முன்னறிமுகமில்லாத தெருக்களே

தூண்டிலெனக் குத்தி இழுத்து

கண்களில் பாய்ச்சுகின்றன கவனத்தை

 

இறந்து போன

ஏதோ ஒரு இரவில்

இங்கு தானா வந்து போனது

 

அடைக்கப் பட்ட வாகனத்தில்

சென்றாலும்

கருப்பு பூசிய கண்ணாடியை

ஊடுருவிப் பார்க்கின்றன கண்கள்

 

உடன் வருபவன் பற்றிய

ப்ரக்ஞை ஏதுமின்றி

வளையும்  வரை

திரும்பியே இருக்கிறது

கழுத்தும் மனமும்

  

இங்குதானா

இரவைக் கடந்தது

அவள் கைப்பிடித்து

 

இத்தூங்குமூஞ்சி மரங்களா

அகாலத்தில் பூச்சொரிந்தது

என் முதல் முத்தம் பார்த்து

 

இந்த வீட்டின் படுக்கையறையிலா

தூங்கும் அவளைப் பார்த்துக் கொண்டே

புத்தகம் படிக்கக் கற்றுக் கொண்டது

 

நீலப் பூமரம்

சாலையிலோடும் மானும்

பால் சிந்தப் பார்க்கும் நிலவும்

அன்றைய மௌனத்தின் இசையும்

அதே சில்லிட்ட காற்றும்

அன்று போலவேயிருந்தும் 

காணவேயில்லை 

இந்தத் தெருவிலும் அவளை

 

விரும்பியோ பலவந்தமாயோ

பின்வரு நாட்களில்

இவைகளில் ஏதாவது நடக்கக் கூடுமென

இல்லாத

அவள் தெரு பற்றிய குறிப்புகளைச்

சேகரித்துக் கொண்டேயிருக்கிறது

ஏகாந்தத்தில் மனது .

Tags:

This entry was posted on Thursday, September 25th, 2008 at 7:04 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments so far

 1 

நன்று.. :)
//
காணவேயில்லை
இந்தத் தெருவிலும் அவளை
//
ரத்தினச்சுருக்கம்..

September 26th, 2008 at 11:36 am
அ.கவிக்குயில்
 2 

கடைசி ஒரு பத்தியை படிக்கும் நமக்கும் ஏக்கம் ஒட்டி கொள்கிறது.ஒரு தெருவின் வர்ணனையை ஒரே பத்தியில் சொல்லி இருப்பது அழகு.

September 26th, 2008 at 6:05 pm
Kalai
 3 

Innum un thaedal mudiyalaiyaa seeni??? ;)
Gud one..:)

October 7th, 2008 at 2:25 pm
Rejovasan
 4 

இல்லாத தெரு பற்றிய முடிவில்லாத தேடல் இது ..
அந்தத் தெருவில் தான் கொட்டிக் கிடக்கின்றன என் அத்தனைக் கவிதைகளும் .
கவிதைகளுக்காவது நான் அந்தத் தெருவைத் தேடித் தான் ஆகவேண்டும் கலை :-)

October 9th, 2008 at 3:52 pm
jayas
 5 

ரொம்ப நாள் கழிச்சு உன்னோட கவிதை படிக்கறேன் சீனி… :)
படிச்சு முடிச்ச பிறகும் இல்லாத தெருவுலேயே மனசு சுத்திட்டிருக்கு…..

November 13th, 2008 at 5:44 pm
Rejovasan
 6 

என்னைக்காவது ஒரு நாள் கண்டு பிடிச்சிட மாட்டோம் … ;-)

November 13th, 2008 at 6:50 pm
Revathi
 7 

இலலாத தெரு -கனவில் மட்டும் வரும் தெரு நு அர்த்தமா ?
முடிவில்லை என்று தெரிந்த பிறகும் தேடல் இருக்குமா ?
இப்படி
யோசிக்கும் போதே , என்ன விடடுட்டு , என்ன
யோசிக்கிறாய் நு கேட்குது

இந்த வரிகள்……….

//இங்குதானா
இரவைக் கடந்தது
அவள் கைப்பிடித்து

இந்த வீட்டின் படுக்கையறையிலா
தூங்கும் அவளைப் பார்த்துக் கொண்டே
புத்தகம் படிக்கக் கற்றுக் கொண்டது //

அழகான வரிகள் ………..

June 8th, 2009 at 10:51 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment