இருள் மேவிய
நேற்றைய நீள் இரவின்
கடிகாரம் காண முடியா
ஒரு தருணத்தில்
திறந்து வைத்த சாரளத்தின் வழி
தப்பியோடிக் கொண்டிருந்தன
என் கவிதைகள்
முதல் முடிவற்ற
தொடர்சியில்லா கனவின்
ஏதோ ஒரு பிரதேசத்தில்
கண்டு கொண்ட
குறிப்புகளற்ற காட்சியொன்றை
கவிதையாக்கச் சொல்லிவிட்டு
ஓடிப் போனதென் உறக்கம்
பரிச்சயமற்ற இருட்டைத்
துளாவித் துளாவி பார்த்துவிட்டு
மேலெங்கும் சிதறி நனைக்க நீரருந்தி
புறங்கையில் வியர்வை துடைத்து
ஓடிப்போன உறக்கத்தினை
மீட்டு வர ஆயத்தமாகையில் ..
தப்பியோடும் கவிதைகளின் வரிசையில்
கடைசியில் நின்று கொண்டது
பிறகு எழுதிக் கொள்ளலாம்
என நினைத்து மறந்து போன
என் சமீபத்திய கவிதையும் …
– நேற்றைய இரவில் ஜனிக்க மறந்து போன என் கவிதைக்கு
Tags: ஆதலினால் கவிதை ...
This entry was posted
on Wednesday, September 24th, 2008 at 6:58 pm and is filed under ஆதலினால் கவிதை.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
10 comments so far
Leave a reply