Archive for September, 2008

சர்வம்-3

சர்வம்-3

“அபூர்வா பாவமில்லையா ? இவ்வளவு காதலித்துவிட்டு அவளைக் கொல்ல எப்படி உனக்கு மனது வருகிறது ? “

தெரியும் எனக்கு , உங்களுக்கும் அவளைத் தான் பிடிக்கும் என்று . நான் சொல்ல வந்ததை முழுதாகக் கேட்டு விட்டு பின் முடிவு செய்யுங்கள் யார் பாவமென்று. சில சம்பவங்களைச் சொன்னால் தான் உங்களுக்குப் புரியும் . நீங்கள் என்னை முழுவதுமாக நம்பித்தான் ஆக வேண்டும் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . அபூர்வா சாதரண பெண் அல்ல .. ஒரு வேளை அவள் பெண்ணாகவே கூட இல்லாமல் இருக்கலாம் .

மூன்று நாட்களுக்கு முன்பு ,

Read the rest of this entry »

Tags:

 

எல்லா நாட்களிலும்

வந்து போகத்

தவறுவதில்லை நிலவு

 

அரை வட்டமாய் தேய்ந்தோ 

உட்குழிந்து வளைந்து

வெள்ளை வானவில்லாகவோ

முனை மழுங்கியோ

எப்படியும் வந்துவிடுகிறது

 

அம்மாவாசை அன்று கூட

பார்க்கும் இடங்களிலெல்லாம்

வெறுமை வைத்து

தன் இருப்பை அறிவிக்கிறது

Read the rest of this entry »

Tags:

 

மீட்சியுரா

கடந்த காலங்கள்

காயங்கள் மீறிய தழும்பென

நிலைத்து நினைவுறுத்துகின்றன 

சம்பவங்களை ..

 

கம்பிகள் அறியாமல்

மீட்டும் விரல்கள் அறியாமல்

கேட்கும் செவிகள் அறியாமல்

இசையின் வழியே வந்திறங்கி

மீட்டுகின்றன புலன்களை …

Read the rest of this entry »

Tags:

வலுக்கட்டாயமாக

என் துயில் உறியப்படும்

சாமங்களின் மீதங்கள்

இமைகள் மூடாமலேயே

கரிய இருளின் பின்னே கழிகின்றன

Read the rest of this entry »

Tags:

சர்வம்-2

சர்வம்-2

அபூர்வாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது . யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் இவள் போன்ற ஒரு பெண்ணை . அபூர்வா . அவளை நான் சந்தித்தது எல்லா காதல் கதைகளிலும் வருவது போல , தாவணி கட்டிக் கொண்டு , பூ வைத்துக் கொண்டு ஏதோ ஓர் கோவில் பிரகாரத்தை அவள் சுற்றி வரும் போதல்ல .. முதலில் .கோவிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , இது காதல் கதையுமில்லை .

எங்கள் சந்திப்பு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதா எனத் தெரியாது எனக்கு .ஆனால் அவளை நான் பார்த்த வினாடியில் தான் எனக்கான சொர்க்கம் நிச்சயிக்கப்பட்டது . அம்மா கிடையாது எனக்கு . அப்பா … இருக்கிறார் .. எங்கோ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வினாடிகளைக் காசாக்கிக் கொண்டு . எனக்கென்று யாரும் கிடையாது . எந்த பொறுப்பும் கிடையாது .பெண்பார்க்கக் கூட தூரத்து பெரியம்மாவைத் தான் கூட்டிக் கொண்டு போயிருந்தேன் .

அதிகபட்சம் ஆறு நாட்கள் காதலித்திருப்பேன் . அதற்குள் எல்லாம் முடிந்து , இப்பொழுது என் மார்பில் அவள் காதனியின் அச்சுப் பதியும் தொலைவில் இருக்கிறாள் . நிறைய படித்துவிட்டேன் . நிறைய வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்தும் இட்டாகிவிட்டது . இனிமேல் மை நிச்சயம் தீராது எனத் தீர்மானித்த ஒரு நாளில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தோன்றியது . நேர் கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைக்கும் சில திருப்பங்கள் தேவைப்பட்டன .

Read the rest of this entry »

Tags:

            

 

மழைவாசமும்

மழலை வாசமும்

பிடிக்காதவர்கள் உண்டா

யாரேனும் இங்கே  ??

 

நீங்கள் பட்டியல் எடுப்பதாயிருந்தால்

விசாரிக்கத் தேவை இல்லை

என்னைப் பற்றி…

இருக்காது நிச்சயம்

என் பெயர் அதில் …

 

நாட்காட்டியுடன் 

நவம்பர் மாதத்திற்காக

காத்திருப்பவன் நானும் தான் …

 

அடுக்குமாடிக் குடியிருப்பில்

அடைக்கப்பட்டவர்களில்

ஒருவன் தான் என்றாலும்

நானொரு மழைப்பாடகன் என்பதில்

என்றுமே பெருமை உண்டெனக்கு …

 

அடைமழை பெய்யும் போது

அணைப்பதில் விருப்பம் சிலருக்கு

எட்ட நின்று ரசிப்பதில்

திருப்தி பலருக்கு …

 

உதடு குவித்து

முத்தம் தரப் பிடிக்கும்

சிலருக்கு

உள்ளங்கை காட்டி

முத்தம் வாங்கப் பிடிக்கும்

பலருக்கு …

 

மழையினில் நனைந்து

கொட்டும் ஒவ்வொரு துளியையும்

குருதியில் குழைத்து

மழையாகிடவே கனவெனக்கு..

 

எனது சில ஆயிர வினாடிகளுக்கு

தற்காலிக ஓய்வு தந்துவிட்ட

மாலை நேரம் அது

 

மெல்ல மழைநேரமாயும்

ஆகிக் கொண்டிருந்தது …

 

உதறிவிட்டாலும் சிதறியதுளிகள்

மீண்டும் சென்று மேகம் சேரும் …

 

உன் போலத்தானா

நானும் மழையே ..!

 

மழை தொட்டு

முத்தமிட்ட மண் கிளம்பும்

வாசம் போல்

என்னுள் சுவாசமாய் கலந்துவிட்ட

நம் நியாபகங்கள் …

 

எப்படி இருக்கிறாய்

என் பிரிய தோழி …

Read the rest of this entry »

Tags:

 

எல்லாரும் உறங்கிப்போன

இரண்டாம் சாமங்களின் இருண்ட பக்கங்களில்

விழித்தெழுந்து உலவத் துவங்குகின்றன

கரப்பான்கள்

 

காற்றின் அந்தரங்கப் பிரதேசங்களில்

தம் வாழ்வின் ரகசியங்களை

நீண்ட பெரு மீசையால்

துழாவியபடி இருக்கின்றன

Read the rest of this entry »

Tags:

1
Sep

முடிவிலி

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

 

ஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்

சுடும் கரை மணல் தொடுகையிலும் …

 

நிசப்த்தமான தெருக்களில்

நீண்ட தனி நடைகளிலும் …

 

மழை முடிந்த பின்

ஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …

 

கூட ஒட்டி வரும் தனிமையிலும்  

 

தேடிப்பார்க்கிறேன்

நாம் சந்தித்ததற்கான தடையங்கள்

ஏதேனும் உளதா என ..

Read the rest of this entry »

Tags:

  

 

 

யாமம் கூடிய சிறுபொழுதுகளிலும்

முன்பனி மூடிய பெரும்பொழுதுகளிலும்

ஆடித் திரியும் பறவைகளின் மேல்

கண்வைத்துக் கொண்டேயிருக்கிறது காலம் …

 

நூலிழை பிறழாமல் குறி தேடிச் சென்று

சிதைத்துச் சிதறடிக்கும்

வன்மம் கொண்ட தோட்டாக்கள் அதனிடம் ..

 

இளவெயிற் கதிர்களில் மிதக்கையிலோ

இணையுடன் கூடிச் சுகிக்கையிலோ 

நிழலினிற் பதுங்கிக் கிடக்கையிலோ

நித்திரைக் கனவினிற் தன்னை மறக்கையிலோ  

 

 

நினைவு பிறழ்ந்து தோட்டாவைத் தான்

பாய்சிடக் கூடுமென்று மிரட்டி

பேச்சுவார்த்தைக் கழைக்கிறது

பறவைகளை அது ..

