தது .
பெண்ணே உன் மேல் பிழை .
அழகான ஒரு குறுங்கவிதை . பாடல் முழுக்க . திருவள்ளுவராவது காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் ன்னு தான் சொன்னாரு . தாமரை கொஞ்சம் மேல போய் தாமரை (பார்ரா மறுபடியும் தாமரை !!) நீருக்குள்ளே மூழ்கிடுச்சுன்னு சொல்றாங்க . அது என்டோட பிழை இல்ல .. உன்னோடது பெண்ணே ..
அஞ்சலை , ஏத்தி ஏத்தி எல்லாத்தையும் தூக்கி போட்டு நெஞ்சுக்குள் பெய்திடும் , நீயின்றி நான் இல்லை , அனல் மேல பனி துளி , எல்லாமே அழகான குட்டி குட்டி கவிதைகளோட தொகுப்பு . கண்டிப்பா கவிதைக்காக ஹாரிஸ் நெறைய காம்ப்ரமைஸ் பண்ணிருக்காரு .(கள்ளத்தனம் ஏதுமில்லா புன்னகையோ போகமில்லா ) .
அருமையான குரலில் , தெளிவான உச்சரிப்புடன் ஹரிஹரன் .. உடன் தேவன் .. அழகான கவிதை வரிகள் .. அதை சிதைக்காத மெல்லிய ஆனால் உயிர் தொடும் இசை , ஹம்மிங் . கோரஸ் என எல்லாமே ஒரு perfect team .
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் (உண்மையில் எல்லாமே )
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்
எவ்வளவு ரசனையான வரிகள் . அந்த வீடு எப்டி இருக்கும் ன்னு பார்க்க காத்து தான் இருக்கேன் . கௌதமும் அவரோட பங்கை சரியா செஞ்சிருந்தார்னா பாடல் அதிகமுறை எல்லா தொலைக்காட்சிகளிலும் ஓடும் .
அடுத்த வரிகள்
காதல் என்னைக் கேட்க வில்லை
கேட்டால் அது காதல் இல்லை
விளக்கம் எதுவும் வேணுமா என்ன ??
ரெண்டு நாளா ஒரே பாட்ட ஓட விட்டு ஏன்டா கொல்ற என்ற அறை நண்பர்களின் குமுறல்களை கணக்கில் எடுத்துக் கொண்டு (ரசனை இல்லாத பாய்ஸ்) காதில் head phones மாட்டிக் கொண்டு பாடல் கேட்க ஆரம்பித்து விட்டேன் .நேற்று மதியம் ஆரம்பித்தது . எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே தெரியவில்லை . ஒவ்வொரு முறையும் எதாவரு ஒரு வரியில் , ஏதாவது ஒரு ஒலியில் நின்று விட்டிருந்தேன் . பாடல் மட்டும் என்னைக் கடந்து போயிருந்தது . அது ஒரு விதமான விளக்க முடியாத உணர்வு .
உங்களுக்கு மிகவும் பிடித்தமான பெண்ணுடன் , மாலை மங்கிய நேரத்தில் நெடுந்தூரம் நடந்து சென்று கொண்டிருக்கையில் , நீங்களே எதிர் பாராமல் உங்கள் கைகளை எடுத்து அவள் கோர்த்துக் கொண்டால் ,
இல்லை மாடியில் காயும் உடைகளை எடுக்கச் செல்கையில் மழை வந்து ஒரு நொடியில் நனைந்து போனால் ,
இல்லை தெருவில் விளையாடும் குழந்தைகள் , வழியில் செல்லும் உங்களை , அங்கிள் விளையாட வர்றீங்களா எனக்கேட்டால் ..
இந்த உணர்வுகளை எல்லாம் விவாரிக்க முடியாதல்லவா ? ஒன்றுக் கொன்று ஒப்புமை தானே சொல்ல முடியும் .
பாடலை நிறுத்தி விட்டு வீட்டை விட்டு வெளியே வருகையிலும் பாடல் மட்டும் கூடவே வந்துகொண்டிருந்து . எப்பொழுதும் பார்க்கும் அதே நிலா , எப்பொழுதும் தொடும் அதே காற்று (உன்னைத் தாண்டி போகும் போது வீசும் காற்றின் வீச்சு வேறு ).. ஆனால் நேற்று புது அனுபவமாக இருந்தது.
வீட்டின் முன்னிருந்த பிள்ளையார் கூட அழகாய் தெரிந்தார் . அவர் செம்பருத்தியை எடுத்து அவருக்கே கொடுத்தேன் . எல்லாவற்றையும் தாண்டி கவிதைகளில் தாமரை நிற்கிறார் . அந்தாதி போல அங்கங்கே ஒரு வரியையே உள்ளுக்குள் வைத்திருக்கும் வார்த்தைகள் . நாமெழுதியிருக்க வேண்டுமே என பொறாமைப்பட வைத்தது .
கேட்டுப் பாருங்கள்.
இந்த வாரக் குட்டு (சும்மா லுலுவாய்க்கு)
பதிவர் bee’morgan க்கு .. ஹரிஹரன் குரல் கேட்டுக் கொண்டிருந்த போது , ஏகன் பாடல் கேட்டியா என உசுப்பேத்தி விட்டு , அதை கேட்க வைத்துக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக
Tags: சினிமா, சூர்யா, வாரணம் ஆயிரம்

17 comments so far
Leave a reply