9
Oct

அனிச்சை

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

 

 

வேலை பிடிக்காத காலையொன்றில்

வீடு ஒதுக்குகையில்

பழைய புத்தகங்களுக்கிடையில்

பார்க்கக் கிடைக்கும் கையெழுத்துகளில்

 

அங்காடித் தெருவில்

கணவன் பின்னோடிக்கொண்டிருக்கும்

தோழிகள் தந்து போகும்

சில நிமிடப் புன்னகைகளில்

 

பேருந்து நிலையத் தேநீர் கடைகளில்

நெருப்பு கேட்பது

உடன் படித்த நண்பனாயிருக்கையில்

 

பள்ளிக் கம்பிக் கதவுகளின் வழி

நம் குழந்தைகள் கைகளாட்டிச்

செல்கையில்

 

மாதமொருமுறை

கையெழுத்து வேண்டி தரக்குறிப்புகள் 

நம்முன் நீட்டபடுகையில்

 

பேச்சுப் போட்டிக்கென

எதிர் வீட்டுக் குழந்தை

பாரதி பற்றி

எழுதி வாங்கிச்செல்கையில்

 

அரும்புகிறது

இதழோரப் புன்னகை ஒன்று

சில கடந்தகாலக் குறிப்புகளுடன் …

Tags:

This entry was posted on Thursday, October 9th, 2008 at 10:01 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

One comment

sathya
 1 

nice one :)

October 11th, 2008 at 3:49 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment