ஓடிவிட்ட பல மாதங்களுக்குப் பின்னே

இருளின் நிழல் படிந்த

நகரின் முக்கியமில்லாத

ஏதோ ஒரு தெருவில்

சாலையின் எதிர்ப்புறத்தில்

அவளைச் சந்திக்க நேர்ந்தது

அல்லது அது அவளையொத்த

அடையாளங்களாகவும் இருக்கலாம்

கரைந்துக் கொண்டிருக்கும்

அந்நிழலைப் பார்த்திருந்த

அந்தப் பத்து வினாடிகளில்

காலத்தின் கொடிய கூர்

பற்சக்கரங்கள் போதியமட்டு மென்னை

நசுக்கி முடித்திருந்தன

வலி தாங்க மாட்டாமல்

தலை குனிந்து மீண்ட சமயத்தில்

மறுபடியும் காணாமல் போயிருந்தாள்

விரும்பி ஏற்றுக்கொண்ட

வெறுமை அப்பிய என் முகம் பார்த்து

ஜன்னலோரப் பேருந்திலிருந்து

கை காட்டிச் சிரித்தபடிச் செல்கிறது

சீருடை யணிந்த ஒரு குழந்தை

பதிலுக்குக் கைகாட்டிப் புன்னகைக்கிறேன்

நானும்

என்றேனும் ஒரு நாள்

நகரத்தின் ஏதோ ஒரு பக்கத்தில்

மீண்டும் உன்னைச் சந்திக்க நேரும்

அந்தப் பத்து வினாடிகள் வரும் வரை

என் நினைவுகளை விட்டு விலகி

இருப்பாயாக

Tags:

This entry was posted on Friday, August 29th, 2008 at 1:20 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments so far

sathya
 1 

ரொம்ப நல்லா இருக்கு. கவிதைக்கு பொருத்தமான படம்
கவிதையின் படைபுக்கு நிச்சயம் ஓரு மறக்க முடியாத அனுபவம்
இருக்கும் ணு நம்பறேன். எது எப்படி இருந்தாலும் ஒரு நல்ல கவிதை
படிச்ச சந்தோஷம் :-)

August 29th, 2008 at 3:43 pm
Rejovasan
 2 

நன்றி hein :-)

August 29th, 2008 at 3:46 pm
ANAND R
 3 

Autograph படத்துக்கு முன்னாடி இதை நீ எழுதியிருந்தால், அந்தப் படத்துல நிச்சயமா இதுவும் ஒரு காட்சி ஆகியிருக்கும்…

December 18th, 2008 at 10:46 pm
Rejovasan
 4 

Autograph – part ii எடுக்க போறாங்களாம் ;-)

December 19th, 2008 at 9:01 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment