9
Oct
அனிச்சை
வேலை பிடிக்காத காலையொன்றில்
வீடு ஒதுக்குகையில்
பழைய புத்தகங்களுக்கிடையில்
பார்க்கக் கிடைக்கும் கையெழுத்துகளில்
அங்காடித் தெருவில்
கணவன் பின்னோடிக்கொண்டிருக்கும்
தோழிகள் தந்து போகும்
சில நிமிடப் புன்னகைகளில்
பேருந்து நிலையத் தேநீர் கடைகளில்
நெருப்பு கேட்பது
உடன் படித்த நண்பனாயிருக்கையில்
பள்ளிக் கம்பிக் கதவுகளின் வழி
நம் குழந்தைகள் கைகளாட்டிச்
செல்கையில்
மாதமொருமுறை
கையெழுத்து வேண்டி தரக்குறிப்புகள்
நம்முன் நீட்டபடுகையில்
பேச்சுப் போட்டிக்கென
எதிர் வீட்டுக் குழந்தை
பாரதி பற்றி
எழுதி வாங்கிச்செல்கையில்
அரும்புகிறது
இதழோரப் புன்னகை ஒன்று
சில கடந்தகாலக் குறிப்புகளுடன் …
Tags: ஆதலினால் கவிதை ...
This entry was posted
on Thursday, October 9th, 2008 at 10:01 pm and is filed under ஆதலினால் கவிதை.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.

One comment
Leave a reply