 

தங்க இருக்கைகளைக் காட்டி

கழற்றித் தந்துவிடு இறகுகளை யெனக்

கேட்கிறதது ..

 

எதிர்த்துப் பேசும் பறவைகள்

வாயிலேயே சுடப்படுகின்றன

 

மீதமுள்ள பறவைகள்

இறகுகளைக் கழற்றித் தந்து விட்டு

இருக்கைகள் தந்த காலத்திற்கு

நன்றி சொல்லிக் கொண்டே ,

அமர்ந்தபடி

காலத்திற்கும் மென்றுகொண்டே யிருக்கின்றன

இறந்த பறவைகளின் சவங்களையும்

இணங்க மறுத்த மடத்தனங்களையும் .

Tags:

1
Sep

சில உண்மைகள் …

   Posted by: Rejovasan   in கதை நேரம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன . இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்த மாதம் சொர்க்கத்தில் தினமும் பல தாம்பூலங்கள் மாற்றப் பட்டிருக்க வேண்டும் . எத்தனை திருமணங்கள் . இருந்தும் எனக்கு ஏனோ இந்தத் திருமணத்தில் அதிக ஆர்வம் . காரணம் ?? உண்மையில் தெரியாது . இந்த கதை படித்து முடித்ததும் இதே எண்ணம் உங்களுக்கும் தோன்றக் கூடும் .ஆனால் உத்திரவாதம் ஏதும் தருவதற்கில்லை

மணமகன் மேடையில் வந்தமர்ந்து சரியாக மூன்று நிமிடங்கள் இருபத்தேழு வினாடிகள் ஆகின்றன . அவன் நெற்றியில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை அவன் நண்பன் துடைத்துக் கொண்டிருந்தான் தன் திருமணம் பற்றிய கனவுகளோடு . மஞ்சள் பூசப்பட்டிருந்த தேங்காயின் கொண்டையில் பூ வைக்கப் பட்டிருந்தது . அது அவிழ்ந்து விழும் வண்ணம் ப்ரோகிதர் தந்த கெமிக்கல் கலந்த மஞ்சள் பூசப்பட்டு அவசரமாக நிறமேறிய அரிசி தூவப்பட்டுக் கொண்டிருந்தது . மணப்பெண் கூரைப்பட்டு கட்டிக் கொண்டிருந்தாள் உள்ளே .அல்லது கூரைப்பட்டால் சுற்றப்பட்டுக் கொண்டிருந்தாள் . மாப்பிள்ளைக்கு மட்டும் என்ன வாழ்கிறதாம் . அரைஞாண் கயிறு , மேலும் பாதுகாப்பிற்கு பெல்ட் அணிந்தும் அடிவயிற்றில் கனமாக இருப்பது அவன் அடிக்கடி தொட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தையிலேயே தெரிகிறது .

“பொண்ண அழைச்சிண்டு வாங்கோ ” காத்திருந்தது போல தோழிகள் சூழ தரையை ஆராய்ந்து கொண்டு புதிதாக வெட்கப்படக் கற்றுக் கொண்டவள் போல இதுவரை வாழ்ந்த அத்தனை நாட்களுக்குமாய் சேர்த்து கையிலிட்டிருந்த மருதாணியைக் காட்டிலும் சிவந்து போய் வந்து கொண்டிருந்தாள் .

சின்ன மேடையில் கொள்ளாத அளவு கூட்டம் . மாற்றி மாற்றி மாலையிட்டுக் கொண்டிருந்தார்கள் . போட்டு வைத்தார்கள் . காலில் விழுந்தார்கள் . எங்கிருந்தோ பிடுங்கி வந்திருந்த வாழைக் கன்றை கயிறு போட்டுக் கட்டினார்கள் . கையில் நீரிடார்கள் .நெருப்பில் நெய்யிட்டார்கள் . முன்னாலிருந்த தூண் பார்க்க விடமாட்டேன் என்றது .அருகில் வேறு ஒரே இரைச்சல் .

“மாப்பிள்ள வீட்ல வரதட்சனையே வேண்டம்னுட்டாங்கலாம்”

Read the rest of this entry »

Tags:

Page 2 of 3123